கலங்கமற்ற அழகான முகத்தைப் பெற முருங்கைக்கீரை ஃபேஸ் பேக்

drumstick leaves face pack
- Advertisement -

கலங்கமற்ற முகத்தை பெற வேண்டும் என்பதுதான் பல பெண்களின் கனவாகவே திகழ்கிறது. என்னதான் இருந்தாலும் ஒரு பரு வந்தால் கூட அந்த முகத்தின் அழகு பாழாகிவிடும். பருக்கள் வருவதோடு விடுகிறதா ஒரு பருவை தொடர்ந்து பல பருக்கள் வருகின்றது. அந்த பருக்கள் வந்து சென்ற பிறகு அந்த பருக்கள் வந்ததற்குரிய தழும்புகள் தென்படுகிறது. அடுத்ததாக அதில் கரும்புள்ளிகள் வரும். இப்படி நாம் முகத்தில் பல பிரச்சனைகளை சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறோம். இந்த பிரச்சனைகள் அனைத்தையும் நீக்குவதற்கு உதவக்கூடிய முருங்கைக்கீரை ஃபேஸ் பேக்கை பற்றி தான் இந்த அழகு குறிப்பு குறித்த பகுதியில் நாம் பார்க்க போகிறோம்.

முருங்கைக் கீரையில் பல அற்புதமான சத்துக்கள் நிறைந்து இருக்கிறது என்பது பலரும் அறிந்ததே. இந்த முருங்கைக் கீரையை தினமும் உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான அனைத்து விதமான சத்துக்களும் கிடைக்கிறது. உடல் ஆரோக்கியமாக திகழும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

- Advertisement -

உடலுக்கு எந்தளவுக்கு சத்துக்கள் தேவையோ அதே அளவிற்கு தான் நம்முடைய சருமத்திற்கும் சத்துக்கள் தேவைப்படுகிறது. முருங்கைக்கீரையில் இருக்கக்கூடிய அனைத்து விதமான சத்துக்களும் நம் சருமத்திற்கும் மிகவும் உறுதுணையாக திகழக்கூடிய ஒன்று என்பதால் தான் ஆரோக்கியம் மிகுந்த இந்த முருங்கைக்கீரை வைத்து நாம் ஃபேஸ் பேக் செய்ய போகிறோம்.

முதலில் கொழுந்து கீரையாக இரண்டு கைப்பிடி அளவு பறித்துக் கொள்ளுங்கள். இதை சுத்தமாக தண்ணீர் ஊற்றி கழுவி தண்ணீர் இல்லாமல் வடித்து வைத்துக் கொள்ளுங்கள். ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து இந்தக் கீரை அனைத்தையும் சேர்த்து விட்டு இதை பேஸ்ட் ஆக அரைப்பதற்கு பன்னீரை ஊற்றி அரைத்துக் கொள்ளுங்கள். இது கிட்டத்தட்ட இரண்டு ஸ்பூன் அளவிற்கு வரும். இந்த முருங்கைக்கீரை பேஸ்ட்டை ஒரு பவுலில் மாற்றிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதனுடன் நாம் ஒரு டேபிள் ஸ்பூன் அளவு பச்சரிசி மாவை சேர்க்க வேண்டும். முடிந்த அளவிற்கு பச்சரிசி மாவை வீட்டிலேயே கொரகொரப்பான முறையில் தயார் செய்து வைத்துக் கொள்ளுங்கள். கடையிலிருந்து வாங்குவதை தவிர்ப்பது நல்லது. பிறகு இதனுடன் ஒரு டேபிள்ஸ்பூன் அளவிற்கு சுத்தமான தேனை சேர்க்க வேண்டும். இவை மூன்றையும் நன்றாக கலந்து கொள்ள வேண்டும். அவ்வளவுதான் நம்முடைய முகத்தை பால் போல் வெண்மையாக மாற்றக்கூடிய ஒரு ஃபேஸ்பேக் தயாராகிவிட்டது.

தினமும் காலையில் இந்த ஃபேஸ் பேக்கை முகத்தில் தடவி அரை மணி நேரம் அப்படியே விட்டுவிட்டு பிறகு குளிக்க செல்லலாம். இப்படி நாம் தினமும் செய்து வர நம் முகத்தில் இருக்கக்கூடிய பருக்கள், கரும்புள்ளிகள், வடுக்கள், சூரிய ஒளியால் ஏற்பட்ட கருமை, கருத்திட்டுகள் என்று அனைத்து விதமான பிரச்சினைகளும் படிப்படியாக மறைந்து முகம் பால் போல் வெள்ளையாகவும், பளிங்கு போல் வழவழப்பாகவும் தென்படும்.

இதையும் படிக்கலாமே: இளமையாக இருக்க உதவும் கடுக்காய்

மிகவும் எளிதில் கிடைக்கக்கூடிய இந்த மூன்று பொருட்களை நாமும் பயன்படுத்தி நம் முகத்தை மாசு மரு அற்ற கலங்கமற்ற முகமாக மாற்றிக் கொள்வோம்.

- Advertisement -