பணம் தேவை என்று நினைத்த உடனே பணம் உங்களைத் தேடி வர சுக்கிர ஹோரையில் சர்க்கரையை இந்த இடத்தில் வைத்தால் போதும். கொடுத்து இதுவரை வராத பணமும் உங்களைத் தேடி வரும்.

sukran sugar
- Advertisement -

இன்றைய கால சூழ்நிலையில் பண தேவை என்பது ஒவ்வொரு மனிதனுக்கு மனிதன் மாறுப்படுகிறதே அன்றி பணத்தேவை இல்லாத மனிதன் யாருமே இல்லை. அது பெரிய பணக்காரர்கள் முதல் எளிய மக்கள் வரை எல்லோருக்குமே அவரவர் தேவைக்கு ஏற்ப பண பற்றாக்குறை இருக்கவே செய்கிறது. இந்த பண பற்றாக்குறை சரி செய்வதற்காக நாம் செய்யும் முயற்சிகளோடு இந்த ஒரு எளிய பரிகாரத்தையும் செய்யும் போது பணம் தாராளமாக வருவதோடு இதுவரை வராத பணம் கூட நம்மை தேடி வருவதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் சொல்லப்பட்டு இருக்கிறது. அப்படி ஒரு அருமையான பரிகார முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

இந்த பணத் தேவை ஒரு புறம் இருந்து பாடாய்படுத்திக் கொண்டு இருந்தாலும், இன்னொரு புறம் நம்மை சார்ந்தவர்களின் தேவைக்காக கடனாகவோ, கைமாற்றாகவோ பணத்தை கொடுத்து அதை திரும்பப் பெற முடியாமல் தவிப்பவர்களும் இன்றைய காலக்கட்டத்தில் அதிகமாகவே இருக்கிறார்கள். அப்படியானவர்கள் கூட இந்த பரிகாரத்தை செய்யும் போது கொடுத்த பணம் திரும்ப கிடைப்பதற்கான வாய்ப்புகள் அதிகரிக்கும் என்றும் சொல்லப்படுகிறது

- Advertisement -

கொடுத்த பணம் நம்மை தேடி வர
பணம் நம்மை தேடி வர வேண்டுமெனில் முதலில் நமக்கு மகாலட்சுமி தாயாரின் அனுகிரகம் தேவை. இது இருந்தால் மட்டுமே பண தேவைக்காக நாம் எடுக்கும் அனைத்து முயற்சிகளும் வெற்றி அடையும். இத்துடன் பணதிற்கான இன்னொரு அதிபதி எனில் அவர் சுக்கிரன். சுக்கிர யோகம் இருப்பின் பண பற்றாக்குறை என்பதற்கு வாய்ப்பே இல்லை.

ஆகையால் தான் இந்த பரிகாரத்தை நாம் தாயாருக்கு உகந்த வெள்ளிக்கிழமையில் சுக்கிர பகவானுக்குரிய சுக்கிர ஹோரையில் செய்ய வேண்டும். ஒரு வீட்டில் சமையலறை என்பது சுக்கிர பகவானுக்குரிய இடமாகவே பார்க்கப்படுகிறது. ஆகையால் நீங்கள் இந்த பரிகாரத்தை உங்கள் சமையலறையில் தான் செய்ய வேண்டும்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று சுக்கிர ஓரை மூன்று நேரத்தில் வரும். ஒன்று காலை 6 .15 இருந்து 7: 15, மதியம் 1: 15 முதல் 2:15, இரவு 8 :15 முதல் 9:15 இந்த நேரங்களில் வரும் நேரத்தில் தான் இதை செய்ய வேண்டும். இதற்கு ஒரு கண்ணாடி கிண்ணத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். இந்தக் கிண்ணம் முழுவதுமாக சர்க்கரையை நிரப்பி கொள்ளுங்கள். அதில் ஒன்பது கிராம்பை எடுத்து அப்படியே சொருகி வைத்து விடுங்கள். அதே போல் ஒன்பது ஒரு ரூபாய் நாணயத்தையும் சொருகி வைத்த பிறகு ஒரே ஒரு விரலி மஞ்சளையும் சொருகி உங்கள் சமையலறை மேடையிலே வைத்து விடுங்கள்.

இந்த சர்க்கரை வைத்த கிண்ணம் ஒரு வாரம் வரை அப்படியே இருக்க வேண்டும். அடுத்த வாரம் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையில் தண்ணீரில் கரைத்து விட்டு புதிதாக வேறு இதைப்போல மாற்றி வைத்து விடுங்கள். இதை தொடர்ச்சியாக ஒன்பது வாரங்கள் செய்ய வேண்டும். இந்த பரிகார பொருள் சமையலறை இருக்கும் போது நீங்கள் அசைவம் சமைப்பதை பற்றி எல்லாம் கவலைப்பட வேண்டாம். இந்த பரிகாரத்தை செய்யும் வெள்ளிக்கிழமை அன்று மட்டும் அசைவத்தை தவிர்த்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கடனாக கொடுத்த பணம் நகை அனைத்தையும் திரும்ப பெற ஞாயிற்றுக்கிழமையில் துர்க்கை அம்மனை இப்படி வழிபட்டு வந்தாலே போதும். வாங்கியவர்களே உங்களைத் தேடி வந்து திருப்பித் தருவார்கள் என்பதில் சந்தேகமே இல்லை.

இந்த பரிகாரத்தை தொடர்ந்து செய்து வரும் போது உங்களுடைய பண வரவு அதிகரிப்பதுடன் பணத்தடைகளும் நீங்கும். அதுமட்டுமின்றி இதுவரை நீங்கள் கொடுத்து வரவே வராது என்று நினைத்த பணம் கூட உங்களைத் தேடி வரும். நீங்கள் ஏதேனும் ஒரு தேவைக்காக யாரிடமாவது பணம் கேட்க வேண்டும் அல்லது பணம் தேவை என்று நினைக்கும் மாத்திரத்தில் உங்களுக்கு பணவரவிற்கான வாய்ப்புகள் கிடைக்கும். இந்த பரிகார முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலன் அடையலாம் என்ற இந்த தகவலோடு பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -