பணப் பிரச்சனை தீர குபேர வழிபாடு

kuberar enthiram
- Advertisement -

செல்வ வளத்தை வழங்கக் கூடிய அதிஅற்புதமான தெய்வம் யாரெனில் குபேரர் தான். இன்று பெருமளவு குபேரர் வழிபாடு அனைவராலும் செய்யப்படுகிறது. இதற்கு காரணம் இந்த வழிபாடு நம்முடைய செல்வ வளத்தை பெருக்கி தரும் என்பது தான். அப்படி செல்வ வளத்தை பெருக்கி தரக் கூடிய இந்த குபேர வழிபாட்டிற்கு பல வழிமுறைகள் உள்ளது.

பெரும்பாலான இந்த வழிபாடுகளை அனைவராலும் செய்ய முடியாது. ஆனால் பண தேவை அனைவருக்குமே இருக்கிறது. அதை கருத்தில் கொண்டு தான் எளிமையான முறையில் குபேர வழிபாடு எப்படி செய்வது என்பதை ஆன்மிகம் குறித்த இந்த பதிவில் இந்த வழிபாடு குறித்த தகவல் கொடுக்கப்பட்டுள்ளது. வாருங்கள் அது எப்படி என்று தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

பணவரவை அதிகரிக்க கூடிய குபேர வழிபாடு

இந்த வழிபாட்டை வியாழக்கிழமை அன்று மாலை 5 30 மணிக்கு மேல் 9 மணிக்குள்ளாக செய்துவிட வேண்டும் இது தான் குபேர வழிபாட்டிற்கு மிகவும் உகந்த நேரமாக கருதப்படுகிறது. இந்த வழிபாடு செய்வதற்கு முன்பாகவே உங்கள் வீட்டில் பூஜை அறையை சுத்தம் செய்து மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து நல்ல மணம் மிக்க மலர்களை போட்டு வையுங்கள்.

இந்த வழிபாட்டை நீங்கள் பூஜை அறையில் செய்யலாம் அல்லது உங்கள் வரவேற்பு அறையிலும் வைத்து செய்யலாம். இந்த வழிபாடு செய்வதற்கு குபேரர் எந்திரம் தேவை. அது இல்லாதவர்கள் குபேர எந்திரம் என்று நெட்டில் போட்டால் படங்கள் கிடைக்கும் அதை பார்த்து வரைந்து கொள்ளுங்கள். இந்த குபேரர் எந்திரத்தை வெறும் தரையில் வரையாமல் கொஞ்சம் பச்சரிசி போட்டு அதன் மேல் மஞ்சளால் குபேர எந்திரத்தை வரையுங்கள்.

- Advertisement -

அப்படி வரைய முடியாதவர்கள் வெள்ளை நிற சாட்டில் மஞ்சள் நிற பேனா கொண்டு வரைவது சிறப்பு வரைந்த இந்த குபேர எந்திரத்தை வைத்து அதன் இரண்டு பக்கத்தில் இரண்டு நெய் தீபம் ஏற்றுங்கள். அடுத்து இன்னொரு தீபத்தை பூஜை அறையில் ஏற்றி வைத்து விடுங்கள். இந்த தீபம் கிழக்கு அல்லது வடக்கு நோக்கி தெரிய வேண்டும்.

குபேரர் படம் இருந்தால் இந்த எந்திரத்தின் அதையும் வைக்கலாம். குபேரருக்கு நெய்வேத்தியமாக திரவ உணவுகளை வைக்க வேண்டும். அதாவது பால் பாயாசம் இப்படியான நெய்வேத்தியங்கள். இவையெல்லாம் வைத்த பிறகு குபேரரை மனதார வேண்டிக் கொண்டு இந்த மந்திரத்தை மூன்றே முறை சொல்லுங்கள் போதும்.

- Advertisement -

ஓம் யக்ஷராஜாய வித்மஹ
வைஸ்ரவணாய தீமஹி
தன்னோ குபேர ப்ரசோதயாத்

இந்த மந்திரத்தை சொல்லும்போது குபேர எந்திரத்தின் மீது நல்ல வாசனை மலர்களை அதிகமாகவே வைத்து வழிபடுங்கள். அதன் பிறகு கற்பூர தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். குபேர எந்திரம் சாட்டில் வரைந்திருந்தால் அதை எடுத்து பீரோவிலோ, பூஜை அறையிலோ வைத்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: யோகம் அதிகரிக்க பரிகாரம்

எந்திரமாக இருந்தாலும் அதற்கும் இதே முறைதான். ஒருவேளை நீங்கள் தரையில் வரைந்திருந்தால் அதை கைகளால் அப்புறப்படுத்தி கால் படாத இடத்தில் போட்டு விடுங்கள். இந்த வழிபாடு மிக மிக எளிய வழிபாடு தான் ஆனால் இதன் பலன் அபரிதமாக இருக்கும் என்று சொல்லப்படுகிறது நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த குபேர வழிபாட்டினை செய்து பலன் அடையலாம்.

- Advertisement -