வரவை விட செலவு அதிகமாக இருக்கிறதா? அப்போ பண வசியத்தை ஏற்படுத்தும் வெற்றிலை பரிகாரத்தை செய்யுங்கள்

pana vasiyam
- Advertisement -

நம்முடைய உழைப்புக்கேற்ற ஊதியத்தை நாம் அனைவரும் ஏதாவது ஒரு ரூபத்தில் பெறுகிறோம். அவ்வாறு பெற்ற பணத்தை நம் வீட்டிற்கு எடுத்து வந்து வைத்தால் வைத்த உடனேயே அதைவிட பத்து மடங்கு அதிகமாக செலவு ஏற்பட்டு ஒன்றுமில்லாமல் போய்விடும். இந்த மாதிரி கஷ்டங்களை அனுபவிப்பவர்களுக்கு பண வசியம் என்பது இல்லாமல் இருக்கும். அப்படி அவர்கள் பண வசியத்தை ஏற்படுத்துவதற்கு வெற்றிலையை வைத்து எப்படி பரிகாரம் செய்ய வேண்டும் என்று தான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்க போகிறோம்.

பொதுவாக நாம் ஒருவர் மேல் அளவு கடந்த அன்பை வைத்து விட்டோம் என்றால் அவர்கள் தவறே செய்தாலும் அவர்களை விட்டு பிரிய மாட்டோம். பிரிய மனமும் வராது. ஒரு நாள் பேசாமல் இருந்தாலும் மறுநாள் நாமே போய் பேசி அவர்களுடன் ஒன்று சேர்ந்து விடுவோம். இதைத்தான் வசியம் என்கிறோம். இதே போல் பணத்திற்கும் நம்மேல் வசியம் ஏற்பட்டு விட்டால் அது நம்மை விட்டு என்றுமே நீங்காது.

- Advertisement -

இந்த வசியத்தை செய்வதற்கு நமக்கு முதலில் ஐந்து வெற்றிலைகள் தேவைப்படும். நல்ல வெற்றிலைகளாக பார்த்து எடுத்துக் கொள்ள வேண்டும். பிறகு இதை மஞ்சள் கலந்த தண்ணீரில் நன்றாக கழுவி சுத்தம் செய்து ஈரம் இல்லாமல் துடைத்து வைத்துக் கொள்ளுங்கள். அடுத்ததாக இதற்கு தேவைப்படுவது பசு நெய். சுத்தமான பசு நெய்யை வாங்கி ஒவ்வொரு வெற்றிலையின் மேலும் தடவி ஒன்றன் மேல் ஒன்றாக வைக்க வேண்டும்.

அடுத்ததாக நமக்கு மஞ்சள் நிறத்தில் இருக்கக்கூடிய பட்டுத்துணி வேண்டும். பட்டு துணியாக இருந்தால் அது மிகவும் நன்மை தரும். பட்டுத்துணி வாங்க இயலாதவர்கள் சாதாரண மஞ்சள் நிற துணியை எடுத்துக் கொள்ளலாம். பட்டுத்துணிக்கு தீட்டு இல்லை என்பதால்தான் பூஜையில் பட்டு துணிக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்.

- Advertisement -

இப்பொழுது சதுர வடிவில் துணியை வெட்டி எடுத்துக் கொள்ள வேண்டும். நாம் தயார் செய்து வைத்திருக்கும் இந்த வெற்றிலையை நன்றாக நீலவாக்கில் சுருட்டி கொள்ள வேண்டும். பிறகு அதை இந்த மஞ்சள் நிற துணியில் வைத்து இதையும் நன்றாக சுற்றிக்கொள்ள வேண்டும். பிறகு இது பிரியாத அளவிற்கு மஞ்சள் நிற நூலால் கட்டிவிட வேண்டும். இதை பணம் இருக்கும் பெட்டியில் வைத்து விட வேண்டும்.

வெற்றிலையும் நெய்யும் மகாலட்சுமியின் அம்சத்தை குறிப்பவை. மேலும் மஞ்சள் நிற துணி என்பது குரு பகவானை குறிக்க கூடியது. குரு பகவானும், மகாலட்சுமி தாயார் எந்த இடத்தில் இருக்கிறார்களோ அந்த இடத்தில் பணத்திற்கு எந்தவித குறையும் இருக்காது. நமக்கு வரக்கூடிய வருமானம் அது பத்து ரூபாயாக இருந்தாலும் அதை எடுத்து வந்து வேறு எங்கும் வைக்காமல் இந்த மஞ்சள் துணி வைத்திருக்கும் பணப்பெட்டியில் வைத்து விட வேண்டும்.

- Advertisement -

இவ்வாறு செய்வதன் மூலம் நமக்கு வரக்கூடிய செலவு வந்தாலும் நம் வீட்டில் பணம் என்பது சுத்தமாக இல்லாமல் போகாது மேலும் போன பணம் மறுபடியும் திரும்பி பல மடங்காக நம்மை தேடி வந்துவிடும். அதாவது என்றும் நம் கையில் பணம் இருந்து கொண்டே இருக்கும்.

இதையும் படிக்கலாமே: இந்த தூபத்தை வீட்டில் போட்டால் லட்சுமி கடாச்சம் பரிபூரணமாக கிடைக்கும்

இதில் இருக்கும் வெற்றிலையை மாதத்திற்கு ஒருமுறை புதிதாக மாற்றி அதே பட்டுத் துணியில் வைத்து பணம் வைக்கும் இடத்தில் வைத்து விடலாம். துணியை மாற்றம் தேவையில்லை.

- Advertisement -