உங்களுடைய வீட்டில் தையல் மெஷின் இருக்கா? உங்களுக்கு வரப்போகும் கஷ்டங்களை தடுக்க, இதை நீங்கள் தெரிஞ்சுக்கிட்டேதா ஆகணும்.

pillaiyar
- Advertisement -

நம்மில் நிறைய பேர் வீட்டில் இருக்கக்கூடிய பொருட்களில், இந்த தையல் மெஷினும் அடங்கும். வாஸ்து ரீதியாக எந்தெந்த பொருட்களை எந்தெந்த இடத்தில் வைக்க வேண்டும் என்று, இந்த காலகட்டத்தில் பலருக்கு பலவிதமான சந்தேகங்கள் இருந்துதான் வருகின்றது. அந்த வரிசையில் இந்த தையல்மிஷினை ஒரு வீட்டில் வைத்துக் கொள்ளலாமா? வைத்துக் கொள்ளக் கூடாதா? அப்படியே வீட்டில் இருந்தால், அது எந்த திசையில் இருக்க வேண்டும். கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருவதற்கு இந்த தையல் மெஷின் ஒரு காரணமாக இருக்கிறதா? இந்த தையல் மெஷினினால் வீட்டில் பிரச்சனை வராமல் இருப்பதற்கு என்ன பரிகாரம் செய்ய வேண்டும்? இப்படிப்பட்ட பலவிதமான சந்தேகங்களுக்கு ஒரு தீவை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

tailor

பல வீடுகளில் தையல் தொழிலை செய்து தான் தங்களுடைய வாழ்வாதாரத்தை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக வீட்டில் இருக்கும் பெண்கள் தையல் கலையை கற்றுக் கொண்டு, தங்களால் முடிந்த வருமானத்தை தன்னுடைய குடும்பத்திற்காக சம்பாதித்துக் கொடுக்கிறார்கள். இதையெல்லாம் விட நாம் அணியும் ஆடையை தைத்து தரக்கூடிய ஒரு பொருள் தையல் மெஷின். சுருக்கமாக சொல்லப் போனால் நம் மானத்தை காப்பதில் இந்தத் தையல் மிஷனுக்கு ஒரு முக்கிய பங்கு உண்டு. ஒரு மனிதனுக்கு ஆடை என்பது எவ்வளவு முக்கியம். அந்த ஆடையை தைக்கும் தையல் மெஷின் அப்போது முக்கியம் தானே.

- Advertisement -

சரி, இந்தத் தையல் மெஷின் மிகவும் கனமானது. இரும்பினால் செய்யப்பட்டது. அதுவும் அல்லாமல் அதில் கூர்மையான ஊசி உள்ளது என்பதால், அதை படுக்கையறையில் வைத்துக் கொள்ளக் கூடாது என்று சொல்கிறார்கள். இதையெல்லாம் தாண்டி தையல் மெஷின் ராகுவின் அம்சமாகவேம் சொல்லப்பட்டுள்ளது.

tailor1

தையல்மிஷினை படுக்கை அறையில் வைப்பதன் மூலமாகத்தான் கணவன் மனைவிக்குள் பிரச்சனை வருகிறது என்ற குழப்பம் உங்கள் மனதிற்குள் இருந்தால், அதை படுக்கை அறையில் வைத்துக் கொள்ளாதீர்கள். உங்களுடைய வீட்டில் வேறு ஏதேனும் இடத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வீட்டில் தையல் மிஷினை வைத்து தைப்பவர்கள், அந்த தையல்மிஷினை எந்த திசையில் வைக்கலாம் என்றால், தெற்கு அல்லது தென் மேற்கு திசையில் வைத்துக் கொள்வது நல்ல பலனைக் கொடுக்கும். ஏனென்றால் இந்த இடத்தில் அதிக எடைகொண்ட பொருட்கள், குறிப்பாக இரும்பு பொருட்களை நாம் வைக்கலாம். நம் வீட்டு பீரோ பெரும்பாலும் அந்த திசையில் தான் இருக்கும் அல்லவா?

vasthu

கடைகளில் நீங்கள் தையல் மிஷினை வைத்து வியாபாரம் செய்பவர்களாக இருந்தால், அந்தக் கடைக்கு, வாஸ்து பார்த்து இந்த திசையில் தான் தையல்மிஷினை வைக்க வேண்டும் என்ற எந்த கட்டாயமும் கிடையாது. தொழில் செய்யும் இடத்தில், இட வசதிக்கேற்ப உங்களது தையல் மெஷினை வாங்கிப் போட்டு, உங்களுக்கு எது சவுகரியம் ஆக இருக்கிறதோ அதன்படி அந்த திசையில் வைத்துக் கொள்வதில் தவறு எதுவுமே கிடையாது என்பதையும் நீங்கள் நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

tailor-mechine

உங்களுக்கு வாழ்வாதாரத்தை தரும், உங்களுக்கு வருமானத்தைத் தரும் தையல் மெஷினின் மூலமாகத்தான் உங்களுடைய வீட்டில் பிரச்சினை வருகிறது என்ற எண்ணத்தை முதலில் நீங்கள் தவிர்த்துவிட வேண்டும். பிரச்சனைகள் வருவதற்கு எப்போதுமே இயந்திரங்கள் காரணமாக இருப்பதில்லை. நம்முடைய மனதுதான் காரணம். உங்களுடைய வீட்டில் தையல்மிஷினை தாராளமாக வைத்துக் கொள்ளலாம். தையல் மெஷின் இல்லாத வீட்டில் கணவன் மனைவிக்குள் குடும்ப பிரச்சனை வருவதில்லையா? ஏதாவது ஒரு விஷயத்தில் அது வந்து கொண்டுதான் இருக்கும். அது இயல்பு.

arasa-mara-pillaiyar

சரிங்க! எவ்வளவு தான் சொல்லியும் உங்களது மனது ஏற்றுக் கொள்ளப்படவில்லை. கஷ்டம் வர தையல் மெஷின் தான் காரணம் என்ற எண்ணம் உங்கள் மனதில் பதிந்து விட்டது. வீட்டில் வைத்து தையல் தொழில் செய்பவர்கள், ஒரு கடையை வாடகைக்கு எடுத்து அந்த கடைக்கு அட்வான்ஸ் கொடுத்து, மாதாமாதம் அந்த கடைக்கு தனியாக வாடகை செலுத்தி தொழிலை நடத்த முடியுமா? தையல் மெஷினால் தான் பிரச்சினை வருகிறது என்று அந்த மெஷினை தூக்கி வெளியே வைத்துவிட்டு நம் வாழ்வாதாரத்தை இழக்க முடியுமா? தொழிலை விட்டால் தான் பிரச்சனை தொடங்கும்.

உங்களுடைய மனதை சமாதானப்படுத்த உங்களுக்கு பிரச்சனைகள் வராமல் இருக்க, ஆன்மீக ரீதியாக ஒரு தீர்வும் உள்ளது. உங்களுடைய தையல் மிஷின் இருக்கும் இடத்தில், நீங்கள் துணிகளை தைக்கும் அந்த இடத்தில் சுவற்றில், ஒரு ஆணியை அடித்து அதில் அரச மரத்தடியில் பிள்ளையார் இருப்பது போல ஒரு பிள்ளையாரை மாட்டி விடுங்கள்.

tailor2

அவ்வளவு தான். வேறு எதுவுமே தேவையில்லை. அந்த தையல்மிஷினால் உங்களுக்கு ஏதாவது ஒரு தோஷம் வரும் என்றாலும், அந்த தோஷத்தை தடுத்து நிறுத்தும் சக்தி அந்த விநாயகருக்கு உண்டு. அந்த மெஷினில் அமர்ந்து உங்களது தொழிலை ஆரம்பிப்பதற்கு முன்பாக அந்த விநாயகருக்கு ஒரு சிறிய நமஸ்காரத்தைப் வைத்துவிட்டு, அதன் பின்பு உங்கள் தொழிலை தொடங்குங்கள். உங்கள் தொழிலும் நன்றாக செல்லும். தோஷங்களும், கெட்டதும் உங்களைவிட்டு விலகிப் போய்விடும் என்ற நம்பிக்கையோடு  இந்த பதிவை நிறைவு செய்து கொள்வோம்.

இதையும் படிக்கலாமே
நெஞ்சில் கட்டியிருக்கும் எப்படிப்பட்ட சளியும் ஒரே நாளில் கரைந்துவிடும். பல நாட்களாக தீராமல் வரும் இருமலையும் சட்டென நிறுத்தும் சக்தி இந்த 1 பொருளுக்கு உண்டு.

இது போன்று மேலும் பல சுவாராஸ்யமான ஆன்மீக தகவல்கள் தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்திருங்கள்.

- Advertisement -