வெள்ளிக்கிழமை சுக்கிர பகவானை இந்த முறையில் பூஜை செய்தால் வீட்டில் தங்கம் சேரும்.

sukra poojai
- Advertisement -

நவகிரகங்களில் யோகங்களை தரக்கூடிய கிரகங்களில் ஒருவர்தான் சுக்கிர பகவான். சுக்கிர பகவானின் ஆதிக்கம் ஒருவருடைய ஜாதகத்தில் நல்ல முறையில் இருந்தால் அவர்கள் செல்வ செழிப்பில் எந்தவித குறையும் இல்லாமல் நிறைவாக இருப்பார்கள். அப்படிப்பட்ட சுக்கிர பகவானின் அருளை பெறுவதற்கு வெள்ளிக்கிழமையில் எந்த முறையில் பூஜை செய்ய வேண்டும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் பார்க்கப் போகிறோம்.

சுக்கிர பகவானுக்குரிய கிழமையாக வெள்ளிக்கிழமை திகழ்கிறது. மேலும் சுக்கிர பகவானுக்குரிய தெய்வமாக போற்றப்படுபவர் மகாலட்சுமி தாயார். இவர்களின் பரிபூரணமாக ஆசீர்வாதம் கிடைக்கப்பெற்ற நபர்கள் வாழ்க்கையில் தோல்வி என்ற ஒரு சொல் வரவே வராது என்று தான் கூற வேண்டும். மேலும் சுக்கிர பகவானுக்கு உரிய உலோகமாக வெள்ளி திகழ்கிறது.

- Advertisement -

வெள்ளிக்கிழமை அன்று வெள்ளியை வைத்து பூஜை செய்தால் சுக்கிர பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரயான காலை 6 முதல் 7 வரை, மதியம் 1 முதல் 2 வரை, இரவு 8 முதல் 9 வரை இந்த நேரங்களில் ஏதாவது ஒரு நேரத்தை தேர்வு செய்து கொள்ள வேண்டும்.

வீட்டு பூஜை அறையில் மகாலட்சுமியின் புகைப்படத்திற்கு முன்பாக அகலில் நெய் தீபம் ஏற்ற வேண்டும். நெய் தீபம் ஏற்ற முடியாத பட்சத்தில் நல்லெண்ணெயில் தீபம் ஏற்றலாம். அடுத்ததாக டைமண்ட் கற்கண்டை வைத்தியமாக மகாலட்சுமி தாயாருக்கு வைக்க வேண்டும். பிறகு ஒரு சிறிய தாம்பாளத்தை எடுத்துக் கொள்ள வேண்டும். அதில் ஓட்டை இல்லாத ஒரு வெற்றிலையை வைக்க வேண்டும்.

- Advertisement -

நம் வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு வெள்ளி பொருள் அதை எடுத்துக் கொள்ள வேண்டும். அது மோதிரம், கொலுசு, காயின் இப்படி எதுவாக இருந்தாலும் பரவாயில்லை. அதை எடுத்துக்கொண்டு அதை பன்னீரில் சுத்தமாக கழுவ வேண்டும். கழுவிய அந்த பொருளை வெற்றிலையின் மீது வைக்க வேண்டும்.

அடுத்ததாக ஒரு சிறிய கிண்ணத்தில் மஞ்சள் தூளை போட்டு அதில் பன்னீரை ஊற்றி நன்றாக கலந்து கொள்ள வேண்டும். இப்பொழுது மகாலட்சுமி தாயாரின் 108 போற்றிகளை கூற வேண்டும். அவ்வாறு கூறும் பொழுது ஒவ்வொரு போற்றிக்கும் மஞ்சள் கலந்த அந்த நீரை எடுத்து ஒவ்வொரு சொட்டாக வெள்ளி பொருளின் மீது இடவேண்டும்.

- Advertisement -

அதாவது அந்த வெள்ளி பொருளுக்கு மஞ்சளால் அர்ச்சனை செய்வது போல். ஆனால் இங்கே மஞ்சள் தூளில் நாம் பன்னீரை ஊற்றி அர்ச்சனை செய்கிறோம். இவ்வாறு செய்து முடித்துவிட்டு அன்று முழுவதும் அப்படியே விட்டு விட வேண்டும்.

மறுநாள் காலையில் வீட்டில் எப்போதும் போல் விளக்கேற்றி பூஜை செய்த பிறகு அந்த வெள்ளி பொருளை நாம் எடுத்து உபயோகப்படுத்திக் கொள்ளலாம். வெற்றிலையை கால் படாத இடத்தில் போட்டு விட வேண்டும்.

இதையும் படிக்கலாமே: வரவை விட செலவு அதிகமாக இருக்கிறதா? அப்போ பண வசியத்தை ஏற்படுத்தும் வெற்றிலை பரிகாரத்தை செய்யுங்கள்

இவ்வாறு வெள்ளிக்கிழமை தோறும் இந்த பூஜையை நாம் செய்து வந்தால் சுக்கிர பகவானின் அருள் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும். அதனால் வீட்டில் தங்கம் சேரும். நமக்கு வர வேண்டிய பணத்தொகை நம்மை வந்து சேரும்.

- Advertisement -