நினைத்ததை 48 நாட்களில் அடைய காலையும் மாலையும் தொடர்ந்து இதை செய்து வந்தாலே போதும். உங்கள் தோஷங்கள் விலகி ஆசைகள் எளிதில் நிறைவேறும்.

sooriya poojai
- Advertisement -

மனிதராய் பிறந்த அனைவருக்கும் வாழ்வில் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற துடிப்பு இருந்துகொண்டே இருக்கும். அதே போல சிலவற்றை அடையவேண்டும் என்ற ஆசையும் இருக்கும். ஆனால் ஒரு சிலரிடம் என்னதான் தகுதியும் திறமையும் இருந்தாலும் அவர்களால் நினைத்த தூரத்தை எட்டமுடிவதில்லை, ஆசை பட்டதும் கிடைக்காமல் போகும் சூழலும் உருவாகும். இதற்காக நாம் தெய்வத்தை நொந்துகொள்வது வழக்கம். ஆனால் இப்படியான நிலைக்கு காரணம் நமது ஜாதக அமைப்பே.

ஒரு ஜாதகத்தின் முக்கிய அம்சமாக இருப்பது சூரியனும், சந்திரனும் தான். சூரிய சந்திரன் இல்லை என்றால் எப்படி இந்த உலகம் இயங்காதோ அப்படி தான் சூரியனும் சந்திரனும் ஒரு ஜாதகத்தில் சரியாக இல்லை என்றால் அந்த ஜாதகரால் பெரிய அளவில் சோபிக்க முடியாது. அப்படி இருக்கையில் நாம் என்ன செய்தால் இந்த நிலையில் இருந்து விடுபட்டு நமக்கான நிலையை அடைய முடியும் என்பதை இப்போது பார்ப்போம்.

- Advertisement -

நமது நிலையை நாமே சரி செய்ய சூரியனையும், சந்திரனையும் 48 நாட்கள் முறையாக வழிபட்டாலே போதும். இப்போது சூரியனை எப்படி வழிபடலாம் என்று பார்ப்போம். காலை சூரிய உதயத்திற்கு முன்பாக எழுந்து குளித்துவிட்டு கிழக்கு முகமாக நின்று ஒரு வெற்றிலையும், ஒரு செம்பில் தண்ணீரையும் எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு சூரியனை பார்த்தவாறு இரண்டு கைகளால் செம்பை பிடித்து செம்பில் இருந்து வரும் தண்ணீர் வெற்றிலையில் பட்டு வருமாறு வைத்து, பின்னங்காலை உயர்த்தியபடி “ஓம் ஆதித்ய நமஹ” என்று கைகளை மேலே உயர்த்தி தண்ணீரை கீழே ஊற்ற வேண்டும்.

அவ்வாறு தண்ணீர் ஊற்றும் போது தான் இந்த மந்திரத்தை 11 முறை சொல்ல வேண்டும். இதுதான் சூரிய வழிபாடு. அடுத்து சந்திர வழிபாடு. சந்திர வழிபாட்டிற்கு நாம் மாலை நேரம் அதாவது சூரியன் அஸ்தமனம் ஆகி சந்திரன் உதிக்கும் வேளையை தேர்வு செய்ய வேண்டும். சந்திரனை பார்த்தவாறு அகல் விளக்கில் விளக்கேற்ற வேண்டும்.

- Advertisement -

பிறகு காலையில் செய்தது போல் ஒரு செம்பில் தண்ணீரும், வெற்றிலையும் எடுத்துக்கொண்டு “ஓம் சந்திராய நமஹ” என்ற மந்திரத்தை 11 முறை உச்சரித்து நீரை கீழே ஊற்ற வேண்டும். இதுவே சந்திர வழிபாடு. இந்த வழிபாட்டை நாம் தினமும் மேற்கொண்டு வந்தால் நமக்கு தகுதியான அனைத்து விஷயங்களும் நமக்கு கிடைக்கும். மேலும் நவகிரகங்களின் அருள் பரிபூரணமாக நமக்கு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: பணம் தங்க, தொழிலில் லாபம் பெற, வாகன சேர்க்கை உண்டாக இந்த ஒரு பூஜையை வீட்டில் செய்தால் போதும். இதை செய்ய இல்லாதவர்கள் இந்த நான்கை தானம் கொடுத்தால் கூட போதுமானது.

இதன் மூலம் கிரஹ தோஷங்கள் நீங்கும். உடல் மற்றும் மன ரீதியான பிரச்சினைகள் தீரும். நியாயமான, தங்களுக்கு தகுதியான விஷயத்தை மனதில் நினைத்துக் கொண்டு 48 நாட்கள் தொடர்ந்து இந்த வழிபாட்டை மேற்கொண்டு வந்தால், அந்த விஷயம் நிறைவேறும், ஆசைகள் கைகூடும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

- Advertisement -