சுலபமாக சம்பாதிக்க ஒரே வழி கல்லுப்புக்கு மேல் இந்த கல்லை வைப்பது தான். கட்டு கட்டா பணம் சேர எந்த தடையும் வராது.

cash2
- Advertisement -

பணம் சம்பாதிப்பது ஒன்றும் அவ்வளவு பெரிய கஷ்டமான விஷயம் அல்ல. நீங்கள் செய்யும் வேலையை நேசித்து, விரும்பி சந்தோஷமாக செய்தாலே போதும். பணம் விரும்பி உங்களிடம் வரத் தொடங்கிவிடும். எந்த வேலையை தொட்டாலும் ஒரு அலுப்பு, எந்த வேலையை தொட்டாலும் ஒரு சோம்பேறித்தனம், எதிலுமே ஆர்வம் இல்லாமல் வெறும் பணம் சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக கடமைக்காக நாம் எதையுமே செய்யக்கூடாது.

ஆசைப்பட்டு விருப்பப்பட்டு செய்யக்கூடிய வேலை தொழில் எல்லாமே நமக்கு பண வரவை நிரந்தரமாக கொடுக்கும். நீங்கள் வேண்டுமென்றால் மூன்று மாதம் மேல் சொன்ன இந்த விஷயங்களை எல்லாம் பின்பற்றி பாருங்கள். நீங்கள் இதற்கு முன்பு சம்பாதித்த வருமானத்திற்கும், இஷ்டப்பட்டு உழைத்து வரக்கூடிய வருமானத்திற்கும் நிறையவே வித்தியாசத்தை பார்க்க முடியும்.

- Advertisement -

சரிங்க, விருப்பமில்லாமல் பணம் சம்பாதிக்கவில்லை. இஷ்டப்பட்டு உழைத்தும் கஷ்டப்பட்டு உழைத்தும் கைக்கு வந்த வருமானம் நிலையாக நிற்பதில்லை. சில பேருக்கு வருமானமே இல்லை. இதை சரி செய்ய என்ன செய்வது. இப்படி இஷ்டப்பட்டு உழைத்தும் நமக்கு பணம் வரவில்லை என்றால், கட்டாயமாக கண்ணுக்கு தெரியாத எதிர்மறை ஆற்றலால் நம்முடைய வீட்டிற்கும், நமக்கும் ஏதோ ஒரு பிரச்சனை இருக்குது அப்படின்னு அர்த்தம். அதை சரி செய்ய ஆன்மீகத்தில் ஒரு எளிமையான பரிகாரம் சொல்லப்பட்டுள்ளது. அதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

சூப்பரான பண வரவை கொடுக்கும் சுர்மா கல்:
சுலபமான பண வரவை பெறுவதற்கு நமக்கு உதவியாக இருக்கப்போகும் கல் சுர்மா கல். இந்த கல் நாட்டு மருந்து கடைகளில் சொல்லி வைத்தால் சுலபமாக நமக்கு கிடைத்துவிடும். அதை வாங்கிக் கொள்ளுங்கள். ஒரு வெள்ளிக்கிழமையாக பார்த்து வீட்டில் மகாலட்சுமியை நினைத்து சின்ன பூஜை செய்ய வேண்டும். விளக்கு ஏற்றி வைத்துவிட்டு மணக்க மணக்க சாம்பிராணி தூபம் போட்டு வைத்து விட்டு, பூஜை அறையில் குலதெய்வத்தையும் மகாலட்சுமியும் நினைத்து வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

ஒரு சிறிய கண்ணாடி அல்லது பீங்கான் கிண்ணத்தில் நிரம்ப கல்லுப்பு வையுங்கள். அதன் மேலே இந்த ஒரு சுர்மா கல்லை வையுங்கள். பூஜை அறையிலையே இந்த கிண்ணத்தை தயார் செய்து மகாலட்சுமி தாயாரின் படத்திற்கு முன்பு வைத்து பணவரவில் எந்த தடையும் இருக்கக் கூடாது என்று வேண்டிக்கொண்டு இந்த கிண்ணத்தை அப்படியே கொண்டு போய் பணம் வைக்கும் பெட்டிக்குள் வைத்து விடலாம். பீரோவுக்குள் வைத்து விடலாம். இதை தொழில் செய்யும் இடத்திலும் வைக்கலாம். கீழே சிந்தாமல் பத்திரமாக ஜாக்கிரதையாக கொஞ்சம் வையுங்கள்.

அவ்வளவுதான் உங்களுடைய வீட்டிலும் சரி அல்லது தொழில் செய்யும் ஸ்தாபனத்திலும் சரி பணம் வருவதற்கு ஏதாவது தடை இருந்தால் அதை உடைக்கக் கூடிய திறன் இந்த சின்ன பரிகாரத்திற்கு உண்டு. இந்த இரண்டு பொருளுக்கும் எதிர்மறை ஆற்றலை அழிக்கும் சக்தி உண்டு.

- Advertisement -

இதை எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மாற்றுவது. சுர்மா கல்லை மாற்ற தேவையில்லை. பவுலில் இருக்கக்கூடிய கல்லுப்பில் மட்டும் எதிர்மறை ஆற்றல் ஈர்க்கப்பட்டு இருக்கும். அதை வாரம் ஒரு முறை எடுத்து தண்ணீரில் கரைத்து விட்டு மீண்டும் புதியதாக கல் உப்பு கொட்டி அதற்கு மேலே பழைய சுர்மா கல்லை வைத்து பண பெட்டியல் வைத்துவிடலாம்.

இதையும் படிக்கலாமே: கொடுத்த பணத்தை திரும்ப பெற வெறும் ஆறு மொச்சை பயிரை இப்படி பயன்படுத்தினால் போதும். பணத்தை திருப்பி தரவே வேண்டாம் என்று நினைத்தவர் கூட தேடி வந்து திருப்பித் தருவார்கள்.

இதே போல இரண்டு மூன்று கிண்ணங்களை தயார் செய்து வரவேற்புரை, படுக்கையறையில் கூட வைக்கலாம். தவறு கிடையாது. அந்த இடத்தில் இருக்கக்கூடிய நெகட்டிவ் எனர்ஜி அழியும். மன நிம்மதி கிடைக்கும், மன பயம் இருக்காது. இரவில் நல்ல தூக்கத்தை பெறலாம். கெட்ட கனவுகளும் வராது. நம்பிக்கை உள்ளவர்கள் ஆன்மீகம் சொல்லும் இந்த எளிமையான பரிகாரத்தை பின்பற்றி பலன் பெறலாம்.

- Advertisement -