சொந்த வீடு கட்ட, நிலம் வாங்க செவ்வாய் கிழமையில் இவருக்கு மட்டும் இப்படி வெற்றிலை தீபம் ஏற்றினால் போதுமே!

murugan-vilakku-sengal
- Advertisement -

இந்த பிரபஞ்சத்தில் ஒவ்வொரு வேண்டுதலுக்கும் உரிய பரிகாரங்கள் உண்டு. உங்கள் வேண்டுதலுக்கு உரிய பரிகாரத்தை செய்யும் பொழுது நிச்சயம் அது தடை இல்லாமல் வெற்றி பெறும். அந்த வகையில் வீடு கட்ட வேண்டும் என்கிற உங்களுடைய நீண்ட நாள் ஆசையை நிறைவேற்ற கூடிய அற்புதமான எளிய பரிகாரம் என்ன தெரியுமா? எல்லோருக்குமே வீடு கட்ட வேண்டும் என்கிற ஆசை இருக்கும். சிலருக்கு அது கனவாகவே இருக்கும். அந்த நிறைவேறாத கனவை நிறைவேற்ற கூடிய அற்புத ஆற்றல் முருகப்பெருமானுக்கு உண்டு. சண்முகவேலனை இப்படி வணங்கி பாருங்கள்! விரைவாகவே சொந்த வீடு, நிலம் போன்றவற்றை வாங்கி விடுவீர்கள். அதற்கு நாம் என்ன செய்யலாம்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து இந்த பதிவை நோக்கி பயணிப்போம்.

home

வாடகை வீட்டில் காலம் காலமாக வாடகை கட்டியே நொந்து போன பலருக்கும் தனக்கென சொந்த வீடு அமையாதா? என்கிற ஏக்கம் இருக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை இல்லையே! என்று ஏக்கம் இருக்கும். திருமணமாகாதவர்களுக்கு இன்னும் நமக்கு மட்டும் திருமணம் ஆகவில்லையே! என்கிற ஏக்கம் இருக்கும். இப்படி ஒவ்வொருவரும் தங்களுடைய வாழ்க்கையில் ஒவ்வொரு விதமான ஏக்கத்துடன் தான் வாழ்ந்து கொண்டிருப்பார்கள்.

- Advertisement -

எவ்வளவோ பரிகாரங்களை செய்து பார்க்கிறோம் ஆனால் பலன் மட்டும் கிடைக்கவில்லையே! என்று நொந்து போனவர்களுக்கு கூற விரும்புவது ஒன்று தான். எந்த பரிகாரத்தை யாருக்கு செய்கிறோம்? என்பது மிகவும் முக்கியம். மனதார மனதை ஒருமுகப்படுத்தி நாம் எந்தக் கடவுளிடம் எதை வேண்டினாலும் நமக்கு நிச்சயம் அது கிடைக்கும். ஆனால் குறிப்பிட்ட பரிகாரம் செய்து அதற்குரிய வேண்டுதலை நாம் வைக்கும் பொழுது அது விரைவாக நிறைவேறும் என்பது தான் வித்தியாசம். எந்த ஒரு பரிகாரத்தையும் முழுமனதுடன், நம்பிக்கையுடன், பக்தி சிரத்தையுடன் செய்தால் தான் அதற்குரிய பலனையும் விரைவாக பெற முடியும்.

built-home

வீடு கட்ட வேண்டும் என்பது ஒரு சிலருக்கு ஆசையாக இருக்கலாம் ஆனால் பலருக்கு அது தவமாக இருக்கும். தவம் பூண்டு நீங்கள் வீடு கட்ட வேண்டும், நிலம் வாங்க வேண்டும் என்கிற வைராக்கியத்துடன் இருந்தால் செவ்வாய்க்கிழமை தோறும் முருகனுக்கு இப்படி வெற்றிலையில் தீபம் ஏற்றி வாருங்கள்! நிச்சயம் அதற்குரிய பலனை நீங்கள் அனுபவிப்பீர்கள். வீடு கட்ட நினைத்தால் மட்டும் போதாது, அதற்குரிய ஏற்பாடுகளையும் செய்து கொண்டே வர வேண்டும். அப்படி செய்து வருபவர்கள் செவ்வாய்க்கிழமை தோறும் வீடு முழுவதையும் சுத்தம் செய்து, பூஜை அறையில் முருகப் பெருமானுக்கு ஒரு மனையை அமைத்து அதில் மஞ்சள் தெளித்து, கோலமிட்டு கொள்ளுங்கள். அதில் முருகப் பெருமான் அல்லது சிலை வைத்து அலங்காரம் செய்து கொள்ளுங்கள்.

- Advertisement -

சஷ்டி திதியில் முதன் முதலாக உங்கள் செலவில் ஒரு செங்கல்லை மட்டும் வாங்கி வந்து வீட்டில் வையுங்கள். இந்த பூஜையின் பொழுது மஞ்சள், குங்குமம் இட்டு முருகனுக்கு அருகில் அந்த செங்கல்லை வைத்துக் கொள்ளுங்கள். பின்னர் ஆறு விளக்குகளில் நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி புது திரி போட்டு கொள்ளுங்கள். ஒவ்வொரு விளக்கையும் ஒவ்வொரு வெற்றிலையில் வைக்க வேண்டும். பரிகாரத்திற்கு பயன்படுத்தும் வெற்றிலை நுனி மற்றும் காம்பு உடைந்து இருக்கக் கூடாது.

murugan-vilakku

கந்த சஷ்டி கவசம், முருகன் ஸ்தோத்திரங்கள், சண்முக கவசம் போன்ற முருகனுடைய அருளைப் பெறுவதற்கு உரிய ஸ்லோகங்களை வாசிக்க வேண்டும். பின்னர் தீபத்தை ஏற்றி, தூப, தீப ஆரத்தி காண்பிக்க வேண்டும். நிவேதனத்திற்கு சர்க்கரைப் பொங்கல், பாயாசம், வடை, சுண்டல் அல்லது தனக்கு விருப்பமுள்ள எந்த பிரசாதத்தையும் செய்து வைக்கலாம். உங்கள் வேண்டுதல் நிறைவேறும் பொழுது நீங்கள் வீட்டில் வைத்திருக்கும் இந்த செங்கல்லை கொண்டு முதன் முதலில் அஸ்திவாரம் அமைக்கப் பயன்படுத்திக் கொள்ளுங்கள். முருகனை நினைத்து ஒவ்வொரு செவ்வாய் தோறும் இப்படி முருக வழிபாடு செய்து வர நிச்சயம் உங்களுக்கும் சொந்த வீடு அமையும்.

- Advertisement -