வெயிலினால் கருத்த முகத்தை உடனே வெள்ளையாக மாற்ற ஃபேஸ் பேக்

athimathuram sunlight face
- Advertisement -

கோடை காலம் வந்தாலே பலரும் பலவிதத்தில் அச்சம் கொண்டாலும் இந்த முக கருமையை நினைத்து அனைவருமே கொஞ்சம் அதிகமாகவே பயப்படத் தான் செய்வார்கள். இத்தனை காலம் பார்த்து பார்த்து முகத்தை பராமரித்து வந்திருந்தாலும் கூட, ஒரு நாள் வெயிலில் அலைந்து திரிந்து விட்டு வந்தால் உடனே முகம் கருப்பாக மாறிவிடும்.

அதை அப்படியே விட்டு விட்டால் நிரந்தரமாகவே அந்த கருமை நிற முகத்தில் தங்கி விடும். இவற்றை சரி செய்யக் கூடிய எளிமையான ஒரு குறிப்பு பற்றி தான் அழகு குறிப்பு பற்றிய இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

வெயிலினால் கருத்த முகம் உடனே மாற ஃபேஸ் பேக்.

முதலில் வெயில் காலத்தில் மற்ற நேரத்தை விட அதிகமாக நாம் முகப்பொலிவிற்கு அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அதிக அளவில் தண்ணீர் குடிப்பது தேவையான அளவு புரோட்டீன்களை எடுத்துக் கொள்வது போன்றவற்றை சரியாக செய்ய வேண்டும்.

வெயில் சென்று வந்த உடனே முகம் கருத்துப் போவதற்கு முகத்தில் மெல்டின் அதிகமாக சுரப்பதே காரணம் அதை உடனே சரி செய்யா விட்டால் அதுவே நிரந்தரமான நிறம் ஆகி விடும். அதற்கு ஒரு பவுலில் புளித்த தயிரை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக் கொள்ளுங்கள். இதில் கொஞ்சம் கஸ்தூரி மஞ்சள் அல்லது சாதாரண மஞ்சள் ஏதேனும் ஒன்றை சேர்த்து குழைத்து உடனே முகத்திற்கு ஃபேஸ் பேக் போல போட்டு விடுங்கள்.

- Advertisement -

பத்து நிமிடம் கழித்து முகத்தை அலம்பி விட்டால் வெயிலில் சென்று வந்ததினால் ஏற்பட்ட கருமை நிறம் உடனே மறைந்து விடும். இதை வெளியில் எப்போது சென்று வந்தாலும் உடனே இந்த பேக்கை போட்டு விடுங்கள். அதே போல் அதிமதுரம் ஒரு ஸ்பூன் ஒரு ஸ்பூன் கற்றாழை ஜெல் இவை இரண்டையும் கலக்க கொஞ்சமாக பன்னீர் ஊற்றி கொள்ளுங்கள் இவை மூன்றையும் ஒன்றாக பேஸ்ட் போல குழைத்து முகத்தில் போட்டு கொள்ளுங்கள்.

அதன் பிறகு இந்த கலவை முகத்தில் போட்டு 20 நிமிடம் வரை அப்படியே விட்டு விடுங்கள். அதன் பிறகு முகத்தை அலங்கினால் போதும் நிறம் கருகாமல் அப்படியே முகம் பொலிவுடன் காணப்படும். இந்த அதிமதுரத்திற்கு முகத்தில் சுரக்கக் கூடிய மெலடினை குறைக்கும் ஆற்றல் அதிகம் உள்ளதாக சொல்லப்படுகிறது. இதனால் முகம் கருக்காமல் காக்க முடியும்.

- Advertisement -

இத்துடன் முகம் எப்போதும் இளமையாக தோற்றமளிக்க சிறிதளவு கேரட் பீட்ரூட் இரண்டையும் நன்றாக அரைத்து கொள்ளுங்கள். இதில் அரிசி மாவு அல்லது கடலை மாவு ஏதேனும் ஒன்று சேர்த்து கொஞ்சமாக தேனையும் ஊற்றி குழைத்துக் கொள்ளுங்கள். இதை முகத்தில் பேக் போட்டு 20 நிமிடம் விட்டுவிட்டு அதன் பிறகு சுத்தம் செய்து விடுங்கள்.

இதையும் படிக்கலாமே: கலங்கமற்ற அழகான முகத்தைப் பெற முருங்கைக்கீரை ஃபேஸ் பேக்

இந்த பேக்கை தொடர்ந்து பயன்படுத்துவதால் முகத்தின் கருமை நிறம் நீங்கி பளிச்சென்று மின்னுவதுடன் வயதான தோற்றத்தையும் தடுக்கக் கூடிய ஆற்றல் இதில் சேர்த்திருக்கும் தேனிற்கு உண்டு. வெயில் காலத்தை நினைத்து கவலைப்படாமல் இந்த மூன்று பேக்கில் ஏதேனும் ஒன்று முயற்சி செய்து பாருங்கள் உங்கள் முகம் எப்போதும் வெள்ளையாகவே தங்கம் போல ஜொலிப்புடன் இருக்கும்.

- Advertisement -