சுவையான இந்த முட்டை பிரியாணியை இப்படி பக்குவமாக செய்து பாருங்கள். இதன் சுவைக்கு எவ்வளவு கொடுத்தாலும் மிச்சம் வைக்காமல் சாப்பிட்டு விடுவார்கள்

egg
- Advertisement -

கோழிக்கறி, ஆட்டுக்கறி இவற்றை வைத்துதான் பிரியாணி செய்வதுண்டு. அதிலும் கோழிக்கறி பிரியாணியை தான் பலரும் விருப்பமாக சாப்பிடுகிறார்கள். ஆட்டுக்கறியை அதிகமாக சமைப்பதில்லை. ஆனால் இவை இரண்டும் இல்லாமல் வெறும் முட்டையை வைத்தும் பிரியாணியை சுவையாக செய்து முடிக்கலாம். இதனை நினைக்கும் நேரத்தில் எல்லாம் அடிக்கடி செய்து சாப்பிடலாம். அதிலும் இந்த மழை காலத்தில் சட்டென செய்து சுடச்சுட சாப்பிட்டு பாருங்கள். மிகவும் அற்புதமாக இருக்கும். கமகம மணத்துடன் காரசாரமான சுவை நாவில் பட்டவுடனே எச்சில் ஊர ஆரம்பித்து விடும். வாருங்கள் இதனை எப்படி செய்ய வேண்டும் என்று இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

biriyani_1

தேவையான பொருட்கள்:
முட்டை – 7, சீரகசம்பா அரிசி – 2 டம்ளர், பெரிய வெங்காயம் – 3, தக்காளி – 3, இஞ்சி பூண்டு விழுது – 2 ஸ்பூன், எண்ணெய் – 7 ஸ்பூன், கரம் மசாலா – அரை ஸ்பூன், மிளகாய்தூள் ஒரு ஸ்பூன் பச்சை மிளகாய் 5 மஞ்சள் தூள் – 11/2 ஸ்பூன், பிரியாணி இலை – 2, பட்டை சிறிய துண்டு – 2, ஏலக்காய் – 2, கிராம்பு – 2, புதினா – ஒரு கொத்து, கொத்தமல்லித்தழை – ஒரு கொத்து, தயிர் – 5 ஸ்பூன், எலுமிச்சைச் சாறு – ஒரு ஸ்பூன், உப்பு – ஒன்றரை ஸ்பூன்.

- Advertisement -

செய்முறை:
முதலில் 7 முட்டைகளை வேக வைத்து எடுத்துக்கொள்ள வேண்டும். பின்னர் முட்டைகள் தோலுரித்து ஒரு கத்தியை பயன்படுத்தி முட்டை முழுவதும் லேசாக கீறி விட வேண்டும். பின்னர் ஒரு கடாயில் 2 ஸ்பூன் எண்ணெய் ஊற்றி எண்ணெய் காய்ந்ததும் அரை ஸ்பூன் மஞ்சள் தூள், அரை ஸ்பூன் மிளகாய்த் தூள், கால் ஸ்பூன் உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, இவற்றுடன் முட்டைகளையும் சேர்த்து நன்றாக கிளறி விட வேண்டும். சிறிதளவு நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்றாக வதக்கிக் கொண்டு, முட்டைகளை ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

egg

பிறகு இரண்டு டம்ளர் அரிசியை கழுவி தண்ணீர் ஊற்றி ஊறவைக்கவேண்டும். பின்னர் அடுப்பின் மீது ஒரு குக்கரை வைத்து 5 ஸ்பூன் எண்ணெய் ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்ததும் பிரியாணி இலை, பட்டை, கிராம்பு, ஏலக்காய் சேர்த்து தாளிக்க வேண்டும். பிறகு 3 வெங்காயத்தை நீளவாக்கில் நறுக்கி சேர்த்துக்கொள்ளவேண்டும். வெங்காயம் வதங்கியதும் 2 ஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை வதக்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

பின்னர் 3 தக்காளி மற்றும் பச்சை மிளகாயை நறுக்கி சேர்த்து, நன்றாக வதக்கிக் கொண்டு, அதனுடன் புதினா மற்றும் கொத்தமல்லியையும் சேர்த்து நன்றாக வதக்க வேண்டும். பிறகு மஞ்சள்தூள், மிளகாய்த்தூள், கரம் மசாலா, உப்பு சேர்த்து நன்றாக வதக்கி விட்டு, 5 ஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக கலந்துவிட வேண்டும். பிறகு ஊற வைத்த அரிசியை சேர்த்து நன்றாக கலந்து விட்டு, மூன்றரை டம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்கவிட வேண்டும்.

egg

பின்னர் வறுத்து வைத்துள்ள முட்டைகளை மசாலாவுடன் இவற்றுடன் சேர்த்து, ஒரு ஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து குக்கரை மூடி, 2 விசில் வரும்வரை வேக விடவேண்டும். பிறகு குக்கரில் பிரஷர் குறைந்ததும் குக்கர் மூடியைத் திறந்து பரிமாறி கொடுத்தால் போதும். இதன் சுவை அப்படியே கோழிக்கறி, ஆட்டுக்கறி பிரியாணியின் சுவைக்கு சற்றும் குறையாமல் அமோகமாக இருக்கும்.

- Advertisement -