சொந்த வீடு வாங்க கார்த்திகை தீப வழிபாடு

murugan7
- Advertisement -

சொந்த வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை நாம் எல்லோருக்கும் இருக்கிறது. சொந்த வீடு வாங்க வேண்டும் என்றால் நமக்கு செவ்வாய் பகவானின் அனுக்கிரகம் கிடைக்க வேண்டும். செவ்வாய் பகவானின் அனுகிரகத்தைப் பெற, முருகப்பெருமானை வழிபாடு செய்ய வேண்டும். முருகப்பெருமானுக்கு உரிய நட்சத்திரம் கிருத்திகை.

அதிலும் இந்த கார்த்திகை மாதத்தில் வந்திருக்கக் கூடிய, கார்த்திகை தீபத்தன்று வந்திருக்கக் கூடிய, கிருத்திகை நட்சத்திரத்தன்று முருகப்பெருமானை வேண்டி பூஜை அறையில் இந்த விளக்கை ஏற்றி வைத்து உங்கள் வேண்டுதலை ஆத்மார்த்தமாக செய்து பாருங்கள். உங்களுக்கு சொந்த வீடு கிடைப்பது உறுதி. அது மட்டுமில்லாமல் நிலம் சம்பந்தமாக ஏதாவது பிரச்சனைகள் இருந்தாலும் அது சரியாகும். புதுசாக நிலம் வாங்கக்கூடிய யோகம் கிடைக்கும்.

- Advertisement -

வாங்கிய நிலத்தில் வீடு கட்டக்கூடிய யோகம் இருக்கும். பாதியிலேயே வீடு கட்டி நின்றிருந்தால் அதை மீண்டும் கட்டக் கூடிய வாய்ப்புகளை அந்த முருகப்பெருமான் உங்களுக்கு காண்பித்துக் கொடுப்பான். கையில் எனக்கு காசே இல்லை. ஆனால், சொந்த வீட்டில் அமர வேண்டும் என்ற ஆசை இருந்தாலும், இந்த வழிபாட்டை செய்யலாம். உங்கள் வருமானத்தை பெருக்கி சொந்த வீடு கட்ட தேவையான வழியை அந்த முருகப்பெருமான் காண்பித்துக் கொடுப்பான்.

சொந்த வீடு வாங்க கார்த்திகை தீபத்தன்று விளக்கு ஏற்றும் முறை

இந்த வழிபாட்டு முறைக்கும் நமக்கு 6 மண் அகல் விளக்குகள் புதுசாக தேவை. கிழிசல் இல்லாத 6 வெற்றிலைகள் தேவை. பூஜை அறையில் வரிசையாக ஒரு வெற்றிலைக்கு பக்கத்தில் ஒரு வெற்றிலையை வையுங்கள். காம்பு பகுதி மேலே பார்த்தவாறு இருக்க வேண்டும். அதாவது எல்லார் வீட்டிலும் கூடுமானவரை பூஜையறையானது கிழக்கு நோக்கி தான் இருக்கும் அல்லவா. காம்பு பகுதியை மேற்கு பார்த்தவாறு வைத்து விடுங்கள்.

- Advertisement -

இப்படி அடுக்கிய வெற்றிலைக்கு சந்தன குங்குமம் பொட்டு வையுங்க. இந்த வெற்றிலைக்கு மேலே சந்தன குங்குமம் போட்டு வைத்து, அகல் விளக்குகள் ஒவ்வொன்றாக அடுக்கி, அதில் சுத்தமான நெய் ஊற்றி, பஞ்சு திரி போட்டு, விளக்கு ஏற்றி வைக்க வேண்டும். இந்த விளக்குக்கு ஒவ்வொரு பூ வச்சிருங்க.

ஆறு வெற்றிலைகளில் ஒவ்வொரு விளக்காக ஏற்றப் போகின்றோம் மொத்தமாக ஆறுமுகனுக்கு ஆறு தீபங்கள். அவ்வளவுதான். முதலில் பிள்ளையாரை நினைத்து, பிறகு குலதெய்வத்தின் பெயரை சொல்லுங்கள். அப்புறம் முருகனை நினைத்து விளக்கு ஏற்றினார். முருகப்பெருமானை மனதார நினைத்து எங்களுக்கு சொந்த வீடு வாங்கும் யோகம் வேண்டும், வரம் வேண்டும் என்று மனம் உருகி வேண்டிக்கோங்க. இந்த வெற்றிலை தீபம் உங்களுக்கு நிச்சயம் வெற்றியை கொடுக்கும்.

- Advertisement -

வீடு வேண்டும் என்பதற்காக கிருத்திகை நட்சத்திம் அன்று முருகப்பெருமான் ரொம்ப ரொம்ப மனசு சந்தோஷத்தோடு இருப்பார். இப்படி நீங்கள் அவரை நினைத்து வீட்டில் விளக்கு ஏற்றி வழிபாடு செய்தால், உங்களுக்கான வரங்களை அவர் சீக்கிரம் கொடுப்பார். பெரியவர்கள் எல்லா வழிபாட்டு முறைகளையும் சும்மா சொல்லி வைக்கவில்லை.

இதையும் படிக்கலாமே: கார்த்திகை தீபத்தன்று செய்யக்கூடாத 3 தவறுகள்

நம்பிக்கையோடு இந்த வழிபாடு முறைகளை பின்பற்றி வெற்றி பெற்றவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள். நீங்களும் இந்த வருடம் மன உறுதியோடு நான் நிச்சயம் சொந்த வீடு வாங்குவேன் என்று இந்த வழிபாட்டை செய்து பாருங்கள். அடுத்த வருடத்திற்குள் நிச்சயம் முருகப்பெருமான் உங்களுக்கு நல்ல வழியை காண்பித்துக் கொண்டுப்பார் என்ற நல்ல தகவலோடு இன்றைய ஆன்மீகம் சார்ந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -