முருகரை இப்படி வழிபாடு செய்தால் கணவரின் ஆயுள் பலம் கூடும். தீர்க்க சுமங்கலி வரத்தை பெறலாம். பெண்கள் கட்டாயம் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டிய வழிபாடு.

murugan
- Advertisement -

திருமணமான பெண்கள் எல்லோருமே நினைக்க கூடிய ஒரு விஷயம் இது தான். சுமங்கலியாக இருக்க வேண்டும், சுமங்கலியாக இறக்க வேண்டும் என்பது. கணவனின் ஆயுள் அதிகரிக்க, கணவன் சந்தோஷமாக வாழ தினம் தினம் சுமங்கலி பெண்கள் பிரார்த்தனை வைப்பது வழக்கம். அந்த காலமாக இருந்தாலும் சரி, இந்த காலமாக இருந்தாலும் சரி, கணவர் நன்றாக இருக்க வேண்டும் என்று வேண்டிக் கொள்ளக் கூடிய பெண்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆகவே எவ்வளவு தான் நவ நாகரீகமாக இந்த உலகம் மாறினாலும், கணவன் மனைவி உறவு, மாங்கல்யம் இதற்கு இருக்கக்கூடிய மதிப்பும் மரியாதையும் குறைய போவது கிடையாது.

உங்களுடைய கணவர் நல்ல ஆயுளுடன் ஆரோக்கியத்துடன் சந்தோஷமாக வாழவும், இந்த பரிகாரத்தை செய்யலாம். சில பேருக்கு மாங்கல்ய தோஷம் இருக்கும். அந்த மாங்கல்ய தோஷம் சரி செய்ய நிறைய பரிகாரங்கள் ஆன்மீகத்தில் இருந்தாலும், இந்த வழிபாடு உங்களுடைய தோஷத்தை நீக்க ஒரு எளிமையான பரிகாரமாக அமையும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த பரிகாரத்தை நாமும் தெரிந்து கொள்வோம்.

- Advertisement -

பெண்கள் தீர்க்க சுமங்கலி வரத்தை பெற செய்ய வேண்டிய வழிபாடு:
இந்த வழிபாடை செய்பவர்களாக இருந்தாலும் சரி, வழிபாட்டை செய்யவில்லை என்றாலும் சரி, உங்களுடைய வீட்டில் முருகனுடைய திருஉருவப்படம், வள்ளி தேவையானையோடு இருக்க வேண்டும். இது குடும்ப ஒற்றுமைக்கு, கணவன் மனைவி ஒற்றுமைக்கு ரொம்ப ரொம்ப நல்லது. உங்கள் வீட்டு பூஜை அறையில் இந்த திருவுருவப்படம் இல்லை என்றால் முதலில் வாங்கி வைத்து விடுங்கள்.

திங்கட்கிழமைகளில் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். 27 திங்கட்கிழமை முருகரின் பாதங்களில் ஒரு மஞ்சள் கயிறை வைத்து விட்டு, குலதெய்வத்தை நினைத்து விளக்கு ஏற்றி, மனப்பூர்வமாக கணவருக்காக பிரார்த்தனை செய்து கொள்ளுங்கள். பிரார்த்தனையை முடித்துவிட்டு இரண்டு கற்கண்டு நெய்வேதியம் ஆக வைத்து கற்பூர ஆரத்தி காண்பித்து பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள். குங்குமத்தை நெற்றியிலும் மாங்கல்யத்திலும் இட்டுக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு திங்கட்கிழமை இந்த வழிபாடு முடிந்தவுடன் அந்த மஞ்சள் கயிறை எடுத்து டப்பாவில் போட்டு சேகரிக்கவும். இதே போல 27 திங்கட்கிழமைகள் இந்த வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். இடையே மாதவிடாய் நாட்கள் வரும்போது பூஜை செய்ய வேண்டாம். அதை தவிர்த்து விட்டு அடுத்த பூஜையை கணக்கு வைத்துக் கொள்ளுங்கள். மொத்தமாக 27 வாரம் திங்கட்கிழமை பூஜை முடிந்திருக்கும். 27 மஞ்சள் கயிறு சேர்ந்திருக்கும் அல்லவா.

இதையும் படிக்கலாமே: நாளைய தினம் ஆனி உத்திரத்திற்கு சிவ பெருமானுக்கு உகந்த இந்தப் பொருட்களை ஆலயத்திற்கு வாங்கி கொடுத்தால் உங்கள் வாழ்நாள் முழுவதும் நோய் நொடி இன்றி செல்வ செழிப்புடன் வாழலாம்.

இந்த திருமாங்கல்யகயரை கொண்டு போய் கோவிலில் நின்று அந்த கோவிலுக்கு வரும் சுமங்கலி பெண்களுக்கு தானமாக கொடுக்க வேண்டும். வெற்றிலை பாக்கு, பூ, பழம், மஞ்சள் குங்குமம், கூடவே இந்த திருமாங்கல்யகயிறையும் வைத்து தானம் கொடுத்து விட்டால் மாங்கல்ய தோஷம் நீங்கும். உங்களுக்கு மாங்கல்யம் தோஷம் இல்லை என்றாலும் இந்த பரிகாரத்தை செய்தால், கணவரின் ஆயுள் நீடிக்கும். நீங்கள் தீர்க்க சுமங்கலியாக இருக்கலாம். ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரத்தில் நம்பிக்கை உள்ளவர்கள் பின்பற்றி பலன் பெறலாம் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -