திருஷ்டி தோஷம் விலக பரிகாரம்

hanuman pray
- Advertisement -

பொதுவாக நம் ஒருவருடைய வாழ்க்கையில் ஏற்படும் முன்னேற்றத்தை தடுக்கக் கூடிய சக்தி இந்த திருஷ்டி தோஷத்திற்கு ஒன்று. நம் வீட்டின் அருகில் இருப்பவர்களோ நம் உறவினர்களோ அல்லது நண்பர்களோ நம்முடைய முன்னேற்றத்தை பார்த்து பொறாமைப்பட்டு ஒரு வார்த்தையோ அல்லது பார்வையோ பார்த்தால் போதும் நம்முடைய முன்னேற்றத்தில் நிச்சயம் வீழ்ச்சி ஏற்படும்.இது அனைவர் பார்க்கும் பார்வையிலும் வரும் என்று சொல்ல முடியாது.

அதாவது இவர்கள் இப்படி இருக்கிறார்களே என்று வயிற்றெரிச்சல் உடன் பார்ப்பார்கள் பேசுவார்கள் அது தான் நம்ம துன்பப்படுத்தும். அது மட்டும் இன்றி சில நேரங்களில் நம்முடைய கிரக கோளாறு தோஷங்கள் போன்றவையும் நம்முடைய முன்னேற்றத்திற்கு தடையாக இருக்கும். இவற்றையெல்லாம் சரி செய்வதற்கான ஒரு எளிய பரிகார முறையை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

திருஷ்டி தோஷங்கள் விலக பரிகாரம்

இந்த பரிகாரம் செய்ய நீங்கள் எந்தவித பூஜை புனஸ்காரங்களும் செய்ய வேண்டியது கிடையாது. அதுமட்டுமின்றி இது திருஷ்டி கழிப்பது போன்ற முறையும் கிடையாது. இந்த முறை கொஞ்சம் வித்தியாசமானது. அதே நேரத்தில் நம்முடைய தோஷங்கள் திருஷ்டிகள் நீங்குவதுடன் நல்ல ஆற்றலையும் உருவாக்கித் தரக் கூடியது. அது என்னவென்று பார்க்கலாம்.

இந்த பரிகாரமானது நாம் ஒரு ஆலய தரிசனத்தை காண்பது தான் ஆலயம் என்றால் உடனே பதற வேண்டாம். நம் வீட்டில் அருகில் இருக்கும் ஆஞ்சநேயரை ஞாயிற்றுக்கிழமை நேரத்தில் தரிசனம் செய்ய வேண்டும். அதுவும் ஆஞ்சநேயருக்கு அபிஷேகம் செய்யும் போது பார்க்க வேண்டும் இது தான் மிகவும் முக்கியம். அது எந்த நேரத்தில் செய்வார்கள் என்பதை முன்கூட்டியே தெரிந்து வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

இதை மாதத்தில் ஒரு ஞாயிற்றுக்கிழமை செய்தால் கூட போதும். அந்த தரிசனம் பார்த்து முடியும் வரை அசைவம் சாப்பிடாமல் இருந்து அதன் பிறகு சாப்பிடலாம் ஒன்றும் தவறில்லை. ஞாயிற்றுக்கிழமையில் நாம் செய்யும் ஆஞ்சநேய அபிஷேக தரிசனமானது நம்முடைய அனைத்து பிணி,பீடை, தரித்திரம் திருஷ்டி தோஷம் அனைத்தையும் நீக்கி விடும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு காரணம் அனைத்தையும் நீக்கக் கூடிய ஆற்றல் பெற்றவர் இந்த ஆஞ்சநேயர்.

இதையும் படிக்கலாமே: பண வரவை தரும் பஞ்சமி வழிபாடு

நம்முடைய பரிகார முறையில் பல தாந்த்ரீக பரிகார முறைகள் உண்டு. அவற்றை ஞாயிற்றுக்கிழமையில் செய்யும்போது அதற்கான பலன் பல மடங்கு இருக்கும்.இந்த முறையில் நம்பிக்கை இருப்பவர்கள். ஞாயிற்றுக்கிழமை வேளையில் ஆஞ்சநேயரின் இந்த தரிசனத்தை கண்டு எந்தவித திருஷ்டி தோஷமும் இல்லாத அமைதியான ஒரு வாழ்க்கையை வாழலாம் என்ற தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -