வாடகை வீட்டிலிருந்து சொந்த வீட்டிற்கு குடிப்பெயர செவ்வாய்க்கிழமையில் முருகப்பெருமானை இப்படி வழிபடுங்கள்.

murugan veedu
- Advertisement -

சொந்த வீடு கனவு என்பது எல்லோருக்கும் இருக்க கூடியது தான். தனக்கென சொந்தமாக ஒரு சின்ன குடிசையாவது இருக்க வேண்டும் என்ற எண்ணம் ஒவ்வொரு மனிதருக்குள்ளும் வேரூன்றி இருக்கும். ஏற்கனவே வீடு இருப்பவர்களே மேற்கொண்டு நிலம், வீடு வாங்க வேண்டும் என யோசிக்கும் போது வாடகை வீட்டில் துன்பப்படுபவர்களுக்கு இந்த ஆசை வருவதில் தவறில்லை.

இந்த சொந்த வீட்டு கனவை நினைவாக்க நாமும் எத்தனையோ பாடுபடுவோம். எப்படியெல்லாம் உழைப்போம் ஆனால் அதற்கான வாய்ப்பே வராது கையில் பணமும் தங்காது. ஒரு சிலரோ கையில் பணம் வைத்திருந்தாலும் வீடு கட்ட முடியாது, எழுப்பிய வீட்டு வேலை பாதியிலே நிற்கும். இப்படி வீடு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளும் தீர்வாக ஒரு எளிய வழிபாட்டு முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

சொந்த வீடு வாங்க கட்ட கூடிய யோகம் வர

சொந்த வீடு வாங்க வேண்டும் என முடிவு செய்த உடனே நிச்சயம் நாம் அதற்கான வேலைகளை தொடங்கி விட வேண்டும். நேரம் காலம் பார்க்காமல் அயராது உழைக்க வேண்டும். அதற்காக பணம் சேர்க்க வேண்டும். அது தொடர்பான அனைத்து வேலைகளையும் செய்து கொண்டே இருக்க வேண்டும். அத்துடன் இந்த ஒரு எளிய வழிபாட்டையும் செய்து கொள்ளுங்கள்.

இந்த வழிப்பாடானது மிக மிக எளிய வழிபாடு தான். இதை செவ்வாய்க்கிழமை காலை ஆறிலிருந்து ஏழு மணிக்குள் செய்தால் மிகவும் நல்லது. ஏனெனில் அந்த நேரம் செவ்வாய் ஹோரை. இது போன்ற வேண்டுதலுக்கு இந்த ஹோரையில் முருகரை வழிபடுவது மிகவும் நல்லது. அது முடியாத பட்சத்தில் செவ்வாய்க்கிழமை முழுவதிலும் கூட இந்த வழிபாட்டை செய்யலாம் தவறில்லை.

- Advertisement -

இந்த வழிபாட்டை நீங்கள் ஆலயத்தில் தான் செய்ய வேண்டும். ஆகையால் ஆலயத்திற்கு செல்லும் போது கையில் கந்த சஷ்டி கவசத்தை கொண்டு செல்லுங்கள். உங்கள் வீட்டில் அருகில் இருக்கும் முருகப்பெருமான் ஆலயத்திற்கு சென்று முடிந்தால் அங்கு ஒரு அகல் தீபம் ஏற்றி வைத்து தீபத்தின் முன் அமர்ந்து முருகப்பெருமானை மனதார வேண்டிக் கொண்டு கந்த சஷ்டி கவசத்தை படிக்க வேண்டும்.

இதை நீங்கள் சத்தமாகத்தான் படிக்க வேண்டும் என்று இல்லை. மனதிற்குள்ளே படித்தாலும் சரி தான். ஆனால் ஒரு முறை நிச்சயமாக முழுவதுமாக படிக்க வேண்டும். அதன் பிறகு உங்களுடைய வீடு தொடர்பான கனவு நினைவாக வேண்டிக் கொண்டு வந்து விடுங்கள். இந்த வழிபாட்டை ஒன்பது வாரங்கள் தொடர்ந்து செய்து வரும் பொழுது நிச்சயம் சொந்த வீட்டில் குடிப்பெயர்வதற்கான யோகம் வரும்.

இதையும் படிக்கலாமே: பணம் கையில் தாராளமாக புரள புதுவிதமான எளிய பரிகாரம்.

வீடு வாசல் நிலம் போன்ற யோகத்தை எல்லாம் தரக் கூடிய கடவுளாக கந்த கடவுள் இருக்கிறார். அதிலும் அவருக்கு உகந்த செவ்வாய்க்கிழமையில் அவருக்கான ஹேரை நேரத்தில் இந்த வழிபாட்டை நீங்கள் செய்யும் பொழுது நிச்சயம் அதற்கான பலன் பல மடங்கு இருக்கும். இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் செய்து உங்களின் சொந்த வீட்டு கனவை நினைவாக்கிக் கொள்ளுங்கள்.

- Advertisement -