சுக்ர யோகம் கிடைக்க உதவும் தூபம்

sukra thoobam
- Advertisement -

நவக்கிரகங்கள் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகை பலன்களை தரும் ஆற்றல் மிகுந்தவர்களாக திகழ்கிறார்கள். அதிலும் குறிப்பாக ஆடம்பர வாழ்க்கை, பணம், வசதி வாய்ப்புகள் என்று பணக்கார வாழ்வை வாழ்வதற்குரிய யோகத்தை தரக்கூடியவராக சுக்கிர பகவான் விளங்குகிறார். சுக்கிர பகவானின் அருளை முழுமையாகப் பெற்ற நபர்கள் தங்கள் வாழ்க்கையில் எதற்குமே கஷ்டப்பட மாட்டார்கள் என்று கூறப்படுகிறது. அப்படிப்பட்ட சுக்கிர பகவானின் யோகத்தை பெறுவதற்கு வீட்டில் போடக்கூடிய தூபத்தை பற்றி தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை அன்று வீட்டை சுத்தம் செய்துவிட்டு வீட்டில் இருக்கும் பெண்கள் வீடு முழுவதும் தூபம் போடுவார்கள். இவ்வாறு தூபம் போடுவதன் மூலம் வீட்டில் இருக்கக்கூடிய எதிர்மறை சக்திகள் அனைத்தும் விலகும் என்றும் நோய்நொடிகள் எதுவும் அண்டாது என்றும் ஒரு நம்பிக்கை நிலவி வருகிறது.

- Advertisement -

சாம்பிராணியை வைத்து தூபம் போடுவதன் மூலம் இந்த பலன்கள் ஏற்படும். மேலும் மகாலட்சுமியின் அருளை பெறுவதற்கும், தீய சக்திகள் விலகுவதற்கு, எதிர்மறை சக்திகள் நீங்குவதற்கு என்று தூபம் போடும் பொழுது சாம்பிராணியுடன் மேலும் சில பொருட்களை சேர்த்து தூபம் போடும் பழக்கம் நம்மில் பலருக்கும் இருக்கிறது. அந்த வகையில் இன்று இந்த ஒரு தூபத்தை போடுவதன் மூலம் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் சுக்கிர யோகம் கிடைக்கும். சரி இந்த தூபத்திற்கு என்னென்ன தேவை என்று பார்ப்போம்.

இந்த சுக்கிர யோகம் பெறும் தூபத்தை போடுவதற்கு சுக்கிர யோகம் இருக்கக்கூடிய இலைகள் தேவைப்படும். தாமரை இலை, செம்பருத்தி இலை, மருதாணி இலை இந்த மூன்று இலைகளும் தான் தூபம் போட நாம் உபயோகப்படுத்த போகிறோம். தாமரை இலை என்று எடுத்துக்கொண்டால் அதில் வெள்ளை தாமரை, சிகப்பு தாமரை என்று எந்த தாமரையாக இருந்தாலும் பரவாயில்லை அதன் இலைகளை சேகரித்து நன்றாக காய வைத்துக் கொள்ளுங்கள். அதைப்போல் செம்பருத்தி இலை, மருதாணி இலை இவற்றையும் பறித்து தனித்தனியாக காய வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

தாமரை இலை இரண்டு கையளவு எடுத்தால் செம்பருத்தி இலை ஒரு கையளவும், மருதாணி இலை ஒரு கையளவும் எடுக்க வேண்டும். இந்த விகிதத்தில் இலைகளை எடுத்து பொடி செய்து வைத்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு பொடி செய்யும் பொழுது அதில் ஒரு கையளவு டைமன் கற்கண்டையும் சேர்த்து பொடி செய்ய வேண்டும்.

இப்படி செய்து வைத்த இந்த பொடியை வெள்ளிக்கிழமை அன்று தூபம் போடும்போது பயன்படுத்த வேண்டும். இதில் மிகவும் குறிப்பான ஒரு விஷயம் என்னவென்றால் இந்த தூபத்தை சுக்கிர ஹோரையில் தான் போட வேண்டும். மேலும் இந்த சுக்கிர யோக தூபத்தை பற்றி யாரிடமும் வெளியில் கூறாமல் செய்தால் அதன் பலன் மிகவும் அதிகமாக இருக்கும்.

இதையும் படிக்கலாமே: எதிர்பாராத பண வரவை ஏற்படுத்தும் பரிகாரம்

வெள்ளிக்கிழமை தூபம் போடும் பொழுது இந்த இலைகளையும் சேர்த்து போடுவதால் சுக்கிர யோகம் அனைவருக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையுடன் செய்து முழுமையான பலனை பெறுங்கள்.

- Advertisement -