அடிமாட்டு விலைக்கு கூட விற்க முடியாத சொத்தை, அமோகமான லாபத்துடன் விற்கலாம். இந்த 5 பொருட்களை ஒருசேர உங்களுடைய வீட்டில் வைத்தால் மட்டும்.

boomadevi
- Advertisement -

நாமெல்லாம் நினைத்துக் கொண்டிருக்கின்றோம், புதியதாக சொத்து வாங்குவது தான் கஷ்டம் என்று. ஆனால் நாம் வைத்திருக்கக்கூடிய சொத்தை விற்பது அதை விட கஷ்டம் என்று நம்மில் பல பேருக்கு தெரியாது. நிறைய பேர் பரம்பரையாக நிறைய சொத்துக்களை வைத்து இருப்பார்கள். ஆனால் அந்த சொத்துக்களையெல்லாம் ஏதோ ஒரு காரணத்தால் விற்க முடியாமல் அவதிப்பட்டு வருவார்கள். அவசரத் தேவைக்குக் கூட அந்த சொத்தை அடமானம் வைக்க முடியாத சூழ்நிலை இருக்கும். சொத்து கோர்ட் கேஸ் வழக்குகளில் சிக்கி இருக்கும். பங்காளிகள் ஒத்துப்போகாமல் கையெழுத்திடாமல் விற்காமல் இருக்கும். சில நிலங்கள் நல்ல விலை போகாது. சில நிலங்கள் அதிர்ஷ்டம் இல்லாத நிலங்களாக இருக்கும்.

valampuri-sangu

சில இடங்களில் பத்திரத்தில் பிரச்சனை இருக்கும். சில இடங்களில் வில்லங்கங்கள் இருக்கும். இப்படி ஏதாவது ஒரு பிரச்சனையின் மூலம் ஒரு நிலத்தை விற்க முடியாமல் நிலத்தின் சொந்தக்காரர் தவித்து வருவார். இதையெல்லாம் தெரிந்த நம் மக்கள் அந்த சொத்தை அடிமாட்டு விலைக்கு கேட்பார்கள். கொடுக்கவும் முடியாமல், வைத்துக் கொள்ளவும் முடியாமல் சொத்துக்கு சொந்தக்காரர் படும் பாடு இருக்கே, அப்பப்பா.

- Advertisement -

உங்களுக்கும் இந்த நிலைமை இருந்தால் இந்த பரிகாரத்தை கொஞ்சம் செய்துதான் பாருங்களேன். நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்தால் ஒரு சில நாட்களிலேயே, அதாவது உங்களுடைய சொத்தில் இருக்கக்கூடிய பிரச்சனையை பொருத்து, அந்த பிரச்சனைக்கு கூடிய விரைவில் விடிவுகாலம் பிறக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது.

நேர்மறை ஆற்றலை தன்னுள்ளே ஈர்க்கக்கூடிய மகாலட்சுமியின் அம்சம் பொருந்திய அதிர்ஷ்டம் நிறைந்த சில பொருட்களை வாங்கி ஒன்றாக சேர்த்து ஒரு மரப்பெட்டியில் வைத்து உங்களுடைய சொத்து பத்திரம் இருக்கும் இடத்தில் வைக்க வேண்டும். முடிந்தால் இந்த அதிர்ஷ்டம் நிறைந்த நேர்மறையான பொருட்களை வைத்த பெட்டியை உங்களுடைய சொத்து இருக்கும் இடத்திற்கே கொண்டு போய் வைத்துவிட்டு, வந்தாலும் சரிதான். விற்காத வீடாக இருந்தால் அந்த இடத்தில் வைக்கலாம். வெற்றிடமாக இருந்தால் அந்த இடத்தில் வைக்க முடியாது. பின் சொல்லக் கூடிய பொருட்களை நிலத்தில் 5 நிமிடம் வைத்து விட்டு பூமாதேவியை மனதார வணங்கிவிட்டு அதன்பின்பு இந்த பொருட்களை கொண்டு வந்து நம்முடைய வீட்டில் சொத்து பத்திரம் இருக்கும் இடத்தில் வைத்துக் கொள்ளலாம்.

- Advertisement -

சரி, என்னங்க அந்த 5 பொருள். வலம்புரிக்காய் இரண்டு, கோமதி சக்கரம் இரண்டு, சுதர்சன சங்கு இரண்டு, சோழி இரண்டு, சிறிய அளவில் இருக்கும் சங்குகள் 2. இதை வாங்கி கவரில் எல்லாம் போட்டு வைக்கக்கூடாது. இது வைக்க சிறிய மறபெட்டகம் கட்டாயம் தேவை. அதாவது சிறிய மரப்பெட்டியில் தான் இந்த பொருட்களை வைத்து சொத்து பத்திரம் உள்ள இடத்தில் வைக்க வேண்டும். (ஆன்லைனில் இந்த பொருட்கள் எல்லாம் கிடைக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.)

sozhi2

வெறுமனே இந்த பொருட்களை வாங்கி வைத்தால் மட்டும் போதாது. இந்த பொருட்களை வாங்கி எந்தப் பொருள் விற்காமல் இருக்கின்றதோ, அந்த இடத்திலோ அந்த நிலத்தின் பாத்திரத்தின் மீது வைத்து பூமாதேவியை மனதார மனமுருகி வேண்டிக் கொள்ள வேண்டும். இந்த சொத்து சீக்கிரமே நல்ல விலைக்கு விற்க வேண்டும். சொத்தில் இருக்கும் வில்லங்கத்திற்க்கு சீக்கிரமே விடிவு காலம் பிறக்க வேண்டும். சொத்து விற்க நல்ல நேரம் வர வேண்டும் என்று மனப்பூர்வமாக வேண்டி அதன் பின்பு இந்த ஐந்து பொருட்களை குறிப்பிட்ட அந்த இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

sozhi3

இந்த பரிகாரத்தை செய்து முடித்துவிட்டு ஊனமுற்றவர்களுக்கு உங்களால் முடிந்த தானத்தை செய்ய வேண்டும். பணம் கொடுப்பது என்பதும் தானம்தான். இருப்பினும் சமைத்த உணவை அவர்களுக்குப் பசி ஆறுவதற்காக கொடுத்தால் மிகவும் நல்லது. உங்களுடைய காரியம் சீக்கிரத்திலேயே ஈடேறும்‌. நம்பிக்கை உள்ளவர்கள் இந்த பரிகாரத்தை செய்து நல்ல பலனை அடையலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -