சொத்து பிரச்சனை நீங்க வழிபாடு

durgai murugan
- Advertisement -

பங்காளி சொத்தை ஏமாற்றியவன் அவனுடைய வாழ்க்கையில் நன்றாக இருக்க மாட்டான் என்று ஊர் புறங்களில் ஒரு பேச்சு வழக்கு இருக்கிறது. சிறுவயதிலிருந்து அண்ணன் தம்பியாக வளர்ந்தவர்கள் திருமணம் செய்து தனித்தனியாக குடும்பமாக மாறிய பிறகு பங்காளியாக மாறிவிடுவார்கள். அப்படி பங்காளியாக மாறிய பிறகு பாசம் பந்தம் எதுவும் இல்லாமல் சொத்துக்களை பிரித்துக் கொள்வதில் அடித்துக் கொள்வார்கள். இப்படி சொத்து ரீதியாக பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன.

அந்த பிரச்சினைகளை தீர்ப்பதற்காக கோஸ்ட் கேஸ் என்று அழைபவர்களும் பலர் இருக்கிறார்கள். இப்படி கோர்ட்டில் கேஸ் நடந்தாலும் சரி அல்லது பேச்சுவார்த்தைக்காக இருந்தாலும் சரி அல்லது சொத்தை ஏமாற்றி எடுத்துக் கொண்டாலும் சரி எந்த தெய்வத்தை எந்த நேரத்தில் சென்று வழிபட நம்முடைய நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சொத்து கிடைக்கும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

- Advertisement -

வீடு நிலம் இவற்றிற்கு அதிபதியாக திகழக்கூடியவர் செவ்வாய் பகவான். செவ்வாய் பகவானின் அதி தேவதையாக கருதப்படுபவர் முருகப்பெருமான் என்பதால் நிலம், வீடு, சொத்து போன்ற விஷயங்களுக்கு நாம் முருகப்பெருமானை வழிபட வேண்டும் என்று பலரும் கூறுவார்கள் நாமும் கேட்டிருக்கிறோம். அப்படி முருகப்பெருமானை வழிபடுவதோடு இன்னும் ஒரு தெய்வத்தை நாம் சேர்த்து வழிபடும் பொழுது நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான சொத்து தர்மபடி நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படி தர்மத்தை நிலைநாட்ட கூடிய நீதிக்கு கட்டுப்படக்கூடிய தெய்வமாக திகழக்கூடியவர் தான் துர்க்கை அம்மன்.

துர்க்கை அம்மனை நாம் வழிபடும் பொழுது நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான விஷயங்கள் அனைத்தும் கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட துர்க்கை அம்மனையும், முருகப்பெருமானையும் நாம் தொடர்ந்து 27 நாட்கள் ராகு காலத்தில் சென்று வழிபட வேண்டும். முதலில் துர்க்கை அம்மனுக்கு இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து நம்மால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து வழிபட வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக இதே போல் முருகப்பெருமானுக்கும் சென்று இரண்டு நெய் தீபங்களை ஏற்றி வைத்து நம்மால் இயன்ற ஏதாவது ஒரு பொருளை நெய்வேத்தியமாக வைத்து படைத்துவிட்டு மனதார வழிபாடு செய்ய வேண்டும். வழிபாடு செய்து முடித்த பிறகு அந்த கோவில் சன்னதியில் 20 நிமிடம் மௌனமாக அமர்ந்து தங்களின் வேண்டுதலை மனதார துர்க்கை அம்மனிடம் முருகப்பெருமானிடமும் கூற வேண்டும்.

இப்படி செய்வதன் மூலம் எப்பேற்பட்ட சொத்து பிரச்சினையாக இருந்தாலும் அந்த பிரச்சினைகள் அனைத்தும் நீங்கி நமக்கு கிடைக்க வேண்டிய நியாயமான பங்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. வழக்குகளுக்கு காரண கர்த்தாவாக திகழக்கூடிய ராகு பகவானின் காலத்தில் ராகு பகவானின் அதிதேவதியான துர்க்கை அம்மனை நாம் வழிபடும் பொழுது துர்க்கை அம்மனின் அருளால் அந்த வழக்குகளில் நமக்கு சாதகமான முடிவு கிடைக்கும்.

இதையும் படிக்கலாமே: எதிரியை தோற்கடிக்க வாராகி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த வழிபாட்டை முழு நம்பிக்கையுடன் யாருக்கும் எந்த தீங்கும் விளைவிக்க கூடாது என்ற நல்ல எண்ணத்துடன் வழிபடுபவர்களுக்கு கண்டிப்பான முறையில் அவர்களின் பாகம் அவர்களின் சொத்து அவர்கள் கைவசம் வந்து சேரும்

- Advertisement -