வாஸ்து பரிகாரம்

vastu pariharam in tamil
- Advertisement -

வாஸ்து சாஸ்திரம் என்பது நாம் வாழ்கின்ற வீடு மற்றும் நாம் தொழில் செய்கின்ற இடங்களை நமக்கு அதிர்ஷ்டங்களை அள்ளித்தரக்கூடிய வகையில் மாற்றி அமைத்துக் கொள்ள உதவக்கூடிய ஒரு பழங்கால சாஸ்திரமாகும். என்னதான் வாஸ்து சாஸ்திரப்படி வீட்டை கட்டினாலும் அதில் அதில் சில வாஸ்து தோஷ குறைபாடுகள் ஏற்படவே செய்கின்றது. அத்தகைய வாஸ்து குறைபாடுகள் என்னென்ன என்பது குறித்தும் அவற்றுக்கான வாஸ்து பரிகாரங்கள் ( Vastu pariharam in Tamil ) என்ன என்பது குறித்தும் இங்கு நாம் விரிவாக தெரிந்து கொள்ளலாம்.

வாஸ்து தோஷம் பரிகாரம்

பொதுவாக அனைவரின் வீட்டிலுமே முகம் பார்க்கும் கண்ணாடி இருக்கும். சில அறைகளில் மிகப்பெரிய அளவிலும், சில அறைகளில் மிகச் சிறிய அளவிலும் முகம் பார்க்கும் கண்ணாடியை வைத்திருப்பார்கள். இத்தகைய கண்ணாடிகளை வீட்டில் வைக்கும் பொழுது சரியான திசையில் வைக்க வேண்டும். பொதுவாக எந்த ஒரு அறையிலும் தெற்கு மற்றும் மேற்கு திசைகளை பார்த்தவாறு முகம் பார்க்கும் கண்ணாடிகளை மாட்டி வைக்க வேண்டும். விரிசல் விழுந்த கண்ணாடிகள் உடைந்த கண்ணாடிகள் போன்றவற்றை உடனுக்குடன் அகற்ற வேண்டும்.

- Advertisement -

இந்த கண்ணாடிகளை வாரத்திற்கு ஒரு முறை சுத்தமாக துடைக்க வேண்டும். இரண்டு கண்ணாடிகள் வைப்பவர்கள் ஒரு கண்ணாடி மற்றொரு கண்ணாடியில் பிரதிபலிக்காமல் இருக்கும் வகையில் மாட்டி வைக்க வேண்டும். பொதுவாக தரையில் இருந்து 4 அல்லது 5 அடி உயரத்திலேயே முகம் பார்க்கும் கண்ணாடிகளை மாட்டி வைக்க வேண்டும். தற்காலத்தில் பலரும் நாகரிகம் என்கிற பெயரில் வட்ட வடிவு கண்ணாடிகள், ஓவல் வடிவ கண்ணாடிகளை வாங்குகின்றனர். இத்தகைய கண்ணாடிகளை வீட்டில் மாட்டி வைப்பதை தவிர்க்க வேண்டும். செவ்வகம் அல்லது சதுரம் ஆகிய இரண்டு வடிவங்களில் இருக்கின்ற கண்ணாடிகளை வீட்டில் மாட்டினால் மட்டுமே மங்களகரமான பலன்கள் ஏற்படும் என வாஸ்து சாஸ்திரம் கூறுகின்றது.

வீட்டிற்குள் தெய்வீக அதிர்வலைகள் பெருகி, அதன் மூலம் வீட்டில் இருப்பவர்களுக்கு நன்மைகள் கிடைக்க சிறிய அளவில் இருக்கின்ற கிரிஸ்டல் எனப்படும் படிகக் கற்களை கொண்டு செய்யப்பட்ட படிக உருண்டைகளை வீட்டில் ஆங்காங்கே ஒரு கண்ணாடி கிண்ணத்தில் போட்டு வைப்பது நல்லது. வீட்டில் அதிர்ஷ்டம் பெருக நினைப்பவர்கள் ஆரஞ்சு நிற கிறிஸ்டல் கல் பந்துகளையும், பிறருடனான நல்ல உறவுகள் மேம்பட இளஞ்சிவப்பு நிற படிக கல் பந்துகளையும், வீட்டின் தன – தானிய சேர்மானம் அதிகரிக்க ஆரஞ்சு நிற கிறிஸ்டல் கல் பந்தயம் வைக்க வேண்டும்.

- Advertisement -

வீட்டில் எதிர்மறை ஆற்றல்களை நுழைய விடாமல் தடுக்கின்ற சக்தி ஸ்குதிரை லாடத்திற்கு உண்டு என வாஸ்து சாஸ்திர நிபுணர்கள் கருதுகின்றனர். புதிதாக வாங்கிய குதிரையிலாடமாக இல்லாமல், ஏதேனும் ஒரு குதிரையின் காலில் அடித்து பயன்படுத்தி தேய்ந்த ஒரு குதிரை லாடத்தை வாங்கிக் கொண்டு, வந்து வீட்டின் நுழைவாயிலின் மேற் சுவரில் மாட்டி வைப்பதால் வீட்டிற்குள் தீய அதிர்வலைகள் நுழையாமல் தடுத்து அதிர்ஷ்டத்தையும், மகிழ்ச்சியையும் இந்த குதிரையிலாடும் கொண்டுவரும் என நம்பப்படுகிறது.

பொதுவாக எந்த ஒரு வீடுமே 100% வாஸ்து சாஸ்திரப்படி அமையாது என்பது அனுபவம் வாய்ந்த வாஸ்துவர நிபுணர்களின் கருத்தாக உள்ளது. நீங்கள் வசிக்கும் வீட்டில் வாஸ்து சாஸ்திர ரீதியாக குற்றங்கள் இருப்பதாக நீங்கள் கருதினால், நீங்கள் குடியிருக்கும் அந்த வீடு சொந்த வீடாக இருப்பின், உங்கள் வீட்டிற்கு வெளியே வீட்டை பார்த்தவாறு சிறிய அளவிலான ஒரு விநாயகர் விக்கிரகத்தை ஸ்தாபித்து, அதற்கு தினந்தோறும் பூக்கள் சாற்றி பூஜைகள் செய்து வருவதால் வீட்டில் ஏற்படுகின்ற வாஸ்து குறைகளால் பாதிப்பு ஏற்படாமல் தடுக்கும். நீங்கள் வாடகை வீட்டில் வசிப்பவராக இருந்தால் வீட்டிற்கு வெளியே உங்கள் வீட்டை பார்த்தவாறு ஒரு விநாயகர் படத்தை மாட்டி வைக்கலாம்.

இதையும் படிக்கலாமே: உப்பு பரிகாரம்

பொதுவாக அனைவரின் வீடுகளிலும் தினந்தோறும் பூஜை செய்கின்ற வழக்கம் இருக்கும் குறிப்பாக செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் கட்டாயம் அனைவரும் பூஜை செய்வார்கள். அத்தகைய தினங்களில் சில எலுமிச்சை பழங்களை பூஜையில் இறைவனுக்கு நைவேத்தியமாக வையுங்கள். பூஜை முடிந்த பிறகு அந்த எலுமிச்சை பழத்தில் ஒன்றை எடுத்து, இரண்டாக நறுக்கி, அதில் மஞ்சள், குங்குமம் தடவி உங்கள் வீட்டின் தலை வாயில் படியின் இரண்டு புறமும் வைத்து விடுங்கள். இதன்பிறகு உச்சி நேரத்தில் அல்லது இரவு நேரத்தில் மீதம் இருக்கின்ற எலுமிச்சை பழங்களை கொண்டு, உங்கள் வீட்டிற்கு திருஷ்டி சுத்தி அதை இரண்டு துண்டுகளாக வெட்டி, வீட்டின் நான்கு திசைகளிலும் வீசி விட வேண்டும். இந்த வாஸ்து பரிகாரம் ( Vastu pariharam in Tamil ) வீட்டில் ஏற்படுகின்ற வாஸ்து குறைபாட்டால் உண்டாகும் தோஷங்களை போக்கும்.

- Advertisement -