இந்த ஜென்மத்தில் சொந்த வீடு வாங்கவே முடியாது என்பவர்கள் கூட, இதை எழுதினால், சொர்க்கத்துக்கு நிகரான சொந்த வீடு கட்டலாம்.

house
- Advertisement -

சொர்க்கம் என்றால் அது சொந்த வீட்டில் வாழ்வதுதான். சிறிய கூரை வீடாக இருந்தாலும், சொந்த வீட்டில் வாழ்ந்தால் அதில் இருக்கும் சுகமே தனி. ஒவ்வொறு பொருளும் நம்முடையது, நம் இஷ்டம் போல வாழலாம் என்ற அந்த சுதந்திரம் மன நிறைவோடு வாழ்வோம். பங்களா போல வாடகை வீட்டில் இருந்தாலும், குழந்தைகள் வீட்டில் இதை செய்யக்கூடாது. அதை செய்யக்கூடாது, ஓடி ஆடி விளையாடக் கூடாது, என்று பல கட்டுப்பாடுகள். ஹவுஸ் ஓனர் என்ன சொல்லி விடுவார்களோ என்ற பயம் மனதிற்குள் இருந்து கொண்டே இருக்கும். மாதம் வாடகை கொடுத்தும் சுதந்திரம் இல்லாத வாழ்வு தான் வாடகை வீடு. ஆக சொர்க்கத்திற்கு நிகராக சொல்லப்படும் இந்த சொந்த வீடு பெறுவதற்கு என்ன செய்வது. முதல் விஷயம், விடாமுயற்சியுடன் பணம் சம்பாதித்து நிலம் வாங்கி வீடு கட்ட வேண்டும். இல்லையென்றால் கட்டிய வீட்டை சொந்தமாக வாங்க வேண்டும்.

வீடு வாங்க நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு தடை வராமல் இருக்க ஆன்மீகம் தாந்திரீக ரீதியாக சில பரிகாரங்களை செய்யலாம். அதில் ஒரு பரிகாரமாக இன்று ஒரு எளிமையான பரிகாரத்தை பார்க்க போகின்றோம். சொந்த வீடு வாங்க சுக்கிரனின் ஆசிர்வாதம் கிடைக்க வேண்டும். செவ்வாய் பகவானின் ஆசீர்வாதமும் கிடைக்க வேண்டும். செவ்வாய் பூமி காரகன். சுக்கிரன் நினைத்தால் தான் சுகபோக வாழ்க்கை கிடைக்கும். ஆக இந்த இரண்டு கிரகங்களின் ஆசீர்வாதத்தை பெற எண் வடிவில் ஒரு தாந்திரீக பரிகாரம் இதோ உங்களுக்காக.

- Advertisement -

சொர்க்கம் போல சொந்த வீடு கட்ட தாந்திரீக பரிகாரம்:
செவ்வாய்க்கிழமை காலை 6 மணியிலிருந்து 7 மணிக்குள் இந்த தாந்திரீக பரிகாரத்தை செய்ய தொடங்க வேண்டும். இந்த பரிகாரத்தை செய்வதற்காக கோடு போடாத நோட்டுப் புத்தகம் ஒன்று வாங்கிக் கொள்ளுங்கள். அதில் ‘369 321 எப்படியாவது சொந்த முயற்சியில், சொந்த வீடு வாங்கி விட வேண்டும்’ என்று நீல நிற பேனாவில் 11 முறை எழுத வேண்டும். இதை தொடங்கக்கூடிய நாள் தான் செவ்வாய்க்கிழமை. தினமும் காலை 6 மணியிலிருந்து 7 மணிக்கு இந்த வரியை 11 முறை நோட்டு புத்தகத்தில் எழுதுங்கள்.

தினமும் இந்த வரியையும், இந்த எண்ணையும் எழுதி வந்தால் நிச்சயமாக உங்களுக்கு சொந்த வீடு வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும். இந்த வரிகளை மட்டும் எழுதிவிட்டு சும்மாவே இருக்கலாமா. நிச்சயம் கூடாது. சொந்த வீடு வாங்குவதற்கு என்ன முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமோ அதை நீங்கள் செய்யுங்கள். அதற்கு உண்டான தடைகளை தகர்க்க கூடிய வேலையை இந்த தாந்திரீக பரிகாரம் பார்த்துக் கொள்ளும்.

- Advertisement -

இதை நீங்கள் எழுதுகிறீர்கள் என்று வெளி ஆட்களுக்கு தெரியக்கூடாது. இதை எழுதும்போது எந்த தொந்தரவும் இருக்கக்கூடாது. அமைதியான ஒரு இடத்தில், ஒரு தவம் போல இதை எழுத வேண்டும். போன போக்கில் எழுதுவதால் எந்த பிரயோஜனமும் கிடையாது. நம்பிக்கை இல்லாமல் எழுதினாலும் எந்த பயனும் கிடையாது. ஆத்மார்த்தமாக சந்தோஷமாக சொந்த வீடு வாங்கியே ஆக வேண்டும் என்ற எண்ணத்தோடு இதை எழுதுபவர்களுக்கு நிச்சயமாக வெற்றி கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: காசிக்குப் போக முடியாதவர்கள், இந்த கோவிலுக்கு சென்று, இந்த தீர்த்தத்தில் குளித்தாலே போதும். நீங்கள் செய்த பாவங்கள் எல்லாம் நீங்கும். காசிக்கு நிகராக சொல்லப்படும் அந்த கோவில் எது?

ஆண் பெண் யார் வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம். பெண்கள் மாதவிடாய் காலத்தில் கூட இந்த பரிகாரத்தை செய்யலாம் தவறு கிடையாது. ஒரு நாள் கூட விடாமல் தினமும் எழுதி வாருங்கள். நிச்சயம் நம்ப முடியாத ஒரு நல்ல மாற்றம் உங்கள் வாழ்க்கையில் வரும் என்ற தகவலோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -