எந்த நேரத்தில் இவரை வழிபட்டால் செல்வ வளம் நம் வீட்டில் கொழிக்கும் தெரியுமா? ஸ்வர்ண கடவுளை இப்படி வழிபடுங்கள் குப்பையில் இருப்பவரும் கோபுரத்தில் ஏறலாம்!

swarna-bairavar
- Advertisement -

நம்முடைய இந்து சாஸ்திரத்தில் வெவ்வேறு தெய்வங்கள், வெவ்வேறு விதங்களில் அருள் புரிபவையாக இருக்கின்றார்கள். அந்த வகையில் செல்வம் பெருகவும், குடும்பத்தில் சுபிட்சம் நிலைக்கவும், அள்ள அள்ள குறையாத ஸ்வர்ணங்கள் சேரவும் மகாலட்சுமியை வழிபடுவது உண்டு. அதற்கு இணையாக இந்த ஒரு கடவுளையும் வணங்கி வரலாம். இவரை எப்படி வழிபட வேண்டும்? இதனால் கிடைக்கக்கூடிய பலன்கள் என்னென்ன? என்பது தான் இந்த ஆன்மீகம் சார்ந்த குறிப்புகளின் மூலம் இனி நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

பைரவர்களில் பல ரூபங்கள் இருப்பதாக ஆன்மீக நூல்கள் குறிப்பிடுகிறது. அதில் சிலவை மட்டுமே புழக்கத்தில் நாம் வழிபட்டு வருகின்றோம். அதிலும் குறிப்பாக கால பைரவரை வழிபடும் பொழுது, வந்த துன்பங்கள் எல்லாம் விலகி ஓடுவதாக நம்பிக்கை பக்தர்களிடையே உண்டு. துஷ்டர்களை அழித்து, பகைவர்களை ஒழித்து, குடும்பத்தில் நிம்மதி இருக்க இவரை வழிபடுவார்கள். மன பயம் நீங்கவும், கடன் தீரவும் பைரவரை வழிபடுவார்கள். அது போல ஸ்வர்ண ஆகர்சன பைரவர் செல்வங்களை வாரி வழங்குபவராக இருக்கின்றார். இந்த கலியுகத்தில் கண்கண்ட தெய்வமாக விளங்கக்கூடிய இந்த பைரவரை நாம் முறையாக எப்படி வழிபட வேண்டும்?

- Advertisement -

கால சக்கரத்தை மாற்றி அமைக்கக்கூடிய தன்மை கால பைரவருக்கு உண்டு. அது போல வீட்டில் ஸ்வர்ணங்களை பெருகக்கூடிய சக்தி ஸ்வர்ண ஆகர்சன பைரவருக்கு உண்டு. சுவர்ண ஆகர்ஷன பைரவர் படம் ஒன்றை வீட்டில் வைத்துக் கொள்வது சுபீட்சமான நல்ல பலன்களை கொடுக்கக் கூடியதாக இருக்கும்.

இவருக்கு தேய்பிறை அஷ்டமி திதி என்பது ரொம்பவும் விசேஷமான திதியாக இருக்கிறது. இந்த திதியில் தான் பைரவரையும், கால பைரவரையும் மக்கள் வழிபடுகின்றனர். அதே போல ஸ்வர்ண ஆகர்சன பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் சிகப்பு நிற வஸ்திரம் அணிந்து கொண்டு, சிகப்பு நிற மலர்களை அவருக்கு சாற்றி, நெய் விளக்கு ஒன்றை ஏற்ற வேண்டும். பிறகு வடைகளை மாலையாக கோர்த்து அவருக்கு அணிவிக்க வேண்டும்.

- Advertisement -

பிறகு வெள்ளை நிற பூசணிக்காயை கொண்டு அதில் உள்ளிருக்கும் விதைகளை எல்லாம் எடுத்துவிட்டு, ஒரு தீபம் போல மாற்றிக் கொள்ள வேண்டும். பின்னர் அதில் நெய் ஊற்றி திரி போட வேண்டும். இதில் விளக்கு ஏற்றி வழிபட வேண்டும். பூசணிக்காய் தீபம் ஒன்றை ஸ்வர்ண ஆகர்சன பைரவருக்கு தேய்பிறை அஷ்டமியில் ஏற்றி வருபவர்களுக்கு குறைவற்ற செல்வமும், வறுமை இல்லா வாழ்வும் நிலைக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே:
மருதாணியை இப்படி கையில் வைத்துக் கொண்டிருக்கும் பெண்களுக்கு தரித்திரம் தான் பிடிக்கும். மருதாணியை கையில் வைத்திருக்கும் பெண்கள் எதையெல்லாம் செய்யக்கூடாது என்று உங்களுக்கு தெரியுமா?

மேலும் இவரை நம்பிக்கையுடன் பிரார்த்தனை செய்து தினமும் தூபம் காண்பித்து, தீபம் ஏற்றி வர வேண்டும். தேய்பிறை அஷ்டமி அன்று குத்துவிளக்கு ஒன்றை வைத்து விளக்கு பூஜை செய்து வந்தாலும், குடும்பத்தில் செல்வ செழிப்பிற்கு குறைவே இருக்காது. எத்தகைய கஷ்ட நிலையிலும், மேலே தூக்கி விடக் கூடிய இந்த சக்தி வாய்ந்த சுவர் ஆகர்ஷண பைரவருக்கு காயத்ரி மந்திரங்கள் உண்டு. பைரவர் காயத்ரி மந்திரம், பைரவி காயத்ரி மந்திரம் ஆகியவற்றை தேய்பிறை அஷ்டமியில் தவறாமல் வாசித்து முழு மனதார வழிபடுபவர்களுக்கு இவருடைய அருள் எப்பொழுதும் இருக்கும். இதனால் தடையில்லாத வருமானமும், சுகபோக வாழ்க்கையும் கிடைக்கக்கூடிய நற்பலன்கள் உண்டாகும்.

- Advertisement -