சொந்த வீட்டில் குடியேற அம்மன் வழிபாடு

vadivudai amman new home
- Advertisement -

சொந்த வீட்டில் வாழ வேண்டும் என்பது பலருடைய கனவு என்பதை விட லட்சியமாகவே இருக்கிறது. ஏனெனில் வாடகை வீட்டில் வாழ்வது அத்தனை சிரமமான காரியம். வாடகை வீட்டில் வாழும் ஒவ்வொரு வரை கேட்டால் அவர்களுடைய வேதனைகளை கதை கதையாக சொல்லுவார்கள்.

இதனாலேயே பலரும் ஒரு நாள் வாழ்ந்தாலும் சொந்த வீட்டில் நிம்மதியாக வாழ வேண்டும் என்று கனவுடன் வாழ்கிறார்கள். பலர் அதற்காக பெரும் முயற்சியும் எடுப்பார்கள் இருந்தாலும் அதற்கான பலன் வாழ்கிறார்கள் பலர் அதற்காக பெரும் முயற்சியும் எடுப்பார்கள் இருந்தாலும் அதற்கான பலன் கிடைக்காது.

- Advertisement -

இன்னும் சிலருக்கு கையில் பணம் இருக்கும் நிலம் வாங்கி வைத்திருப்பார்கள் ஆனாலும் அதில் சொந்தமாக வீடு கட்ட முடியாது. இப்படியான அனைவருமே சொந்த வீட்டில் வாழக்கூடிய அருளை தரக்கூடிய ஒரு அம்மன் வழிபாட்டை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

சொந்த வீடு வாங்க வழிபாடு

இந்த வழிபாட்டை நாம் ஆலயத்தில் சென்று தான் செய்ய வேண்டும் இதற்கு சென்னையில் உள்ள திருவொற்றியூர் வடிவுடையம்மன் ஆலயத்திற்கு செல்ல வேண்டும். இந்த அம்மனை சித்தர பௌர்ணமி தினத்தில் தரிசிப்பது விசேஷமாக கருதப்படுகிறது. இந்த வடிவுடையம்மன் இந்த அம்மனை எப்படி வழிபாடு செய்து நம்முடைய சொந்த வீட்டு கனவை நினைவாக்கிக் கொள்ளலாம் என்பதை இப்போது பார்க்கலாம்.

- Advertisement -

இந்த ஆலயத்தில் வெள்ளிக்கிழமை தோறும் மாலை வேளையில் அம்மனுக்கு அபிஷேகங்கள் நடைபெறும் அந்த அபிஷேகத்தை நாம் செய்ய வேண்டும் என்று சொல்லப்படுகிறது. ஒரு வேளை உங்களுக்கு அபிஷேகம் செய்ய வசதி இல்லாத பட்சத்தில் அபிஷேகத்திற்கான ஏதேனும் ஒரு பொருள் வாங்கி கொடுங்கள்.

இது எதுவுமே செய்ய முடியாதவர்கள் கூட அபிஷேக நேரத்தில் ஆலயத்தில் இருந்து அம்மனை தரிசனம் செய்யுங்கள் அதுவே பெரிய பாக்கியம். இப்படி அன்னையை வணங்கும் வேலையில் என்னுடைய சொந்த வீடு கனவு நினைவானால் பட்டுப்புடவை வாங்கி சாற்றுவதாக வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இது போல மூன்று அல்லது ஐந்து வாரங்கள் தொடர்ந்து அபிஷேக நேரத்தில் அன்னையை வணங்கினால் உங்களின் சொந்த வீடு கனவு நிச்சயம் நிறைவேறும் என்று சொல்லப்படுகிறது. உங்கள் கனவு நினைவாகி சொந்த வீட்டில் குடியேறியவுடன் அன்னைக்கு நீங்கள் வேண்டியது போல பட்டுப்புடவை வாங்கி சாற்றி அப்போது நீங்கள் அபிஷேகம் செய்து அன்னையை வழிபாடு செய்யுங்கள்.

உங்கள் வாழ்க்கை இன்னும் மேலும் மேலும் உயர்ந்து கொண்டே செல்லும் என்று சொல்லப்படுகிறது. சொந்த வீடு வாங்க அன்னையும் வழிபட்டால் போதுமா என்றால் உங்களின் முயற்சி உழைப்புடன் சேர்ந்து நம்பிக்கையான இந்த வேண்டுதல் நிச்சயம் பலன் தரும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: சகலத்தையும் தரும் சங்கு வழிபாடு

எந்த ஒரு விஷயத்தையும் நம்பிக்கையுடன் நாம் சிந்தையில் நிறுத்தி அதையே கருத்துடன் செய்யும் பொழுது நிச்சயம் அது பலிக்கும் இந்த நம்பிக்கையுடன் நீங்களும் வழிபாடு செய்யுங்கள் நல்ல பலன் கிடைக்கும்.

- Advertisement -