ரொம்ப நாள் வீடு கட்ட முடியாத நிலத்தில் வீடு கட்ட, இந்த 1 பொருளை கொண்டு போய் நிலத்தில் தூவி விடுங்கள். வீடு கட்ட விடாமல் கஷ்டப்படுத்திய அத்தனை தடையும் உடையும்.

sondha veedu
- Advertisement -

எப்படியோ கஷ்டப்பட்டு ஒரு நிலத்தை வாங்கி இருப்போம். அதில் வீடு கட்டுவதற்கு எவ்வளவோ முயன்றிருப்போம். வீடு கட்ட லோன் கிடைத்திருக்காது. லோன் கிடைத்திருந்தாலும் வீடு கட்ட பூமி பூஜை போட நேரமே வராது. சொந்த வீடு கட்டுவதை தடுத்து நிறுத்த அத்தனை தடைகள் வந்து கொண்டே இருக்கும். இப்படிப்பட்ட தடைகளை உடைத்தெறிய ஒரு சுலபமான பரிகாரம் உள்ளது. இந்த பரிகாரத்தை நீங்கள் செய்து விட்டால் நீங்கள் வீடு கட்டுவது 100% உறுதி ஆகிவிடும். ஆனால் கட்டாயம் பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை முழு நம்பிக்கையோடு எந்த மாறுதலும் இல்லாமல் நீங்கள் செய்ய வேண்டும்.

இந்த பரிகாரத்திற்கு நமக்கு பழமையான சிவன் கோவில் தேவை. உங்கள் வீட்டின் அருகில் பழமையான சிவன் கோவில் இருந்தால் அதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள். கிராமப்புறங்களில் நிறைய சிவன் கோவில்கள் உள்ளது. சிவன் கோவில் இல்லை என்று வருத்தமே படாதீங்க. உங்க பக்கத்து ஊரில் இப்படி கோவில் இருந்தாலும் அந்த இடத்தில் போய் பரிகாரத்தை செய்து கொள்ளலாம்.

- Advertisement -

உங்களுடைய நிலத்தின் அளவைப் பொறுத்து நவதானியம் வாங்கிக் கொள்ளுங்கள். ஐந்து கிலோ, மூன்று கிலோ, 10 கிலோ கூட வாங்கிக் கொள்ளலாம். அது உங்களுடைய விருப்பம். வாங்கி இந்த நவதானியத்தை கொண்டு போய் சிவன் கோவில் குருக்களிடம் கொடுக்க வேண்டும். சிவனுக்கு அபிஷேகம் செய்யும்போது சிவனின் மேல் இந்த நவதானியத்தை போட்டு அபிஷேகம் செய்து சிவனின் மேல் பட்ட அந்த நவதானியங்களை அப்படியே அள்ளி ஒரு பையில் போட்டு கொண்டு வர வேண்டும்.

இதைக் கொண்டு போய் உங்களுடைய நிலத்தில் அப்படியே தூவி விட்டு விடுங்கள். அவ்வளவு தான். அந்த நிலத்தில் இருக்கும் துஷ்ட சக்திகள் அனைத்தும் அழிந்து போய்விடும். ஒரு சில நாட்களில் நீங்கள் தூவிய அந்த நவதானியம் முளைக்க ஆரம்பிக்கும். ஒரு வேலை ஒரு நவதானியம் கூட அந்த நிலத்தில் முளைக்கவில்லை என்றால், நிச்சயமாக அந்த நிலத்தில் ஏதோ கண்ணுக்கு தெரியாத துர்சக்திகளின் பிரச்சனை இருக்குது என்று அர்த்தம்.

- Advertisement -

மூன்று மாதங்கள் கழித்து மீண்டும் சிவன் கோயிலுக்கு இப்படி நவதானியத்தை வாங்கி கொடுத்து அபிஷேகம் செய்து இரண்டாவது முறை அந்த நவதானியத்தை உங்கள் நிலத்தில் தூவி விட்டால் நிச்சயமாக அந்த நவதானியம் முளைத்து வரும். இது ஒரு நம்பிக்கை. நம்பிக்கையோடு நீங்கள் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். சிவன் கோவில் குருக்களிடம் உங்களுடைய பிரச்சனையை சொல்லி நவதானியத்தை வாங்கிக் கொடுத்தால், அவர் நிச்சயம் அதை சிவனுக்கு அபிஷேகம் செய்து எடுத்து உங்களுக்கு கொடுப்பார்.

நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். உங்களுடைய வீடு கட்ட வேண்டும் என்ற கனவு நிச்சயம் நிறைவேறும். இதோடு விட்டுவிடாமல் தினமும் சிவன் கோவிலுக்கு சென்று வீடு கட்ட வேண்டும் என்ற கோரிக்கையை எம்பெருமானிடம் வையுங்கள். ஓம் நமசிவாய மந்திரத்தை சொல்லிக் கொண்டே இருங்கள். தடைகள் அனைத்தும் விலகி வாழ்வில் வளம் பெறுவீர்கள் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -