சுக்கிரயோகம் அடிக்க ஏற்ற வேண்டிய விளக்கு

sukkiran
- Advertisement -

சுக்கிர யோகம் அடிக்க வேண்டும் என்ற ஆசை நம்மில் எல்லோருக்கும் இருக்கிறது. சுக்கிர யோகம் அடித்தால் குடிசையில் இருப்பவன் கோபுரத்திற்கு குடி செல்வான், பிச்சைக்காரனாக இருப்பவன் கூட சீக்கிரம் பணக்காரனாக மாறிவிடுவான். ஏழையாக இருப்பவனை பணக்காரனாக மாற்றும் சக்தி சுக்கிரனுக்கு இருக்கிறது. ஆனால் இந்த சுக்கிர பகவானின் அனுகிரகத்தை பெறுவதில் தான் சிரமமே.

என்ன செய்தால் சுக்கிர பகவான் நம் வீடு தேடி வருவார். என்ன செய்தால் சுக்கிர பகவான் நம் வீட்டில் பண மழையை பொழியச் செய்வார். ஆன்மீகம் சார்ந்த எளிய சின்ன குறிப்பு இதோ உங்களுக்காக. இந்த விளக்கை ஏற்றினால் மட்டும் போதும். சுக்கிர பகவான் உங்கள் வீட்டிற்கு சுறுசுறுப்பாக ஓடி வந்து, பண மழையை பொழியச் செய்வார். அது என்ன தீபம் தெரிந்து கொள்வோமா.

- Advertisement -

சுக்கிர யோகம் அடிக்க வீட்டில் ஏற்ற வேண்டிய தீபம்

வீட்டில் செல்வ கடாட்சம் நிறைவாக இருக்கணும். மகாலட்சுமி அம்சம் பெற வேண்டும். சுக்கிரனின் அனுகிரகம் கிடைக்க வேண்டும் என்றால், தினமும் உங்கள் வீட்டில் ஏற்ற வேண்டியது நல்லெண்ணெய் விளக்கு. இது முதல் வேலை. இன்னும் கொஞ்சம் கூடுதலாக அதிர்ஷ்டம் வேண்டும் என்றால், சீக்கிரம் சுக்கிர பகவானை வசியம் செய்து விட வேண்டும் என்றால், நீங்கள் விளக்கு ஏற்றக்கூடிய எண்ணெயில் இந்த பொருட்களை சேருங்க. அது என்னென்ன பொருள்.

குங்குமப்பூ, ஏலக்காய் விதை, பச்சை கற்பூரம், இந்த 3 பொருட்கள் தான். 1/2 லிட்டர் சுத்தமான மரச்செக்கு தேங்காய் எண்ணெய் வாங்கிக் கொள்ளுங்கள். அதில் இரண்டு சிட்டிகை குங்குமப்பூ, இரண்டு ஏலக்காய்க்கு உள்ளே இருக்கும் விதை, 2 துண்டு பச்சை கற்பூரத்தை தூள் செய்து போட்டு கலந்து அப்படியே பூஜை அறையில் வைத்து விடுங்கள்.

- Advertisement -

தினம் தினம் ஒரு மண் அகல் விளக்கில் இந்த விளக்கு ஏற்றும் நல்லெண்ணெயை ஊற்றி பஞ்சு திரி போட்டு, விளக்கு ஏற்றலாம். தாமரை தண்டு திரி போட்டு விளக்கு ஏற்றினால் இன்னும் சிறப்பான பலனை பெறலாம். தினமும் இந்த எண்ணெயை ஊற்றி விளக்கு ஏற்ற முடியாது என்பவர்கள், வாரத்தில் ஒரு நாள் வெள்ளிக்கிழமை காலை 6.00 மணியிலிருந்து 7.00 மணி வரைக்கும் இந்த விளக்கு வீட்டில் எரியும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

இந்த விளக்குக்கு முன்பாக அமர்ந்து எவ்வளவு பணம் வேண்டுமோ அதைக் கேளுங்கள். அந்த பணத்தை சம்பாதிக்க முயற்சி எடுங்கள். பணம் கட்டு கட்டாக சேர தொடங்கி விடும். வீட்டில் இருக்கும் வறுமை விரட்டியடிக்கப்படும். வீட்டிற்குள் சுக்கிர யோகம் வரும். சுக்கிரனை வசியம் செய்ய எளிமையான ஆன்மீக பரிகாரங்களில் இதுவும் ஒன்று.

இதையும் படிக்கலாமே: புதுவருட காலண்டர் மாட்டும் திசை

ஏலக்காய் விதை, குங்குமப்பூ, பச்சைக் கற்பூரம் மூன்றுமே சுக்கிரனை வசியம் செய்யக்கூடிய பொருட்கள் தான். இது தவிர வாரம் ஒரு நாள் வெள்ளிக்கிழமை, ஒரு கைப்பிடி மொச்சைக்கொட்டை கொண்டு போய் நவகிரக, சுக்கிர பகவான் பாதங்களில் வைத்து இரு கைகளைக் கூப்பி கும்பிட்டு வாருங்கள்‌. நல்லதே நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறுங்கள்.

- Advertisement -