போட்டித் தேர்வு திருமண தடை குழந்தை பாக்கியம் பெற 12 ராசிகளுக்கான பரிகாரம்

jathagam vetrilai pakku
- Advertisement -

ஒருவருடைய வாழ்க்கை நல்ல முறையில் முன்னேற்றம் அடைய வேண்டும் எனில் அதற்கு அடிப்படையான தகுதி படிப்பு இன்று இந்த படிப்பை வைத்து தான் அனைத்தையும் சாதிக்க முடியும் அடுத்த நிலையானது திருமணம் என்று பலரும் திருமண வயதை கடந்தும் திருமணம் ஆகாமல் இருக்கிறார்கள் இன்றைய காலகட்டத்தில் வர நம்ம அமைவது பெரிய விஷயமாக உள்ளது.

இவை இரண்டும் சரிவர அமைந்து விட்டாலும் அடுத்து இருக்கக்கூடிய ஒன்று குழந்தை பாக்கியம் என்று குழந்தை நல்ல முறையில் பிறக்க வேண்டும் என்றால் பல லட்சங்களை செலவு செய்ய வேண்டிய காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இப்படி ஒரு மனிதன் ஒவ்வொரு கட்டத்தை கடக்கும் போதும் சந்திக்கக் கூடிய பிரச்சனைகளை எளிதில் சரி செய்யக் கூடிய எளிய பரிகாரத்தை தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

மேஷம்,விருச்சிகம்

இவர்கள் பரிகாரத்தை முருக ஆலயத்தில் செய்ய வேண்டும். வீட்டின் அருகில் முருகன் ஆலயம் இல்லாதவர்கள் வீட்டிலே முருகர் படம் அல்லது சிலை வைத்து வழிபாடு செய்யலாம். இந்த பரிகாரத்திற்கு 5 வெற்றிலை, 5 கலிப்பாக்கு, 1 மாம்பழம், மாம்பழம் கிடைக்காத பட்சத்தில் மாதுளை இவைகளை முருகர் படத்திற்கு முன்பாக வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

ரிஷபம்

இவர்கள் வெள்ளிக்கிழமை அன்று காலையில் நவகிரகத்தில் உள்ள சுக்கிர பகவானுக்கு 5 வெற்றிலை, 5 மிளகு, 5 கலிப்பாக்கு வைத்து நெய் தீபம் ஏற்றி வணங்கிய பிறகு நவகிரகத்தை 11 முறை வலம் வர வேண்டும்.

- Advertisement -

மிதுனம், கன்னி

இந்த ராசிக்காரர்கள் புதன்கிழமை அன்று பெருமாள் கோவிலுக்கு சென்று 5 வெற்றிலை, 5 கலிப்பாக்கு, 5 வாழைப்பழம் வைத்து நெய் தீபத்தை ஏற்றி வழிபட வேண்டும்.

கடகம்

இவர்கள் திங்கள்கிழமை அன்று நவகிரகத்தில் உள்ள சந்திர பகவானுக்கு இந்த பரிகாரத்தை செய்யலாம் அல்லது அருகில் உள்ள காளி கோவில் அம்மன் கோவில் போன்ற ஏதேனும் ஒரு ஆலயத்தில் இந்த பரிகாரத்தை செய்யலாம். இவர்களும் 5 வெற்றிலை, 5 கலிப்பாக்கு, 1 மாம்பழம் அல்லது மாதுளை வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

- Advertisement -

சிம்மம்

இவர்கள் ஞாயிற்றுக்கிழமை அன்று நவகிரகத்தில் உள்ள சூரிய பகவானுக்கு 5 வெற்றிலை 5 பாக்கு, 5 வாழைப்பழம். இதற்கு எந்த வாழைப்பழத்தை வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். இதை வைத்து வணங்கிய பிறகு நெய் தீபத்தை ஏற்றி நவகிரகத்தை வலம் வர வேண்டும்.

துலாம்

இவர்கள் வெள்ளிக்கிழமை அன்று பெருமாள் கோவிலில் உள்ள மகாலட்சுமி தாயாருக்கு 5 வெற்றிலை, 5 கலிப்பாக்கு, 5 கிராம்பு வைத்து தீபம் ஏற்ற வேண்டும் இவர்களுடைய கிரகம் தெய்வம் சுக்கிரன் ஆகையால் வெள்ளிக்கிழமை காலை சுக்கிர ஹோரையில் இவர்கள் இந்த பரிகாரத்தை செய்யும் பொழுது நல்ல பலனை பெறலாம்.

தனுஷ், மீனம்

இவர்கள் வியாழக்கிழமை நவகிரகத்தில் உள்ள குரு பகவானுக்கு 5 வெற்றிலை 5 கலிப்பாக்கு, மஞ்சள் நிற வஸ்திரம் வைத்து நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும் வீட்டிற்கு அருகில் குரு ஆலயங்கள் இருந்தால் அங்கு எந்த வழிபாட்டை செய்தால் மேலும் நல்ல பலனை பெறலாம்.

மகரம், கும்பம்

இந்த இரண்டு ராசிக்காரர்களுக்குமே ஒரே விதமான பரிகாரங்கள் தான் இவர்கள் சனிக்கிழமையில் 5 வெற்றிலை, 5 கலிப்பாக்கு, 5 மிளகு வைத்து ஆஞ்சநேயர் கோவிலில் நெய் தீபம் ஏற்றி வழிபட வேண்டும்.

இந்த பரிகாரங்களை பிரம்ம முகூர்த்த வேளையில் செய்வது சிறந்தது சில இடங்களில் பிரம்ம முகூர்த்த வேளையில் கோவில்கள் திறந்திருக்க மாட்டார்கள். அந்த சமயங்களில் அந்தந்த நாளுக்கான ஹோரை காலை 6 மணியிலிருந்து 7 மணி வரை இருக்கும். அந்த நேரத்தில் இந்த பரிகாரத்தை செய்து விடுங்கள். இந்த பரிகாரத்தை குறைத்து 3 வாரங்கள் வரை செய்ய வேண்டும். அதிகபட்சம் 11 வாரங்கள் செய்ய வேண்டும்.

இதையும் படிக்கலாமே:நினைத்தது நிறைவேற வாராகி வழிபாடு

அதே போல் குழந்தை வரம் வேண்டி இந்த பரிகாரத்தை செய்பவர்கள் தம்பதியினராய் செய்ய வேண்டும். திருமணம் ஆக வேண்டி பரிகாரம் செய்பவர்கள் யாருக்கு திருமணம் ஆக வேண்டுமோ அவர்கள் தான் செய்ய வேண்டும். போட்டி தேர்வு படிப்பை பொருத்த வரையில் சிறு பிள்ளைகளாக இருந்தால் மட்டும் பெரியவர்கள் செய்யலாம். இந்த பரிகார முறையில் உங்களுக்கு நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் செய்து பலனை அடையுங்கள்.

- Advertisement -