சுக்கிர யோகம் கிடைக்க உதவும் உணவுப் பொருட்கள்.

sukran food
- Advertisement -

ஒரு மனிதன் உழைத்து சம்பாதிப்பதற்கு அவனுடைய எண் ஜான் வயிறு காரணமாக இருக்கிறது. அந்த வயிறு நிறைவதற்காக பல பேர் போராடிக் கொண்டு இருக்கிறார்கள். அப்படி அந்த வயிறை நிரப்புவதற்கு உண்ணக்கூடிய சில உணவு சுக்கிர யோகத்தையும் தரும் என்று கூறப்படுகிறது. இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் சுக்கிர யோகத்தை தரக்கூடிய உணவுப் பொருட்களை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

பொதுவாக பணம் இல்லாதவர்க்கு இவ்வுலகம் இல்லை என்று கூறப்படுகிறது. அந்த அளவிற்கு பணத்தின் தேவைகள் நம்முடைய வாழ்க்கையில் மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. அப்படிப்பட்ட பணத்தை வசியம் செய்வதற்கும் பணத்தை சேர்ப்பதில் ஏற்படக்கூடிய தடைகளை தகர்த்தெறிவதற்கும் செல்வ செழிப்புடன் வாழ்வதற்கும் சுக்கிரனின் அருள் என்பது பரிபூரணமாக தேவைப்படும். சுக்கிர பகவானின் அருளை பெற வேண்டும் என்று நினைப்பவர்கள் தங்கள் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டிய உணவுப் பொருட்களை பற்றி பார்ப்போம்.

- Advertisement -

சுக்கிரனின் அம்சம் பொருந்தியதாக திகழக்கூடியதுதான் நெய் இந்த நெய்யை வெள்ளிக்கிழமையில் சுக்கிர ஹோரையில் உணவோடு சேர்த்து நாம் சாப்பிடும் பொழுது சுக்கிர பகவானின் அருள் நமக்கு கிடைக்கும் என்று கூறப்படுகிறது. அது மட்டுமல்லாமல் மகாலட்சுமி தாயாருக்கும் சுக்கிர பகவானுக்கும் உரிய ஒரு கனியாக இருப்பது தான் நெல்லிக்கனி. இந்த நெல்லிக்காயை நாம் தேனில் ஊறவைத்து தேன் நெல்லிக்காயாக சுக்கிர ஹோரையில் வெள்ளிக்கிழமை அன்று நம் உணவில் சேர்த்து வந்தாலும் சுக்கிர பகவானின் அருள் பரிபூரணமாக கிடைக்கும்.

அது மட்டும் அல்லாமல் வியாழக்கிழமையில் குபேர பூஜை செய்யக்கூடிய நேரமான மாலை 5 மணியிலிருந்து 7 மணிக்குள் நெய் மற்றும் தேன் நெல்லிக்காயை நாம் உணவாக எடுத்துக் கொள்ளும் பொழுதும் குபேர பகவானின் அருளும் நமக்கு பரிபூரணமாக கிடைக்கும் என்று கூறப்படுகிறது. இது ஆன்மீக ரீதியாக கூறப்பட்டாலும் மருத்துவர் ரீதியாக அனைவருக்கும் அத்தியாவசியமாக தேவைப்படக்கூடிய சத்து மிகுந்த பொருட்களாக தான் இவை திகழ்கின்றன.

- Advertisement -

ஆன்மீகத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட இந்த பொருட்களை தங்கள் உணவில் சேர்த்துக் கொள்வதில் எந்தவித தடைகளும் இருக்காது என்பதுதான் உண்மை. இருப்பினும் தொடர்ந்து ஒரு மாத காலம் வெள்ளிக்கிழமை சுக்கிர ஹோரையிலும் வியாழக்கிழமையில் குபேர பூஜை செய்யக்கூடிய நேரத்திலும் இந்த பொருட்களை உணவில் சேர்த்து பாருங்கள்.

கண்டிப்பாக முறையில் உங்களின் பண வரவு என்பது அதிகரிக்கும் பணவரவில் இருக்கக்கூடிய தடைகளும் தவிடு பொடியாகும். சுக்கிர பகவானின் அருள் உங்களுக்கு பரிபூரணமாக கிடைக்கப்பெற்று அனைத்து செல்வ செழிப்புகளும் உண்டாகி சுகமான வாழ்க்கை அமையும் என்பது உறுதி.

இதையும் படிக்கலாமே: வேண்டுதல் நிறைவேற பஞ்சமுக தீப வழிபாடு.

இந்த ஆரோக்கியமான சத்து மிகுந்த உணவை நாம் உண்டு உடல் நலனையும் மேம்படுத்தி பண வரவையும் அதிகரித்து மகிழ்ச்சியுடன் வாழ்வோம்.

- Advertisement -