சொந்தமாக வீடு வாங்க வாராகி வழிபாடு

varahi sengal
- Advertisement -

சொந்தமாக சிறிய அளவில் இருக்கக்கூடிய வீடு ஒன்றாவது வாங்கி விட வேண்டும் என்பது பல பேரின் வாழ்க்கை லட்சியமாகவே திகழ்கிறது. அந்த லட்சியத்தை அடைவதற்காக பல முயற்சிகளை மேற்கொள்கிறார்கள். வீடு வாங்க வேண்டும் என்ற ஆசை இருப்பவர்கள் பணத்தை சேர்த்து வைக்க வேண்டும், வங்கியில் கடன் வாங்க வேண்டும் என்று பலவாறு யோசிப்பார்கள். அந்த யோசனை அனைத்தையும் விட்டுவிட்டு வாராகித் தாயாரை முழுமனதோடு நம்பி ஒரு செங்கலை வைத்து எப்படி வழிபட்டால் வீடு வாங்கும் யோகம் கிடைக்கும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

கஷ்டங்களை தீர்க்கம் தெய்வமாக திகழக்கூடியவள் தான் வாராகித் தாய். பொதுவாக எதிரி தொல்லைகள், கடன் பிரச்சனை, வீட்டில் நிம்மதியின்மை, சண்டை சச்சரவு, பிரிந்தவர்கள் ஒன்று சேர வேண்டும், தீய சக்திகள் விலக என்பதற்காக தான் வாராகி தாயாரை வழிபடுவார்கள். முழுமனதோடு நம்பிக்கையோடு நாம் எதை வேண்டினாலும் அதை வாரி வழங்கும் வள்ளலாக தான் வாராகி தாயார் திகழ்கிறார். அந்த வகையில் வீடு வாங்குவதற்கு செய்யக்கூடிய ஒரு எளிமையான வழிபாட்டு முறையை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த வழிபாட்டை திங்கட்கிழமை அல்லது செவ்வாய்க்கிழமை செய்யலாம். இதற்காக புதிதாக ஒரு செங்கல்கல்லை வாங்கி வர வேண்டும். புதிதாக காசு கொடுத்து வாங்கி வர வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே வீட்டில் இருக்கும் செங்கல் உபயோகப்படுத்தாமல் இருக்கிறது என்று அதை எடுக்கக் கூடாது. திங்கட்கிழமை இந்த வழிபாட்டை செய்வதாக இருந்தால் சந்திர ஹோரையிலும் செவ்வாய்க்கிழமை செய்வதாக இருந்தால் செவ்வாய் ஹோரையிலும் செய்ய வேண்டும்.

செங்கலை தண்ணீர் ஊற்றி கழுவி கொள்ளுங்கள். பிறகு இந்த செங்கலை போட்டு வைப்பதற்கு தகுந்தாற்போல் ஒரு பாத்திரத்தை எடுத்து, அதில் சுத்தமான தண்ணீரை ஊற்றிக் கொள்ளுங்கள். அதில் செங்கலை வைக்க வேண்டும். இந்த பாத்திரம் வீட்டு பூஜையறையில் இருக்க வேண்டும். வாராகி தாயாரின் புகைப்படம் இருந்தால் அந்த புகைப்படத்திற்கு முன்பாக பூஜை செய்யும் நேரத்தில் தண்ணீரிலிருந்து செங்கலை எடுத்து வைக்க வேண்டும்.

- Advertisement -

வாராகி தாயாரின் புகைப்படம் இல்லாதவர்கள் அகலில் நெய் ஊத்தி சிவப்பு திரி போட்டு தீபமேற்றி அந்த தீபத்தை வாராகி தாயாராக நினைத்து வழிபடலாம். அந்த தீபத்திற்கு முன்பாக இந்த செங்கலை எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும். செங்கலுக்கு முன்பாக ஒரு கற்பூரத்தை வைத்துக் கொள்ளுங்கள். இப்பொழுது மனம் உருகி வாராகி தாயாரை நினைத்து அவளிடம் சரணாகதி அடைந்து முழு மனதுடன் சொந்தமாக வீடு வேண்டும் என்று வேண்ட வேண்டும். முழு மனதுடன் எந்தவித ஒரு சிறு சந்தேகமும் இல்லாமல் நாம் வேண்டும் வேண்டுதல் நிறைவேறும்.

ஒரு துளி சந்தேகம் இருந்தாலும் அந்த வேண்டுதல் நிறைவேறாது என்பது குறிப்பிடத்தக்கது. இவ்வாறு மனதார வேண்டிய பிறகு அந்த கற்பூரத்தை ஏற்றி ஏற்ற வேண்டும். அப்பொழுது “ஓம் சோம் மம் வாராஹியை நமஹ” என்னும் மந்திரத்தை 15 முறை உச்சரிக்க வேண்டும். பிறகு கற்பூரம் முழுதாக எரிந்து முடித்த பிறகு செங்கலை தொட்டு வணங்கி விட்டு மறுபடியும் அதே தண்ணீர் இருக்கும் பாத்திரத்திற்குள் வைத்து விட வேண்டும். இப்படி தொடர்ந்து 45 நாட்கள் வழிபாடு செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே: நாளை மைத்ரேய முகூர்த்த பரிகாரம்

கண்டிப்பான முறையில் வேண்டுதல் நிறைவேறும் என்ற நம்பிக்கையில் வாராகி தாயாரிடம் வைக்கக்கூடிய பிரார்த்தனை நிறைவேறும். முழு மனதுடன் தாயாரை வணங்கி வேண்டுதலை நிறைவேற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -