சொந்தமாக வீடு நிலம் வாங்க செய்ய வேண்டிய வழிபாடு

new house valipadu
- Advertisement -

எலி வலையானாலும் தனி வலையே சிறந்தது என்று கூறும் பழமொழியை நாம் கேள்விப்பட்டிருக்கிறோம். எவ்வளவு பெரிய ஆளாக இருந்தாலும் சிறிய ஆளாக இருந்தாலும் தனக்கு என்று சொந்தமாக ஒரு வீடு இருந்தால் தான் நிம்மதியாக இருக்க முடியும். இதை வாடக வீட்டில் இருக்கும் பல பேரும் பல தருணங்களில் உணர்ந்து இருப்பார்கள். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் சொந்த வீடு கட்டவும் இடம் வாங்கவும் செய்யக்கூடிய எளிய வழிபாட்டு முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக இடம், நிலம், சொத்து, வீடு, மனை, வாசல் என்று எதை நாம் புதிதாக வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் நமக்கு செவ்வாய் பகவானின் அருள் பரிபூரணமாக இருந்தால் தான் வாங்க முடியும். அப்படிப்பட்ட செவ்வாய் பகவானின் அருளை பெறுவதற்கு உதவக்கூடிய ஒரு எளிய வழிப்பாட்டு முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

வீடு நிலம் வாங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் முருகப்பெருமானை வழிபாடு செய்வார்கள். அதுவும் செவ்வாய்க்கிழமை அன்று செவ்வாய் ஹோரையில் முருகப்பெருமானை வழிபடுவதன் மூலம் சொத்து வாங்கும் யோகம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இதற்கு காரணம் செவ்வாய் பகவானின் அதி தேவதை முருகப்பெருமான் என்பதுதான். நாம் இப்பொழுது இந்த பதிவில் செவ்வாய் பகவானை வழிபடும் முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

செவ்வாய் கிழமை அன்று காலை 7:00 மணியிலிருந்து 8:00 மணிக்குள் அல்லது 2 மணியிலிருந்து 3:00 மணிக்குள் அருகில் இருக்கும் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். அங்கு நவகிரகங்களில் வீற்றிருக்கும் செவ்வாய் பகவானுக்கு இரண்டு நீதிபங்கங்களை ஏற்ற வேண்டும். சிவப்பு நிற மலர்களை மாலையாக தொடுத்து செவ்வாய் பகவானுக்கு அணிவிக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக எலுமிச்சை சாதம் அல்லது தயிர் சாதம் இவை இரண்டில் ஏதாவது ஒன்றை வீட்டில் இருந்தே செய்து எடுத்துக்கொண்டு போய் செவ்வாய் பகவானுக்கு நெய்வேத்தியம் செய்து விட்டு அங்கு வரக்கூடிய பக்தர்களுக்கு அதை தானமாக வழங்க வேண்டும். இவ்வாறு தொடர்ந்து செவ்வாய்க்கிழமை தோறும் செவ்வாய் பகவானை வழிபட்டு தங்களால் இயன்ற பிரசாதத்தை வழங்க வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் நம்முடைய ஜாதகத்தில் இருக்கக்கூடிய செவ்வாய் தோஷம் நீங்கி வீடு, மனை, சொத்து, சுகம் வாங்கும் யோகம் நமக்கு கிடைக்கும். இந்த வழிபாட்டை மேற்கொள்ளும் பொழுது நாம் மறவாமல் முருகப் பெருமானுக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து அவருக்கும் செவ்வரளி மாலை சாற்றி வழிபட்டு வர இந்த பலன் நமக்கு விரைவிலேயே கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: நோய்கள் தீர வாராஹி அம்மன் வழிபாடு

இந்த எளிமையான வழிபாட்டு முறையை நம்பிக்கையுடன் தொடர்ந்து பின்பற்றி செவ்வாய் பகவானின் அருளையும் முருகப்பெருமானின் அருளையும் பரிபூரணமாக பெற்று சொந்த வீட்டில் குடியேறும் யோகத்தை பெறலாம்.

- Advertisement -