வெள்ளிக்கிழமை எந்த தீபம் ஏற்றினால் சுக்கிர யோகத்துடன் சுகபோக வாழ்வு அமையும் தெரியுமா? வாழ்க்கையில் படிப்படியாக முன்னேற தவறாமல் ஏற்ற வேண்டிய தீபம்!

sukran-velli-vilakku
- Advertisement -

எல்லோருடைய வாழ்க்கையிலும் தடை கற்களாக வருபவற்றை படிக்கற்களாக மாற்றி முன்னேறுவதாகத் தான் இருக்கும். இதற்கு சுக்கிர அருள் தேவை. சுக போக வாழ்க்கையை கொடுக்கக் கூடியவர் சுக்கிர பகவான். இவருடைய அருள் இருந்தால் எளிதாக நம் வாழ்க்கையில் முன்னேறலாம். வெள்ளிக் கிழமையில் எந்த தீபத்தை ஏற்றினால் சுக்ர அருள் கிடைக்கும்? என்கிற ஆன்மீகம் சார்ந்த தகவல்களைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

சுக்கிர அருள் கிடைக்க வெள்ளிக் கிழமையில் சுக்கிர ஹோரையில் சுக்கிர பகவானை வழிபடுவது சிறப்பு! நவகிரக சன்னிதியில் இருக்கக் கூடிய சுக்கிர பகவானுக்கு வஸ்திரம் சாற்றி, நெய் விளக்கு ஏற்றி வைத்து மனதார வழிபட்டு வரலாம். பௌர்ணமி தினங்களில் சுக்கிர பகவான் வழிபாடு செய்வது ரொம்பவும் விசேஷமானது.

- Advertisement -

வீட்டில் பூஜை செய்பவர்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமையில் ஐந்து முக குத்து விளக்கை வைத்து தீபம் ஏற்றி வழிபட்டால் ரொம்பவும் சிறப்பான பலன்களை காணலாம். ஐந்து முக தீபம் மகாலட்சுமிக்கு உரிய அம்சமாக விளங்குகிறது. இதில் 5 திரிகள் அல்லது மூன்று திரிகளை இட்டு நெய் அல்லது நல்லெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றி வந்தால் சகல சௌபாக்கியங்களையும் அடையலாம்.

சுக்கிர பகவானுக்கு உரியது வெள்ளி ஆகும். வெள்ளிப் பொருட்கள் வீட்டில் வைத்திருப்பது சுக்கிர அருளை கொடுக்கும். பூஜை அறையில் வெள்ளியால் ஆன பொருட்களை கொண்டு பூஜை செய்வதால் சுக்கிர அருள் பரிபூரணமாக அமையும் என்பது ஐதீகம். திருமணம் மற்றும் விசேஷங்களின் பொழுது வெள்ளி பொருட்கள் உங்களுக்கு வந்தால், அல்லது நீங்கள் மற்றவர்களுக்கு கொடுத்தாலும் சுக்ர அருள் பெறலாம்.

- Advertisement -

வெள்ளி குத்துவிளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கு வீட்டில் இருப்பது ரொம்பவும் நல்லது. வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு தீபம் ஏற்றும் பொழுது, இந்த வெள்ளி குத்துவிளக்கு அல்லது காமாட்சி அம்மன் விளக்கில் நெய் ஊற்றி தீபம் ஏற்றி வரலாம். இதனால் குடும்பத்தில் இருக்கும் வறுமை நீங்கும். வருமானம் பெருகும். தொழிலில் நல்ல ஒரு முன்னேற்றத்தை காணலாம். இதனால் சுகபோக வாழ்க்கையும் அமையும்.

ஒருவருடைய ஜாதகத்தில் சுக்கிரன் பலம் பெற்று இருந்தால் அவர்களுக்கு எத்தகைய தடைகள் இருந்தாலும் அவற்றை நீங்கி, நினைத்த காரியத்தை சாதிக்க முடியும். பௌர்ணமி தோறும் சுக்கிர, சந்திர வழிபாடு செய்யுங்கள். தேங்காய் சாதம், வெண்பொங்கல் என்று வெள்ளை பொருட்களால் ஆன நைவேத்தியங்களை படைத்து சுக்கிர பகவானை வழிபடலாம்.

இதையும் படிக்கலாமே:
தன தானியத்தை அள்ளித் தரும் தாந்திரீக பரிகாரங்கள். இந்த சூட்சமங்களை நீங்கள் அறிந்து கொண்டாலே போதும் செல்வ செழிப்புடன் வாழ்வது உறுதி

பணம் வைக்கும் இடங்களில் வெள்ளி பொருட்கள் இருப்பது விசேஷமானது. வெள்ளியால் ஆன கீ செயின்கள் கொண்டு பணத்தை அல்லது நகைகளை பூட்டி வைக்கலாம். சாவிக் கொத்து வெள்ளியால் இருப்பது விசேஷமானது, இதனால் குடும்பத்தில் படிப்படியான முன்னேற்றம் இருக்கும். ஜோடி மீன்கள், யானை, குதிரை, நிலவு போன்ற வெள்ளியால் ஆன பொருட்களை பயன்படுத்தலாம். வெள்ளி மோதிரம், செயின், டாலர் போன்றவற்றை அணிவதால் கையில் பணம் அதிகம் புழங்கும். குறிப்பாக பெண்கள் வெள்ளியில் மோதிரம் அணிவது அவர்களுடைய சொந்த உழைப்பால் சம்பாதிக்க செய்யும்.

- Advertisement -