பல தலைமுறைக்கு சொத்து சுகம் சேர்க்க வேண்டும் என்ற ஆசை இருந்தால், இந்த 1 பொருளை முதலில் வீட்டிற்குள் கொண்டு வாருங்கள்.

mahalashmi
- Advertisement -

காசு, பணம், பெயர், புகழ், சொத்து, சுகம் இவைகள் எல்லாமே ஒரு விதமான போதை. கொஞ்சமாக காசு, கொஞ்சமாக பெயர், புகழ், வந்து விட்டாலே அதிலிருந்து நம்மால் வெளிவர முடியாது. மேலும் மேலும் காசு பணம் சேர்க்க வேண்டும், மேலும் மேலும் பெயர் புகழ் வந்து கொண்டே இருக்க வேண்டும், மேலும் மேலும் சொத்து சேர்த்துக் கொண்டே இருக்க வேண்டும் என்ற வெறி நமக்குள் வந்துவிடும். ஒரு கோடி ரூபாயை சேமித்து வைப்பதில் எந்த சிரமமும் கிடையாது. ஆனால் அந்த ஒரு கோடி ரூபாயை சேமிப்பதற்கு முதல் அடித்தளம் போடுவதில் தான் கஷ்டமே. ஆயிரம் ரூபாயை சேமிப்பில் வைப்பது தான் சிரமம். பத்து முறை ஒவ்வொரு ஆயிரம் ரூபாயாக சேமித்து வைத்து பாருங்கள். பதினோராவது முறை, ஒரே முறையில் பத்தாயிரம் ரூபாயை சேமிக்க கூடிய வாய்ப்பு உங்களுக்கு கிடைத்துவிடும்.

சேமிப்பில் இருக்கக்கூடிய சூட்சமமே அவ்வளவுதான். முதல் ஒரு லட்ச ரூபாய் சேமிப்பது மட்டும்தான் கஷ்டம். அது சேர்ந்து விட்டால் தானாக அடுத்தடுத்த லட்சங்கள் வந்து கொட்டத் தொடங்கி விடும். சரிங்க, அந்த முதல் ஒரு லட்ச ரூபாய் சேமிப்பதிலேயே பல தடங்கல்கள் வருகிறது. என்ன செய்வது. அந்த தடங்களை முறியடிக்க தான் இந்த ஒரு பொருளை வீட்டிற்குள் கொண்டு வர வேண்டும். அது என்ன பொருள். அதை வீட்டிற்குள் எப்படி கொண்டு வருவது என்பதை பற்றிய ஆன்மீகம் சார்ந்த அரிய தகவல் இதோ உங்களுக்காக.

- Advertisement -

பல தலைமுறைக்கு சொத்து சேர்க்க வீட்டிற்குள் கொண்டு வர வேண்டிய 1 பொருள்:
நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்து தான் இந்த ஒரு பொருளை வாங்க வேண்டும். கொம்பு தேங்காய் என்று சொல்லுவார்கள். அது எளிதில் நமக்கு கிடைக்காது. உங்களுக்கு அதிர்ஷ்டம் இருந்தால் நிச்சயம் கிடைக்கும். இந்த கொம்பு தேங்காய் கிடைத்து விட்டாலே நீங்கள் அதிர்ஷ்டசாலிகள் தான். இந்த தேங்காய் வீட்டுக்குள் வந்து விட்டாலே கூடிய சீக்கிரத்தில் லட்சாதிபதி ஆகிவிடுவீர்கள். கூடிய சீக்கிரத்தில் கோடீஸ்வரரும் ஆகிவிடுவீர்கள். கேட்பதற்கே எவ்வளவு இனிமையாக இருக்குது. இதெல்லாம் உண்மையானால்! நிச்சயம் உண்மையாகும். இந்த பரிகாரத்தை நம்பிக்கையோடு செய்யுங்கள்.

ஒரு வளர்பிறை வெள்ளிக்கிழமை அன்று இந்த கொம்பு தேங்காயை வாங்கி வந்து ஒரு தட்டில் வைத்து பூஜை அறையில் வைத்து, குலதெய்வத்தை வேண்டி நன்றாக பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். வழக்கம்போலத்தான் விளக்கு ஏற்றி வைத்துவிட்டு, கற்கண்டு நிவேதனம் வைத்துவிட்டு, மகாலட்சுமியையும் குலதெய்வத்தையும் வேண்டிக் கொள்ளுங்கள். உங்களுக்கு வருமானத்தில் இருக்கும் பிரச்சனை, பண பிரச்சனை, கடன் சுமை, எல்லாம் குறைய வேண்டும் வருமானம் பெருக வேண்டும். சேமிப்பு அதிகரிக்க வேண்டும் என்று.

- Advertisement -

பிறகு இந்த கொம்பு தேங்காயை ஒரு சிவப்பு துணியில் வைத்து அதற்குள்ளே ஒரு கைப்பிடி அளவு பச்சரிசியை போட்டு, முடிச்சாக கட்டி நிலை வாசலில் கட்டி தொங்க விட்டு விடுங்கள். அவ்வளவு தான். தினமும் விளக்கு ஏற்றும் போது இந்த தேங்காய் முடிச்சுக்கு ஒரு ஊதுவத்தி காண்பிக்க வேண்டும். இந்த தேங்காய் அவ்வளவு எளிதில் கெட்டுப்போகாது.

இதையும் படிக்கலாமே: வீட்டிலிருக்கும் தீய சக்தி, தரித்திரத்தை விரட்டி அடிக்க இந்த ஒரு தீபத்தை ஏற்றினாலே போதும். வீட்டில் செல்வ செழிப்பை பெருகி ஹோமம் செய்த பலனை தரக் கூடிய அற்புத தீபம்.

வருடத்திற்கு ஒருமுறை மாற்றினால் கூட போதும். இந்த கொம்பு தேங்காயை நிறைந்த வளர்பிறை, வெள்ளிக்கிழமை அன்று உங்கள் வீட்டிற்குள் கொண்டு வந்து விட்டால் பல தலைமுறைக்கு தேவையான சொத்து சுகம் தானாக சேர தொடங்கி விடும். நம்பிக்கையை மட்டும் கைவிடாமல் இந்த பரிகாரத்தை செய்யுங்கள். கூடவே விடா முயற்சியோடு உங்களுடைய உழைப்பையும் மூலதனமாக போடுங்கள். நல்லதே நடக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -