சுக்கிர யோகத்தை சுலபமாக பெற்றுத் தரும் தானியம் இது. இந்த தானியம் வீட்டில் நிறைவாக இருந்தால் கணவன் மனைவிக்குள் சண்டை சச்சரவு கூட வராது.

sukkiran
- Advertisement -

நம் எல்லாருக்குமே தெரியும். சுக்கிர யோகம் அடித்துவிட்டால் செல்வ செழிப்போடு வாழலாம் என்பது. சுக்கிரன் யோகம் என்பது வெறும் பணம் காசுக்காக மட்டுமல்ல. சுக்கிர பகவானின் ஆசீர்வாதம் கிடைத்தால் நம்முடைய அழகும் கூடும். அறிவுத்திறனும் கூடும். அதோடு மட்டும் அல்லாமல் வீட்டில் கணவன் மனைவிக்குள் அன்யோனியமும் ஏற்படும். இத்தனை நன்மைகளையும் கொடுக்கக்கூடிய சுக்கிர பகவானை நாம் எப்படி வசியப்படுத்துவது. சுக்கிர பகவான் நம்முடைய ஜாதகத்தில் நீச்சமாக இருந்தாலும், உச்சமாக இருந்தாலும் சுக்கிர பகவானின் ஆசீர்வாதத்தை முழுமையாக பெற பின் சொல்லக்கூடிய பரிகாரங்கள் உங்களுக்கு உதவியாக இருக்கும்.

முதலில் சுக்கிர பகவானுக்கு உரிய தானியமாக சொல்லப்படுவது மொச்சை. மொச்சை ஒரு வீட்டில் எப்போதும் நிறைவாக இருக்க வேண்டும். மொச்சை தானியத்தை நாம் சமையலுக்கு பயன்படுத்துவோம் அல்லவா. ஆகவே வாங்கிய மொச்சையை ஒரு பாட்டிலில் கொட்டி காற்று போகாமல் மூடி சமையலறையில் ஸ்டோர் செய்து வைத்துக் கொள்ளுங்கள். அந்த தானியம் எப்போதும் குறையாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அதாவது சமையலுக்கு பயன்படுத்தினாலும் சரி பரிகாரத்திற்கு பயன்படுத்தினாலும் சரி, ஒரு வீட்டு சமையல் அறையில் மொச்சை தானியம் நிறைவாக இருப்பது நல்லது. இந்த மொச்சை தானியம் வீட்டிற்கு சுபிட்சத்தை தரக்கூடிய ஒரு பொருள்.

- Advertisement -

உங்கள் வீட்டில் இருக்கும் சிறிய வெள்ளி கிண்ணத்திலோ, வெள்ளி டம்ளரிலோ அல்லது வெள்ளி தட்டிலோ கொஞ்சம் மொச்சையை போட்டு பூஜை அறையில் ஏதாவது ஒரு இடத்தில் வைத்தால் சுக்கிர பகவானின் அனுகிரகம் நிறைவாக கிடைக்கும். வீட்டில் இருக்கக்கூடிய பண கஷ்டங்கள் குறையும். கணவன் மனைவிக்குள் இருக்கக்கூடிய சண்டை சச்சரவுகள் குறையும்.

வியாழக்கிழமை இரவு ஒரு எச்சில் படாத சிறிய பாத்திரத்தில் ஒரு கைப்பிடி அளவு மொச்சை, ஒரு கைப்பிடி அளவு வெல்லம், போட்டு கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி தட்டு போட்டு மூடி சமையலறையிலேயே கூட வைக்கலாம் அல்லது பூஜை அறையிலும் வைக்கலாம். இந்த மூடியின் மேலே சுக்கிர பகவானுக்கு மிகவும் பிடித்த மல்லிகைப்பூ சிறிதளவு வைத்து அப்படியே விட்டு விடுங்கள். மறுநாள் காலை வெள்ளிக்கிழமை முடிந்தால் சுக்கிர ஹோரை வரும்போது 6 லிருந்து 7 மணிக்குள் இந்த வெல்ல தண்ணீரில் ஊறிக் கொண்டிருக்கும் மொச்சையை கொண்டு போய் பசு மாட்டிற்கு சாப்பிட கொடுத்து விட வேண்டும். இந்த பரிகாரத்தை செய்து வர உங்களுக்கு சுக்கிர யோகம் அடிக்கும். (இப்படி எத்தனை வார வெள்ளிக்கிழமை வேண்டும் என்றாலும் செய்யலாம். அது உங்களுடைய விருப்பம் தான்.)

- Advertisement -

அத்திமரம் சுக்கிர பகவானுக்கு உரியதாக சொல்லப்பட்டுள்ளது. அத்தி மரத்திலிருந்து கிடைக்கக்கூடிய சிறிய குச்சியை கொண்டு வந்து நம் வீட்டில் பத்திரப்படுத்தி வைப்பது மிகவும் நல்லது. முடிந்தால் சிறிய அத்திமர குச்சியை கொண்டு வந்து மஞ்சள் தடவி பணம் வைக்கும் பெட்டியில் வைத்தாலும் நமக்கு செல்வ செழிப்பை கொண்டு வந்து சேர்க்கும்.

வீட்டில் வெள்ளிக்கிழமை தோறும் மொச்சைக்கொட்டையை சமையலில் சேர்த்துக் கொள்வதும் மிக மிக நல்லது. வெள்ளிக்கிழமை நவகிரகங்களில் இருக்கக்கூடிய சுக்கிர பகவானுக்கு உங்கள் கையாலேயே மல்லிகை பூவை மாலையாக கட்டி கொண்டு போய் போட்டு இரண்டு மண் அகல் விளக்குகளில் நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவதும் சிறப்பான பலன்களை கொடுக்கும். மேலே சொன்ன பரிகாரங்களில் ஏதாவது ஒரு பரிகாரம் உங்களுக்கு சுலபமாக இருந்தாலும் அந்த ஒரு பரிகாரத்தை தொடர்ந்து செய்து வாருங்கள். நிச்சயமாக சுக்கிர பகவானின் அனுக்கிரகத்தை பரிபூரணமாக பெற்று சந்தோஷமாக வாழலாம் என்ற இந்த தகவலுடன் இன்றைய பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -