நாளை தை அமாவாசையில் அதிர்ஷ்டம் பெற போகும் 6 ராசிகள்.

amavasai1
- Advertisement -

நாளை 9.02.2024 தை அமாவாசை. ஜோதிடத்தின் அடிப்படையில் கிரகங்களின் மாற்றத்தினால் நாளை தை அமாவாசையை தொடர்ந்து, அடுத்த ஒரு மாதத்திற்கு அதிர்ஷ்டக் காற்றை சுவாசிக்க போகும் 6 ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பற்றிய ஜோதிடம் சார்ந்த சில தகவலை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

இந்த ஆறு ராசிக்காரர்களுக்கும் அடுத்த ஒரு மாதத்திற்கு யோகம் தான். இந்தப் பட்டியலில் உங்களுடைய ராசி இருக்குதான்னு பாருங்க. உங்கள் கஷ்டத்திற்கு எந்த வகையில் விடிவு காலம் பிறக்கும் என்பதை ஜோதிடம் சார்ந்த இந்த பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்வோம் வாருங்கள்.

- Advertisement -

மேஷம்

செவ்வாயை அதிபதியாகக் கொண்ட மேஷ ராசிக்காரர்களுக்கு முன்கோபம் கொஞ்சம் வரும். ஆனால் யாராவது உதவி என்று வந்து கேட்டால் உங்களால் முடிந்த வரை, உங்கள் மனசாட்சிக்கு விரோதம் இல்லாமல் உதவிகளை செய்வீர்கள். இதனாலேயே உங்களுக்கு வரக்கூடிய எவ்வளவு பெரிய கஷ்டமாக இருந்தாலும், பெரிய அளவில் உங்களுக்கு பாதிப்பை கொடுக்காது.

கடைசி நிமிடத்தில் கடவுள் கை கொடுத்து விடுவான். அதுபோலத்தான் இப்போது கஷ்டத்தை கடந்து வந்து கொண்டிருக்கும் உங்களுக்கு வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் ஏற்பட போகிறது. வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு மனதிற்கு பிடித்த கைநிறையே சம்பளத்தோடு வேலை கிடைக்கும். தொழிலில் நல்ல முன்னேற்றம் இருக்கும். தடைப்பட்டு வந்த சுப காரியம் நிகழ்ச்சிகள் நடக்கும். நிதி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் சரியாகும். வாங்கிய கடனை எல்லாம் திருப்பிக் கொடுக்க நேரம் காலம் வந்துவிட்டது.

- Advertisement -

ரிஷபம்

ஏதாவது ஒரு குறிக்கோளை மனதில் வைத்துக் கொண்டு அயராது உழைத்து கொண்டிருக்கும் ரிஷப ராசி அன்பர்களுக்கு, இந்த தை அமாவாசையில் இருந்து நல்ல காலம் பிறந்து விட்டது. அந்த இறைவனின் பரிபூரண ஆசியானது உங்களுக்கு இருக்கிறது. கொஞ்சம் வயதானவர்கள், பிடித்தமான கோவிலுக்கு செல்ல வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள். அந்தப் பயணங்களை தொடர இது ரொம்ப ரொம்ப நல்ல காலமாக இருக்கும். ஆன்மீக சுற்றுலா செல்லலாம்.

புதுசாக தொழில் தொடங்க வேண்டும் என்று நினைப்பவர்கள் இனி வரக்கூடிய காலகட்டத்தில் தொடங்கலாம். கடுமையாக கடன் சுமையில் கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பவர்களுக்கு கடன் பிரச்சனை தீரும். வெளிமாநிலங்களில் வேலை வேண்டும், வெளியூரில் வேலை வேண்டும் என்று முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த ஒரு மாத காலகட்டத்திற்குள் நிச்சயமாக நல்ல செய்தி வந்து சேரும்.

- Advertisement -

கடகம்

எதையுமே மனதில் வைத்து மறைக்காமல் வெளிப்படையாக பேசும் குணத்தை கொண்டவர்கள் நீங்கள். சந்தோஷத்தையும் உங்களால் அடக்க முடியாது. துக்கத்தையும் உங்களால் அடக்க முடியாது. உங்களுக்கு அடுத்த ஒரு மாதம் அதிர்ஷ்டம் அடைந்தான். நீண்ட நாட்களாக முயற்சி செய்து வந்த ஒரு நல்ல காரியம் அடுத்து வரக்கூடிய ஒரு மாதத்திற்குள் உங்களுக்கு நடக்கப் போகிறது. அது எந்த சுப நிகழ்ச்சியாக வேண்டும் என்றாலும் இருக்கலாம்.

வீடு வாங்குவது, வண்டி வாகனம் வாங்குவது, அல்லது தங்க நகை வாங்குவது போன்ற புது வரவுகள் உங்களுக்கு இருக்கிறது. வருமானம் இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருப்பவர்களுக்கு நிரந்தர வருமானத்திற்கான வாய்ப்புகள் கிடைக்கும். காதல் கைகூடும். திருமணம் வரை செல்லும். மனதிற்கு பிடித்த நிறைய நல்ல காரியங்கள் நடக்கும். வியாபாரத்தில் செய்யக்கூடிய புதிய முதலீடுகள் பெரிய அளவில் லாபத்தை ஈட்டி தரும்.

விருச்சிகம்

விருச்சிக ராசிக்காரர்களை அவ்வளவு சுலபமாக நம்மால் நெருங்க முடியாது. நல்லா பேசுறாங்களே என்று கிட்ட நெருங்கி போனால், கோபப்படுவார்கள். கோபப்படுகிறார்கள் என்று விலகி சென்றால், அவர்கள் நம்மை நெருங்கி வருவார்கள். இப்படி இவர்கள் புரியாத புதிராகத்தான் இருப்பார்கள். விருச்சிக ராசிக்காரர்கள் கடந்த சில நாட்களாக ரொம்பவும் மன கஷ்டத்தை, மனவேதனையை எதிர்கொள்ள கூடிய சூழ்நிலையில் இருந்திருப்பார்கள்.

அப்பேர்பட்ட கஷ்டங்கள் எல்லாம் அடுத்து வரக்கூடிய ஒரு மாதத்தில் விலகப் போகின்றது. உங்களுக்கு மன நிம்மதி, இரவில் நல்ல தூக்கம் கிடைக்கப் போகின்றது. இந்த மாதம் கிடைக்கக்கூடிய புதிய மனிதர்களின் சந்திப்பு புது புது அனுபவங்கள் எல்லாமே உங்களுடைய வாழ்க்கைக்கு ரொம்ப ரொம்ப முன்னேற்றத்தை கொடுக்கும். எதிர்பார்க்காத நல்லது, எதிர்பாராத நேரத்தில் வந்து ஆச்சரியப்படுத்தும்.

மகரம்

மகர ராசிக்காரர்கள் பொதுவாகவே நேர்மையாக நடந்து கொள்வார்கள். அடுத்தவர்களுக்கு துரோகம் நினைக்க மாட்டார்கள். குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கணும் என்று நினைக்க மாட்டார்கள். உங்களுக்கு இதனால் வரை ஏற்பட்ட அவமானங்களில் இருந்து இனி வரக்கூடிய காலகட்டத்தில் விடுதலை கிடைக்கும். உறவினர்கள் உங்களை ஒதுக்கி வைத்திருக்கலாம், வேலை செய்யும் இடத்தில் உங்களை ஒதுக்கி வைத்திருக்கலாம்.

ஆனால் இனி வரக்கூடிய நாட்களில் அவர்கள் உங்களுடைய நல்ல மனதைப் புரிந்து கொள்வார்கள். ஒதுக்கி வைத்தவர்கள் எல்லாம் உங்களை தூக்கிக் கொண்டாட போகிறார்கள். பிரிந்த கணவன் மனைவி ஒன்று சேர வாய்ப்புகள் உள்ளது. உங்களுக்கு துரோகம் நினைத்தவர்கள், உங்களுடைய எதிரிகள் எல்லாம் உங்களைப் போற்றிப் புகழ்வார்கள். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் ஒரு முடிவுக்கு வரும்.

மீனம்

மீன ராசிக்காரர்கள் மிகவும் குழந்தை உள்ளம் கொண்டவர்கள். யாராவது 10 நிமிடம் தொடர்ந்து உங்களிடம் பேசினால் சுலபமாக உங்களை ஏமாற்றி விடலாம். அவர்களுடைய பேச்சுக்கு மயங்கி அவர்கள் சொன்ன பேச்சைக் கேட்க தொடங்கி விடுவீர்கள். இப்படிப்பட்ட குணத்தைக் கொண்ட உங்களுக்கு கடந்த சில நாட்களாக நிதி நிலைமை ரொம்பவும் மோசமாக இருந்திருக்கும். பணம் சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் எல்லாம் அடுத்து வரக்கூடிய நாட்களில் சரியாகும்.

இதையும் படிக்கலாமே: நாளை தை அமாவாசையில், திதி தர்ப்பணம் கொடுக்க வேண்டிய நல்ல நேரம்

கடன் சுமை குறையும். அடகு வைத்த நகைகளை மீட்க கூடிய வாய்ப்புகளும் உண்டாகும். வேலையில் இருந்து வந்த பிரச்சனைகள் சரியாகும். மேலதிகாரிகள் உங்களை புரிந்து கொள்வார்கள். நீண்ட தூர பயணம் வெற்றியை கொடுக்கும். இடம் மாற்றம் நல்லது செய்யும். தொழிலில் அமோகமான வெற்றியை அடையப் போகிறீர்கள். அதுமட்டுமல்லாமல் சிறந்த பணியாளர், சிறந்த மனிதர், சிறப்பான தொழிலதிபர் என்ற பட்டங்கள் விருதுகள் எல்லாம் கூட சில பேருக்கு கிடைக்கும்.

- Advertisement -