சொந்தமாக வீடு, நிலம் அமையவில்லையே என்று சோர்ந்து விடாமல், இந்த விஷயங்களை தவறாமல் கடைப் பிடித்தால், நீங்கள் சொந்த வீட்டில் வாழும் யோகத்தை யாராலும் தடுக்கவே முடியாது.

- Advertisement -

சொந்தமாக ஒரு நிலமோ, வீடுமோ வாங்க வேண்டுமென்பது பலரின் கனவு என்பதை விட வாழ்நாள் லட்சியம் என்றே சொல்லலாம். குடியிருக்க சொந்தமாக சின்ன குடிசை இருந்தால் போதும் என்கிற அளவிற்கு இன்று பலரும் ஏக்கத்துடன் இருக்கிறார்கள். சொந்தமாக நிலம் அல்லது வீடு வாங்க வேண்டும் என்றால், நாம் தினசரி இந்த விஷயங்களை கடைப் பிடித்தால் அதற்கான யோகம் நம்மை தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. அது என்னவென்று இந்த ஆன்மீகம் சார்ந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

இந்த சொந்த நிலம், வீடு, சொத்து வாங்குவது என்பதெல்லாம் அவ்வளவு எளிதில் அமையாது. அதை வாங்குவதற்கான யோகம் அமையும் பட்சத்தில் தான் அதை பெற முடியும். எத்தனையோ பேர் கையில் பணம் வைத்திருந்தாலும் கூட நல்ல மனையோ, வீடோ அமையாது. இன்னும் சிலருக்கு வாங்கிய மனையில் வீடு கட்டுவது என்பது அவ்வளவு சீக்கிரத்தில் நடக்காது. இப்படி வீடு, நிலம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் சரியாக இந்த எளிய வழிபாடுகளே போதும் என்று ஆன்மீகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அது என்னவென்று பார்ப்போம்.

- Advertisement -

வீடு, நிலம் தொடர்பான எந்த காரியமும் நமக்கு சரிவர அமைய செவ்வாய்க் கிழமையில் ஆஞ்சநேயருக்கு தவறாமல் பூஜை செய்து வர வேண்டும். இந்த பூஜையை நீங்கள் ஆலயத்திற்கு சென்று தான் செய்ய வேண்டும் என்பது அல்ல. வீட்டில் இருந்தே கூட வழிபடலாம். ஆஞ்சநேயருக்கு ஏதாவது ஒரு இனிப்பு செய்து வைத்து படைத்து அவரை தொடர்ந்து வணங்கி வரும் போது இந்த வீடு, நிலம் வாங்கும் யோகம் கிடைக்கும்.

சனிக்கிழமை அன்று நம்மால் முடிந்த அளவு இல்லாத எளியவருக்கு வயிறார உணவு வாங்கித் தர வேண்டும். நீங்கள் தொழிலோ, வியாபாரமோ செய்பவராக இருந்தால் உங்களிடம் வேலை செய்பவர்களுக்கு அவர்கள் மனமும், வயிறும் நிறைய படி வாங்கி தர உங்களுக்கு இந்த யோகமானது அமையும் என்று சொல்லப்படுகிறது. இதை ஏதோ கடமைக்காக என்று  செய்ய கூடாது.

- Advertisement -

அதே போல் வீட்டில் தெற்கு பகுதியில் ஸ்வஸ்திக் சின்னம் வரைந்து வைத்தாலும் சொத்து வாங்கும் யோகமானது நம்மை தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. ஸ்வஸ்திக் சின்னத்தை வரைந்து வைத்தாலும் சரி அல்லது ஸ்டிக்கர் வாங்கி ஒட்டினாலும் சரி இது நல்ல பலனை தருவதோடு, நல்ல பண புழக்கத்தை ஏற்படுத்தி தரும் என்று சொல்லப்படுகிறது. இதை கையில் பணம் இல்லாமல் நிலமோ, வீடோ வாங்க முடியாமல் இருப்பவருக்கு இந்த ஸ்வஸ்திக் பரிகாரம் நிச்சயம் நல்ல பலனை தரும்.

செவ்வாய்க் கிழமையில் மகாலட்சுமி தாயாருக்கு பூஜை செய்தாலும் இந்த யோகமானது நம்மை தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. செவ்வாய்க்கிழமை சிகப்பு நிற மலர்களால் மகாலட்சுமி தாயாருக்கு அர்ச்சனை செய்து வழிபாடு செய்தால் மிகவும் நல்லது. இதை ஆலயத்திலும் செய்யலாம் முடியாது போனால் உங்கள் வீட்டில் செய்தாலும் பரவாயில்லை. இந்த செவ்வாய்க்கிழமை வழிபாடு அல்லது உங்களுக்கு நிலம் வாங்கும் யோகத்தை அமைத்துக் கொடுக்கும்.

- Advertisement -

வீட்டில் தென் கிழக்கு மூலையில் துளசி செடி அல்லது துளசி மாடம் வைத்து தினமும் விளக்கேற்றி வழிபாடு செய்து வர வேண்டும். இப்படி செய்வதன் மூலமும் வீடு, நிலம் வாங்கும் யோகம் உங்களை தேடி வரும் என்று சொல்லப்படுகிறது. இந்த துளசி வழிபாடானது வீடு, நிலம் மட்டுமின்றி நீங்கள் வேறு எந்த சொத்து வாங்க வேண்டும் என்று நினைத்தாலும் அதற்கான யோகத்தை கொடுக்கும் என்று சொல்லப்படுகிறது. இந்த துளசி பூஜையை காலையில் எழுந்ததும் செய்துவிட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே: தினமும் காலையில் எழுந்ததும் பால் பாக்கெட்டை கத்தரித்து இதை செய்த பிறகு பயன்படுத்தினால் வீட்டில் பணப்புழக்கம் அதிகரிக்குமாம் தெரியுமா?

சொந்த நிலம் வீடு அமைய நீங்கள் எடுக்கும் முயற்சியுடன் இந்த எளிய வழிபாடுகளையும் தொடர்ந்து செய்து வரும் போது நீங்கள் சொந்த வீட்டில் வாழும் யோகத்தை பெற்று சிறப்பாக வாழ்வீர்கள்.

- Advertisement -