கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்கள், செல்வங்களை இழந்தவர்கள், முக்கியமான பொருட்களை தொலைத்தவர்கள் அவற்றை மூன்றே மாதங்களில் திரும்ப பெற துதிக்கவேண்டிய மந்திரம்

sothu kidaikka manthiram
- Advertisement -

இப்போது நாம் இந்த உலகில் அனுபவிக்கும் எந்த ஒரு வகையான பொருள் ஆனாலும் சரி அவை நமக்கு இலவசமாக கிடைத்துவிடுவதில்லை. எந்த ஒரு வகையான பொருளை வாங்கவும் அல்லது நிலம், வீடு, வாகனம் போன்ற அசையா மற்றும் அசையும் சொத்துக்களை சேர்க்கவும், ஒவ்வொருவரும் படாதபாடு படுகின்றனர். அப்படி கஷ்டப்பட்டு சேர்த்த சொத்துக்கள் மற்றும் நம் விருப்பத்திற்குரிய பொருட்களும் சில சமயங்களில் பிறரின் சூழ்ச்சி காரணமாகவோ, திருடர்களாலாலோ நாம் இழக்க நேரிடுகிறது. இப்படி நாம் எதிர்பாராத விதமாக இழக்கின்ற பொருளை, இறைவனின் அருளால் மீண்டும் பெற உதவும் ஆற்றல் மிகுந்த மந்திரம் ஒன்றை இங்கு நாம் தெரிந்து கொள்ளலாம்.

இழந்த பொருளை மீண்டும் பெற உதவும் மந்திரம்
ஓம் ஸ்ரீம் கிலீம் ஹ்ரீம்
ஸ்ரீம் மகாலக்ஷ்மீம்
சௌபாக்ய ஆகர்ஷண

- Advertisement -

ரூபீம் மஹா தனாகர்ஷண
ரூபீம் ஸர்வமங்கள
பிரதானே மம பிரார்தன
ஸர்வ காரியசித்தம்.

இந்த மந்திரத்தை தினமும் ஜெபிப்பதற்கு முன்பாக தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் உடல், மனம், ஆன்ம தூய்மையோடு உங்கள் வீட்டில் வடதிசை நோக்கி, அச்சில் வார்க்கப்பட்ட அகல் விளக்கை தவிர்த்து, கைகளால் செய்யப்பட்ட ஒரு மண் அகல் விளக்கில் தூய்மையான பசு நெய் அல்லது தீப எண்ணெய் ஊற்றி விளக்கேற்ற வேண்டும். தீபம் ஏற்றி முடித்ததும், உங்கள் வீட்டு பூஜையறையில் தினமும் காலை மற்றும் மாலை வேளைகளில் 61 முறை இந்த மந்திரத்தை திட சித்தத்துடன் துதிக்க வேண்டும். தொடர்ந்து 3 மாதம் இந்த மந்திர உச்சாடனத்தை மேற்கொள்ள வேண்டும்.

- Advertisement -

திடமான நம்பிக்கையுடன் மேற்சொன்ன முறையில் இந்த மந்திர ஜெபத்தை துதிக்கின்ற நபர்களுக்கு 3 மாதம் முடிவடைவதற்கு முன்பாகவே, அவர்கள் தொலைத்த பொருள் எதுவாகினும் அது அவர்களுக்கு மீண்டும் கிடைக்கக் கூடிய வாய்ப்புகளை இந்தப் பிரபஞ்சமும், இறைவனும் ஏற்படுத்தித் தருவார்கள் என்பது அனுபவம் வாய்ந்தவர்களின் கருத்தாக உள்ளது.

இந்த மந்திரத்தை பாராயணம் காலங்களிலே உங்கள் வீட்டுக்கு அருகில் இருக்கின்ற கோயில்களில் கார்த்தவீர்யார்ஜுனர் சன்னதி இருக்கும் பட்சத்தில், அந்த கார்த்தவீர்யார்ஜுனர் சன்னதிக்கு மாதந்தோறும் வருகின்ற உங்கள் ஜென்ம நட்சத்திர நாளில் சுபமுகூர்த்த நேரத்தில் தீபம் ஏற்றி, வழிபாடு செய்ய வேண்டும். இந்த பரிகாரத்தை செய்து வர நீங்கள் இழந்தது உங்கள் சொத்தாக இருந்தாலும், இன்னபிற விலை உயர்ந்த பொருட்களாக இருந்தாலும் அவை உங்களிடமே மீண்டும் வந்து சேர கார்த்தவீர்யார்ஜுனன் அருள்புரிவார்.

இந்து மத புராணங்களின்படி கார்த்தவீர்யார்ஜுனன் என்பவர் ஆயிரம் கரங்கள் கொண்டு பிறந்த ஒரு அபூர்வ அரசனாக கருதப்படுகிறார். இந்த கார்த்தவீர்யார்ஜுன புகழ்பெற்ற ஞானிகளில் ஒருவரான தத்தாத்ரேயரின் சீடர் ஆவார். இந்தியாவின் ஒரு சில பகுதிகளில் இந்த கார்த்தவீர்யார்ஜுனரை தெய்வமாக வழிபடும் வழக்கத்தை கொண்டுள்ளனர். மேலும் கார்த்த வீர்யார்ஜுனர் எத்தகைய துஷ்ட சக்திகளையும் அழிக்கவல்ல ஆற்றல் கொண்டவராக கருதப்படுகிறார்.

- Advertisement -