தெரியாமல் செய்த பாவங்களுக்கு கூட விமோசனம் கிடைக்கும். இவர்களுக்கு தானம் செய்தால்!

thaanam
- Advertisement -

நாம் அறிந்தோ அறியாமலோ செய்த பாவத்திற்கு புண்ணியம் தேடுவதற்கான சிறந்த வழி, தானம். இது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். பொதுவாகவே பசுமாடு, ஈ, எறும்பு, வைரவர், காகம், இவைகளுக்கு உணவு அளித்தால் நாம் செய்த பாவங்கள் நீங்கும் என்று சொல்கிறது சாஸ்திரம். ஆனால், இவைகளுக்கு நாம் செய்யும் தானத்தை முறையாகத்தான் செய்கின்றோமா! என்ற சந்தேகத்தை இந்த பதிவின் மூலம் தீர்த்துக் கொள்ளலாம்.

thanam

எல்லா ஜீவராசிகளுக்கும் எப்படி வேண்டும் என்றாலும், எந்த நேரத்தில் வேண்டும் என்றாலும் தானம் செய்வதால் தவறு இல்லை. இருப்பினும், குறிப்பிட்ட இந்த ஜீவராசிகளுக்கு, இந்த முறைப்படி தொடர்ந்து தானம் செய்து வந்தால், நாம் செய்த பாவங்கள் மட்டும் அல்ல, நம் முன்னோர்கள் செய்த பாவங்களால், நாம் அனுபவித்து வரும் கஷ்டத்திற்கு விமோசனம் கிடைக்கும் என்பதில் எந்த ஒரு சந்தேகமும் இல்லை. அது என்ன தானம்? இந்த ஜீவராசிகளுக்கு எப்படி செய்ய வேண்டும்? என்பதை பற்றி பின்வருமாறு தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

முதலில் பசுமாட்டிற்கு வாழைப்பழம் தந்தால் நல்லது என்பது நாம் எல்லோரும் அறிந்த ஒன்றுதான். ஆனால் நாட்டு வாழைப்பழம் 6 என்ற எண்ணிக்கையில் வாங்கி, வாரம் ஒரு முறை அந்தப் பசு மாட்டிற்கு தானம் அளிப்பது மேலும் சிறப்பு என்று சொல்கிறது சாஸ்திரம்.

Pasu

எறும்புகளுக்கு உணவளிக்க வேண்டும் என்பதற்காகத்தான் காலையில் அரிசி மாவில் கோலமிட வேண்டும் என்று சாஸ்திரத்தில் சொல்லப்பட்டுள்ளது. அதே அரிசி மாவில், ஒரு சிட்டிகை மஞ்சள் தூளை கலந்து வாசலில் கோலமிடுவது பலமடங்கு புண்ணியத்தை தேடித்தரும் என்றும் சாஸ்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

- Advertisement -

பைரவரின் வாகனமான நாய்க்கு உணவளித்தால் நல்லது. அதுவும் தேய்பிறை அஷ்டமியில் நாய்க்கு உணவளிப்பது நமக்கு நல்ல பலனை பெற்றுத்தரும். இது நாம் எல்லோரும் அறிந்த தாக இருந்தாலும், தினம்தோறும் சாதத்தில் சிறிதளவு வெல்லம் கலந்து, இரவு நேரத்தில் ஒரு நாய்க்கு உணவளிப்பது நாம் செய்த பாவங்கள் அனைத்தையும் போக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த வரிசையில் உங்களது வீட்டு நாய் இல்லை. வீட்டில் இருக்கும் நாய் அல்லாமல், தெருக்களில் இருக்கும் நாய்களுக்கு உணவளிப்பது சிறந்தது.

dog

தினம் தோறும் நாம் காகத்திற்கு வைக்கப்படும் சாப்பாட்டில் ஒரு சொட்டு தயிரும், சிறிது எள்ளும் கலந்து வைத்தால் நம் முன்னோர்களின் ஆத்மாவானது சாந்தி அடைந்தது, அவர்களின் ஆசீர்வாதத்தை முழுமையாகப் பெற்று, பாவம் இல்லாத வாழ்க்கையை வாழ முடியும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே நீங்கள் மேற்குறிப்பிட்டுள்ள ஜீவராசிகளுக்கு, இதுநாள்வரை எப்படி உணவு வைத்திருந்தாலும், இனிமேல் இந்த முறையில் உணவு வைத்து பாருங்கள்! வாழ்க்கையில் சில முன்னேற்றங்கள் விரைவாக உண்டாவதை உங்களால் நிச்சயம் உணர முடியும்.

- Advertisement -