உங்க வீட்ல ஒரு நல்லது கூட நடக்கவே மாட்டேங்குதா? சுபகாரியத் தடை விலக, வெறும் 3 எலுமிச்சம் பழங்கள் போதுமே.

durgai-amman-manthiram-1
- Advertisement -

சில வீடுகளில் என்னதான் முயற்சி செய்தாலும், ஒரு நல்ல காரியத்தை அவ்வளவு சுலபமாக நடத்திவிட முடியாது. எந்த நல்ல காரியத்தை தொடங்கினாலும், அந்த நல்ல காரியத்தை தடுக்க நிறைய அபசகுனங்கள் நடந்துகொண்டே இருக்கும். இதை சுபகாரியத் தடை என்று சொல்லுவார்கள். சுபகாரியத் தடைகள் விலக தாந்த்ரீக ரீதியாக வீட்டில் இருந்தபடியே, நமக்கு நாமே என்ன பரிகாரத்தை செய்து கொள்ளலாம் என்பதைப் பற்றித்தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

Durgai amman

கருப்பு புள்ளிகள் இல்லாத 3 எலுமிச்சம் பழத்தை வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். 3 கட்டி கற்பூரத்தை வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். இந்த பரிகாரத்தை பூஜை அறையில் அல்லாமல் வரவேற்பறை உங்கள் வீட்டின் மற்ற இடங்களில் செய்து கொள்ளுங்கள். மூன்று எலுமிச்சம்பழம் வைக்கக்கூடிய அளவு தட்டை எடுத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

அந்தத் தட்டு எச்சில் படாத தட்டாக இருக்கட்டும். தட்டின் மேல் 3 எலுமிச்சம் பழத்தை வைத்து விடுங்கள். ஒவ்வொரு எலுமிச்சம்பழத்திற்கு மேலும் ஒவ்வொரு கட்டி கற்பூரத்தை வைத்து விடுங்கள். 3 கற்பூரத்தையும் குலதெய்வத்தையும், துர்க்கை அம்மனையும் நினைத்து ஏற்றி விடுங்கள். 3 கட்டி கற்பூரமும், எலுமிச்சம் பழத்தின் மேலே எரிந்து குளிரட்டும்.

lemon

எரிந்துகொண்டிருக்கும் இந்த சூடத்திற்கு முன்பு அமர்ந்து, உங்கள் வீட்டில் இருக்கும் சுப காரிய தடை நீக்க வேண்டும் என்று குலதெய்வத்திடம் மனதார பிரார்த்தனை செய்து கொள்ள வேண்டும். கற்பூரம் முழுமையாக எரிந்து அணிந்த பின்பு, அந்த எலுமிச்சம் பழத்தை எடுத்து உங்களுடைய வீட்டிற்கு வெளியில் சென்று விட வேண்டும்.

- Advertisement -

எலுமிச்சம் பழங்களை இரண்டாக வெட்டி இரண்டு துண்டுகளையும் இரண்டு கைகளில் எடுத்துக்கொண்டு நன்றாகப் பிழிந்து, இந்த எலுமிச்சை பழ தோலை தூக்கி வெளியே வீசி விட வேண்டும். அதாவது எலுமிச்சைப் பழத்தை நசுக்கி தூர எறிய வேண்டும் என்பதே இதன் அர்த்தம்.

sudam1

வீதியில் தூரமாக தூக்கிப் போடக் கூடிய சௌகரியம் உங்கள் வீட்டில் இல்லை என்றால், இந்த எலுமிச்சைப்பழ தோலை ஒரு கவரில் போட்டு நன்றாக கட்டி குப்பைத் தொட்டியில் போட்டு விடுங்கள். அந்த குப்பைத் தொட்டியை வீட்டிற்கு வெளியே வைத்து விடுங்கள். மறுநாள் காலை இதை உங்கள் வீட்டில் இருந்து அகற்றி விடுங்கள்.

durga

இந்த பரிகாரத்தை ஞாயிற்றுக்கிழமைகளில் செய்ய வேண்டும். ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு மேல் எப்போது வேண்டுமென்றாலும் செய்யலாம். 3 ஞாயிற்றுக்கிழமை தொடர்ந்து இந்த பரிகாரத்தை செய்து வந்தால் உங்கள் வீட்டில் இருக்கும் சுபகாரியத் தடை விலகும். இது தாந்திரீக ரீதியாக செய்யப்படும் ஒரு பரிகாரம். இந்த பரிகாரத்தை செய்ய பயப்பட வேண்டாம். குலதெய்வத்தையும் அந்த அம்பாளையும் வேண்டி தான் நாம் செய்கின்றோம். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையோடு இந்த பரிகாரத்தை செய்து பலன் அடைய வேண்டும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -