உடலில் சுறுசுறுப்பு இல்லாதது போல ஒரு உணர்வு இருக்கிறதா? அப்படின்னா இந்த பொடியை தூபம் போட்டு பாருங்க! சகல தீய சக்திகளும் நீங்கி நன்மைகள் பெருகும்.

vilvam-sad
- Advertisement -

எப்பொழுதும் உடலில் உற்சாகம் இல்லாதது போலவும், மந்தமாக இருப்பது போலவும் சில சமயங்களில் தோன்றும். இது போல திடீரென ஒருவருக்கு ஏற்படும் பொழுது அது கவனிக்கத்தக்க ஒன்றாக தான் இருக்கும். ஆரோக்கியத்தில் எந்த விதமான பாதிப்புகளும் இல்லாமல் உடம்பில் சோர்வு நீடித்தால் உங்கள் மேல் திருஷ்டி இருப்பதாகவும் எடுத்துக் கொள்ளலாம். இது போல உடல் ரீதியான பாதிப்புகளை திருஷ்டி ஏற்படுத்தும் பொழுது இந்த தூபத்தை காண்பித்தால் உடலில் இருக்கும் நெகட்டிவ் எனர்ஜிகள் என்று சொல்லக்கூடிய எதிர்மறை ஆற்றல்கள் நீங்கி நீங்கள் எப்போதும் போல புத்துணர்வுடன் உணரலாம். அதற்கு நாம் என்ன செய்ய வேண்டும்? என்பதை தெரிந்து கொள்ள தொடர்ந்து பதிவை நோக்கி பயணிப்போம்.

sad-crying2

ஒருவர் நன்றாக இருப்பதைப் பார்த்து எல்லோருமே மகிழ்ச்சி அடைவது இல்லை. ஒரு சிலருடைய கண்கள் அவர்கள் மகிழ்ச்சியை கொண்டாடுவது கிடையாது, மாறாக அவர்கள் மட்டும் எப்படி மகிழ்ச்சியாக இருக்கிறார்கள்? என்று வைத்த கண் வாங்காமல் பார்ப்பார்கள். இது அவர்கள் மீது திருஷ்டி ஆக மாறி விடுகிறது. இதனால் சிறு சிறு உடல் பாதிப்புகளும், உற்சாகத்தில் தொய்வும் ஏற்படும். இது போல் இருக்கும் சமயங்களில் எதையாவது பிரமை பிடித்தது போல யோசித்துக் கொண்டே இருக்க தோன்றும்.

- Advertisement -

நம்மை சுற்றி நடக்கும் விஷயங்களை நம்மால் சரியாக கவனிக்க கூட முடியாது. அருகிலேயே நின்று ஒருவர் பேசிக் கொண்டிருந்தாலும் அதில் நம்முடைய கவனம் செல்லாது, எதையோ சிந்தித்துக் கொண்டிருப்போம். சுயநினைவுடன் இருப்பது போல நமக்கு தோன்றாது, ஏதோ பித்து பிடித்தது போல சதா ஏதோ ஒரு சிந்தனையுடன் அமர்ந்து இருப்பதற்கு பெயர் அந்த காலத்திலெல்லாம் காத்து கருப்பு அடித்து விட்டது என்று கூறுவார்கள். இதைக் கேட்பதற்கு மூட நம்பிக்கையாக தோன்றினாலும் உண்மையில் இத்தகைய பாதிப்புகளை உணர்ந்தவர்கள் இருக்க தான் செய்கிறார்கள்.

sad-crying4

அதிகமான மகிழ்ச்சி ஒருவரை கண நேரத்தில் சோகம் அடைய செய்து விடும். ஒரு சிலர் எல்லாம் இப்படி கூறக் கேட்டிருப்போம். ‘நான் அதிகமாக எப்போது மகிழ்ச்சியுடன் இருக்கிறேனோ! ஏதோ ஒரு ஆபத்து அல்லது கவலை வரப்போகிறது என்பதை அது அறிவுறுத்துகிறது’, என்று கூறுவார்கள். இது ஒரு சிலருக்கு மட்டும் அல்ல கிட்டத்தட்ட எல்லோருக்குமே இப்படித்தான் நடக்கும். நம்முடைய மகிழ்ச்சி இன்னொருவருடைய கண்களை உறுத்தும் பொழுது அது சோகமாக மாறிவிடுகிறது. இதைத் தான் திருஷ்டி என்று கூறுகிறோம்.

- Advertisement -

இந்த வகையான திருஷ்டிகள் நம்முடைய உற்சாகத்தை நம்மிடமிருந்து பரிக்க செய்யும். இதற்கு எளிதாக தீர்வு காண சிவனுடைய சக்தி மிகுந்த வில்வ இலையை பொடியாக வாங்கி தூபம் போடலாம். வில்வ இலை பொடி நாட்டு மருந்து கடைகளில் எளிதாக கிடைக்கும். இந்த பொடி மிகவும் சக்தி வாய்ந்தது. நம்மை சுற்றி இருக்கும் தீயவற்றை அகற்றி நம்மை முற்றிலும் தெளிவடைய செய்யும் அற்புத மகத்துவம் வாய்ந்த ஒரு மூலிகைப் பொருள் ஆகும்.

vilvam

இதை எந்த நாளில் வேண்டுமானாலும் நீங்கள் செய்யலாம். இரவில் சூரியன் மறைந்த பிறகு கிழக்கு நோக்கி அமர வைத்து அவர்கள் மேல் அத்தனை இடங்களிலும் படும்படி சாம்பிராணி புகை போடுவது போல வில்வ இலை பொடியை தூவி அந்த புகையை உடல் முழுவதும் பரவ செய்ய வேண்டும். அதை அப்படியே வீடு மற்றும் வீட்டை சுற்றியுள்ள இடங்களிலும் காண்பிக்கலாம் இதனால் நல்ல ஒரு மாற்றம் நிச்சயம் தெரியும்.

- Advertisement -