நாளை வளர்பிறை பஞ்சமி திதி வழிபாடு

varahi2
- Advertisement -

சொந்த வீடு கட்டுவதற்கு எல்லாம் ஒரு அதிர்ஷ்டம் வேணுங்க. எல்லோருக்கும் அந்த வாய்ப்பு கிடைத்துவிடாது. சரிதான், ஆனால் சொந்த வீடு வாங்கவோ, கட்டவோ முயற்சி செய்வதில் எந்த ஒரு தவறும் கிடையாது. முயற்சியை செய்துகொண்டே இருப்போம். அந்த வாராஹிதாய் நமக்கு ஒரு நல்ல வழியை காட்ட மாட்டாளா என்ன.

சொந்த வீடு வாங்க நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியோடு சேர்த்து, இந்த வளர்பிறை பஞ்சமி திதியில் வாராகி தாயையும் வழிபாடு செய்யுங்கள். நிச்சயம் சொந்த வீடு கட்டும் பாக்கியம் உங்களுக்கும் கிடைக்கும்.

- Advertisement -

மாசி மாத வளர்பிறை பஞ்சமி திதி

13.2.2024 செவ்வாய்க்கிழமை இரவு 8:35 மணிக்கு பஞ்சமி திதி பிறக்கின்றது. மறுநாள் 14.2.2024 மாலை 6:30 மணி வரை பஞ்சமி திதியானது இருக்கின்றது. புதன்கிழமையில் பஞ்சமி திதி வந்தால் அதை வசந்த பஞ்சமி திதி என்று சொல்லுவார்கள். இந்த நாளில் சரஸ்வதி வழிபாடு செய்வது குழந்தைகளுக்கு கல்வி செல்வத்தை கொடுக்கும்.

உங்கள் வீட்டு பக்கத்தில் ஹயக்ரீவர் சன்னிதானம் இருந்தால், புதன் கிழமை ஏலக்காய் மாலையை கொண்டு போய் ஹயக்ரீவருக்கு போட்டு வேண்டுதல் வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டில் படிக்கும் குழந்தையின் கையால்  அந்த ஏலக்காய் மாலையை ஹயக்ரீவருக்கு கொடுக்க சொல்லுங்கள். நாளைய தினம் இந்த வழிபாடு செய்தால் பிள்ளைகள் படிப்பில் ஆர்வத்தோடு கவனத்தோடு இருப்பார்கள்.

- Advertisement -

சொந்த வீடு கட்ட பஞ்சமி திதி வழிபாடு

இன்று, அதாவது செவ்வாய் கிழமை பஞ்சமி திதியில் வாராகி தாயை வழிபாடு செய்ய வேண்டும் என்று நினைப்பவர்கள், இரவு 8:30 மணிக்கு மேல் இந்த வழிபாட்டை வீட்டில் செய்யலாம். நாளைய தினம் புதன்கிழமை இந்த வழிபாட்டை செய்ய நினைப்பவர்கள் அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் இந்த வழிபாட்டை செய்யலாம். வாராகி வழிபாடு என்றாலே இரவு நேரத்திற்கு தான் முக்கியத்துவம் கொடுப்பார்கள். உங்களுக்கு எந்த நேரம் சௌகரியப்படுகிறது அதை தேர்ந்தெடுத்து நீங்கள் இந்த தீபத்தை ஏற்றிக் கொள்ளுங்கள்.

வராகியின் திருவுருவப்படத்தை துடைத்து மஞ்சள் குங்குமம் போட்டு வைத்து செவ்வரளி பூ போட்டு அலங்காரம் செய்து கொள்ளுங்கள். ஒரு சின்ன தாம்பல தட்டில் மண் அகல் விளக்கு வச்சுக்கோங்க. அதில் நல்லெண்ணெய் ஊற்றி திரி போட்டு விடுங்கள். அதன் பிறகு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து உங்கள் கையில் வைத்துக்கொண்டு, செவ்வாய் பகவானையும் குலதெய்வத்தையும் வாராஹிதாயையும் மனமுருகி வேண்டி அந்த ஐந்து ரூபாய் நாணயத்தை, அந்த மண் அகல் விளக்கில் போட்டு, தீபம் ஏற்றவும்.

- Advertisement -

இந்த தீபத்திற்கு முன்பாக அமர்ந்து சொந்த வீடு கட்ட வேண்டும் என்ற வேண்டுதலை அம்பாளிடம் வையுங்கள். பத்து நிமிடம் மனம் உருகி ஒரே வேண்டுதலை அம்மாளிடம் சொல்லுங்கள். பிறகு அம்பாளுக்கு ஏதேனும் ஒரு நெய்வேதியம் செய்து வைத்து தீப தூப ஆராதையினை காண்பித்து வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம். நிவேதனம் செய்ய முடியாது என்பவர்கள் ஒரு மாதுளம் பழம் முத்துக்களை உதிர்த்து ஒரு கிண்ணத்தில் போட்டு அம்பாளுக்கு வைத்தாலும் சிறப்பு தான்.

இதையும் படிக்கலாமே: கொடுத்த பணமும் நகையும் திரும்ப கிடைக்க மந்திரம்

இந்த எளிமையான வழிபாடு முறையை பின்பற்றினால் நிச்சயம் உங்களுக்கு சொந்த நிலம் வீடு அமையும். இந்த வழிபாட்டை முடித்துவிட்டு ஐந்து ரூபாய் நாணயத்தை எடுத்து சுத்தம் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்த வளர்பிறை பஞ்சமி திதியில் இதே ஐந்து ரூபாய் நாணயத்தை பயன்படுத்தி மீண்டும் விளக்கு போட்டு வேண்டுதல் வைக்கவும். நல்லதே நடக்கும் இந்த தகவலுடன் ஆன்மீகம் சார்ந்த இந்த தகவலை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -