நீங்கள் செய்யத் தொடங்கும் காரியம் வெற்றி பெறவும், உங்கள் தொழிலில் நல்ல வருமானம் கிடைக்கவும் இந்த வெற்றி திலகத்தை மட்டும் நெற்றியில் வைத்துக் கொள்ளுங்கள்

mai
- Advertisement -

ஒவ்வொரு மனிதனும் தினம் தினம் ஏதாவது ஒரு காரியத்தைத் தொடங்கி வெற்றிகரமாக முடிப்பதற்காக தான் ஒவ்வொரு பொழுதையும் துவங்குகிறான். வேலைக்கு செல்வதாக இருந்தாலும் அவர்கள் தங்கள் வேலையை கவனமாக செய்தால் மட்டுமே அதில் வெற்றி பெற முடியும். அவ்வாறு புதியதாக வேலை தேடி செல்வது, தேனீர் விற்பது, மூட்டை தூக்குவது இவ்வாறு சிறிய தொழில்கள் முதல் பெரிய தொழிற்சாலைகள் வரை அனைத்து வேலைகளையும் காலையில் புதிதாக தொடங்கி மாலையில் அவற்றை முடிக்க வேண்டும். அவ்வாறு தினமும் நாம் ஏதாவது ஒரு செயலை புதிதாக துவங்குகிறோம் அப்படி நாம் துவங்கும் அந்த செயல் வெற்றியில் முடிய வேண்டும். அதில் எந்தவித பிரச்சனையும் வராமல் இருக்க வேண்டும். அதற்காக இந்த அற்புத திலகத்தை நெற்றியில் வைத்துக்கொண்டால் செய்யும் காரியத்தில் நிச்சயம் வெற்றி பெறலாம். வாருங்கள் அது என்ன அற்புதமான திலகம் என்பதை இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்வோம்.

winning

நமது விடாமுயற்சியும் கடின உழைப்பும் சேர்ந்து இந்த அற்புத திலகமும் நமது முயற்சி வெற்றி அடைய செய்யும் ஆனால் எந்த முயற்சியும் செய்யாமல் இந்த திலகத்தை மட்டும் வைத்துக்கொண்டு அதில் வெற்றி பெற வேண்டும் என்று நினைத்தால் அது நல்ல பலனைக் கொடுக்காது அவ்வாறு இந்த அற்புத திலகத்தை தயார் செய்வதற்காக சில பொருட்களை நாட்டு மருந்து கடைகளில் வாங்கிக் கொள்ள வேண்டும்.

- Advertisement -

சந்தன பொடி, கஸ்தூரி மஞ்சள், ஜவ்வாது, கோரோசனை, பச்சைக் கற்பூரம், அத்தர், அரகஜா, புனுகு இவை அனைத்தையும் ஒரு வெள்ளி டப்பாவில் ஒன்றாக சேர்த்து கலந்து கொள்ள வேண்டும். இவற்றில் ஒருசில பொருட்கள் மிகவும் அதிகமான அவற்றை அளவாக சேர்த்துக் கொள்ள வேண்டும். பின்னர் இதனை பூஜை அறையில் வைத்து தீபம் காண்பித்து இந்த மந்திரத்தை 108 முறை சொல்லி மீண்டும் இந்த டப்பாவை உங்களுக்கு ஏற்ற இடத்தில் எடுத்து வைத்துக் கொள்ளலாம்.

sandle

“ஓம் ஆத்ம மனோ வசி தேவாய வூம்
வசி ஆக்ராஷண சர்வ தேவ தேவியை
பரிபூரண காரிய அனுகூல சித்திதர
வசம் வாசம் வசி சாம்பவி புத்ராய
வா வர சுவாஹா”

- Advertisement -

பிறகு வெளியில் செல்வதற்கு முன்னர் இந்த டப்பாவிலிருந்து திலகத்தை எடுத்து நெற்றியில் வைத்துக் கொண்டு, உடம்பில் லேசாக தடவிக் கொண்டும் செல்லலாம். இதன் வாசனை மற்றவர்கள் உங்களை கையெடுத்து கும்பிடும் அளவிற்கு மிகவும் தெய்வீக மணம் கொண்டதாக இருக்கும். இதில் சேர்க்கப்படும் பொருட்கள் மருத்துவ ரீதியாகவும் உடலுக்கு மிகவும் நன்மை அளிக்கக் கூடியதாக இருக்கிறது.

mai

காலையில் வேலைக்கு செல்லவோ அல்லது சந்தை வியாபாரத்திற்கு செல்லும்போதோ இந்த மந்திரத்தை மூன்று முறை சொல்லி நெற்றியில் இந்த திலகத்தை வைத்துக் கொள்ள வேண்டும். அல்லது இப்பொழுது உடனே ஒரு காரியம் நடைபெற வேண்டும் என்று நினைத்தால் அந்த நேரம் இந்த திலகம் நமது நெற்றியில் இருக்க வேண்டும். காலையில் வைத்து விட்டு வந்தோம் அதுவே போதும் என்று இருக்கக்கூடாது. அந்த நேரத்தில் புதியதாக இந்த திலகத்தை நெற்றியில் வைத்துக் கொள்ள வேண்டும். நூற்றுக்கு 70 சதவீதம் நாம் மேற்கொள்ளும் விஷயம் நிச்சயம் வெற்றியடையும்.

- Advertisement -