சுக்கிர வார பிரதோஷ வழிபாடு

sukiran sivan
- Advertisement -

சிவபெருமானுக்கு உகந்த தினங்களில் பிரதோஷம் மிக மிக முக்கியமான விரத நாள். இந்த பிரதோஷம் வரக்கூடிய நாளை பொறுத்து விசேஷ தரமானதாக அமையும். அந்த வகையில் நாளைய தினம் வெள்ளிக்கிழமையுடன் கூடிய பிரதோஷம் இதை சுக்கிர வார பிரதோஷம் என்று சொல்வார்கள்.

வெள்ளிக்கிழமை என்றாலே அது சுக்கிர பகவானுக்கும், மகாலட்சுமி தாயார் உகந்த நாள். நம்முடைய பணப்பிரச்சனைகளை தீர்த்துக் கொள்ள இந்த நாளில் வழிபாடு செய்வது மிகவும் உகந்ததாக சொல்லப்படுகிறது. அப்படியான தினத்தில் சிவனுக்குரிய பிரதோஷமும் இணைந்து வந்திருப்பது மேலும் சிறப்பு கூறியதாக அமைந்துள்ளது

- Advertisement -

நாளைய தினத்தில் சிவபெருமானை எப்படி வழிபட்டால் நம்முடைய துன்பங்கள் தீருவதுடன் செல்வ வளத்தையும் பெறலாம் என்பதை ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

கடன் பணப் பிரச்சனை தீர பிரதோஷ வழிபாடு

நாளைய தினத்தில் காலை பிரம்ம முகூர்த்த நேரத்திலே எழுந்து குளித்து முடித்து விட்டு பூஜை அறையில் சிவபெருமானை நினைத்து ஒரு தீபம் ஏற்றி விடுங்கள். அதன் பிறகு காலை வேளையிலே சிவ புராணத்தை படியுங்கள் அல்லது கேளுங்கள். நாளைய தினம் பிரதோஷ நேரத்தில் முடியாதவர்கள் மாலை நேரத்தில் கூட அருகில் இருக்கும் சிவாலயத்திற்கு சென்று சிவ தரிசனம் செய்யுங்கள்.

- Advertisement -

நாளைய தினம் பிரதோஷ நேரத்தில் உங்கள் வீட்டில் சிவலிங்கம் பானலிங்கம் சிவபெருமானின் திருவுருவ சிலை போன்றவை இருந்தால் அவற்றிற்கு பழச்சாறினால் அபிஷேகம் செய்யுங்கள். இந்த வழிபாட்டை பிரதோஷ நேரத்திலும் செய்யலாம் அல்லது மாலை ஆறு மணிக்கு மேல் 8 மணிக்குள்ளாக செய்து விடுங்கள்.

மாலை நேரத்தில் வழிபாடு செய்ய வாய்ப்பில்லை என்பவர்கள் இதை காலை நேரத்திலும் செய்யலாம். ஆனால் விரதம் இருப்பவர்கள் பிரதோஷ நேரம் முடிந்த பிறகு தான் விரதத்தை விட வேண்டும். இப்போது இந்த வழிபாட்டை எப்படி செய்வது என்று பார்க்கலாம். இந்த வழிபாட்டின் போது சிவனுக்கே உரிய வில்வ அர்ச்சனையும் செய்வது நல்லது.

- Advertisement -

அடுத்து ஏதேனும் ஒரு நெய்வேத்தியத்தை செய்து சிவபெருமான் படத்திற்கு முன்பாக வைத்து விடுங்கள். இப்போது தீபம் ஏற்றி விட்டு நீங்கள் தீபத்தின் முன் அமர்ந்து கொள்ளுங்கள். இந்த தெய்வம் கிழக்கு பார்த்து எரிய வேண்டும். நீங்கள் வடக்கு நோக்கி அமர வேண்டும். பணப் பிரச்சனைகள் அனைத்தும் தீர வேண்டும் என்று மனதார சுக்கிர பகவானையும் மகாலட்சுமி தாயாரையும் சிவபெருமானையும் வேண்டிக் கொள்ளுங்கள்.

ஓம் சிவாய நம ஓம்

இந்த மந்திரத்தை நாளைய தினம் சிவ வழிபாட்டின் போது 308 முறை சொல்ல வேண்டும். ஒவ்வொரு மந்திரத்தை சொல்லும் எண்ணிக்கையை பொறுத்து அதன் பலன் அமையும். அதே போல் நாளை இந்த மந்திரத்தை 108 முறை சொல்லும போது உங்களுடைய பணம் தொடர்பான அனைத்து பிரச்சனைகளும் தீர்வதுடன் சுக்கிரனின் பரிபூரண அருளையும் பெறலாம்.

இந்த வழிபாடு முடிந்த பிறகு பிரசாதத்தை வீட்டில் உள்ளவர்கள் அனைவரும் பகிர்ந்து வந்து கொண்டு நீங்களும் ஏதேனும் உணவு உண்டு விரதத்தை முடித்துக் கொள்ளுங்கள். நாளை தினத்தில் மேற்கொள்ளும் விரதமும் இந்த வழிப்பாடும் உங்களுடைய கடன் பிரச்சனையை முழுவதுமாக தீர்ப்பதுடன் செல்வ வளத்துடன் நீங்கள் வாழ வழி வகுக்கும் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: திருஷ்டி தோஷம் நீங்க வெள்ளிக்கிழமை செய்ய வேண்டியது

அதுமட்டுமின்றி எந்த ஒரு வழிபாட்டின் போதும் முக்கிய விரத நாட்களின் போதும் உங்களால் முடிந்த யாரேனும் ஒருவருக்கு உணவு வாங்கி கொடுங்கள். இது நீங்கள் செய்யும் பூஜையின் பலனை பல மடங்கு அதிகரித்து கொடுக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் நம்பிக்கையுடன் இந்த வழிபாடு செய்யலாம்.

- Advertisement -