தலையணைக்கு அடியில் இந்த ஒரு பொருளை வைத்து தூங்கினால் போதும். தலைக்கு மேல் இருக்கும் பிரச்சனைகளுக்கு பொழுது விடியும் போது, விடிவுகாலம் பிறக்கும்.

lakshmi-dreams
- Advertisement -

புதுசு புதுசாக ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு பிரச்சனைகளை பாரமாக நம்முடைய தலை மேல் சுமந்து கொண்டுதான் இருக்கின்றோம். ஒரு பிரச்சினை முடிந்தவுடன் நிச்சயமாக அடுத்த பிரச்சனை தலை தூக்கத் தான் செய்யும். பிரச்சினை இல்லாத மனிதர்களே இந்த உலகத்தில் கிடையாது. இருப்பினும் நமக்கு வரக்கூடிய பிரச்சனைகளை சமாளிக்கும் தெம்பு நம்மிடம் இருந்தாலே போதும். பிரச்சனைகளை கடந்து சென்றுவிடலாம். பிரச்சனைகளை கண்டு துவண்டு போகாதீர்கள். பிரச்சனைகளுக்கு தீர்வு கொண்டு வருவதற்கு என்ன வழியோ அதை தேடிக் கொள்ளுங்கள். பிரச்சனைகளை சமாளித்து கஷ்டங்களில் இருந்து மீண்டு வருவது தானே வாழ்க்கைக்கு அழகு. அழகான உங்கள் வாழ்க்கையை மேலும் அழகு சேர்க்க, சந்தோஷமான உங்கள் வாழ்க்கையில் மேலும் சந்தோஷம் பிறக்க சில ஆன்மீக ரீதியான பரிகாரங்கள் உங்களுக்காக.

sleep

நாம் தூங்கும் போது நம்முடைய ஆழ்மனது மூளை இவைகள் செயல்பட்டுக் கொண்டுதான் இருக்கும். அந்த சமயத்தில் நம்முடைய உடலில் இருக்கக்கூடிய சக்கரங்களுக்கு ஊக்கம் கொடுக்கும் விதமாக நம் சில பொருட்களை நம் தலையணைக்கு அடியில் வைத்து தூங்கும் பொழுது தூக்கத்தில் கூட நம்முடைய பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். என்ன இந்த பிரச்சனைகளுக்கு எந்தெந்த பொருட்களால் எப்படிப்பட்ட தீர்வினை கொடுக்க முடியும். பதிவை முழுமையாக படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

- Advertisement -

முதலில் தலைக்குமேல் இருக்கக்கூடிய பிரச்சனை பணம். வருமானத்தில் பிரச்சனை இருந்தால் கூட பரவாயில்லை. சமாளித்து விடலாம். ஆனால், வரக்கூடிய வருமானம் வீண்விரையம் ஆனால், அது பெரிய பெரிய கஷ்டத்தை நமக்கு கொடுத்துவிடும். அதுவே பாதி மன பாரம். வாழ்க்கையை சோகத்தில் தள்ளிவிடும். வருமானமே இல்லாத ஏழைகள் கூட நிம்மதியாக வாழ்ந்து விடலாம். ஆனால் வருமானம் வந்து அந்த வருமானத்தை சரியான முறையில் செலவு செய்ய முடியாமல் வீண்விரயம் செய்வது என்பது மிக மிக கஷ்டமான ஒரு விஷயம்.

virali-manjal

தினமும் நீங்கள் தூங்கும் போது உங்களுடைய தலையணைக்கு அடியில் விரலி மஞ்சளை வைத்து தூங்கினால் வீண் விரயங்கள் குறையும். வரக்கூடிய வருமானம் நல்லதுக்கு மட்டுமே செலவாகும். மன உளைச்சல் இருக்காது. சந்தோஷமான வாழ்க்கை உங்கள் உடனே நிரந்தரமாக இருக்கும். வாரத்திற்கு ஒரு நாள் பழைய மஞ்சளை கால் படாத இடத்தில் ஒரு செடிகளில் போட்டுவிட்டு மீண்டும் புதிய விரலிமஞ்சள் ஒன்றை தலையணைக்கு அடியில் வைத்துக் கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

உங்க வேலையில் பிரச்சனை. சரியான வருமானம் இல்லை. எந்த வேலையும் நிரந்தரமாக கிடைக்கவில்லை. செய்யும் தொழிலில் ஒரு முன்னேற்றம் இல்லை என்ன செய்வது. தினமும் ஒரு அரச இலையை உங்களுடைய தலையணைக்கு அடியில் வைத்து உறங்க வேண்டும். இந்த அரசியலையும் வாரத்திற்கு ஒரு நாள் புதியதாக மாற்றப்பட வேண்டும். இப்படி செய்தால் நல்ல வேலை கிடைக்கும் உயர் பதவிகள் உங்களைத் தேடி வரும். வருமானம் அதிகரிக்கும். வேலையே இல்லாதவர்களுக்கு கூட நல்ல வேலை கிடைக்கும்.

arasa-ilai

சில பேர் அரசாங்க வேலைக்காக முயற்சி செய்வார்கள். அரசாங்க வேலை கிடைக்காமல் இருக்கும். இப்படிப்பட்டவர்கள் தினந்தோறும் இரவு தூங்கும் போது ஒரு செம்பு டம்ளர் அல்லது செம்பு பாத்திரம் நிரம்ப உங்கள் தலைக்கு மேலே தண்ணீரை வைத்துக்கொள்ளுங்கள். மறுநாள் காலை எழுந்து குளித்து முடித்துவிட்டு, சுத்தபத்தமாகி விட்டு சூரிய நமஸ்காரம் செய்ய வேண்டும். சூரிய நமஸ்காரம் செய்யும்போது உங்கள் தலைக்கு மேலே இரவு வைத்த சொம்பு தண்ணீரைக் கொண்டுவந்து சூரியனுக்கு சமர்ப்பணம் செய்ய வேண்டும். அதாவது சூரியனுக்கு நேராக நின்று பூமியில் இந்த தண்ணீரை கீழே ஊற்றி விடுங்கள். அரசாங்க வேலை கூடிய விரைவில் கிடைக்கும்.

silver fish

வாழ்க்கையில எனக்கு ஒரு நல்லது கூட நடக்கவே மாட்டேங்குது. எதை தொட்டாலும் தோல்வி தான். எல்லாமே பிரச்சனை என்று சொல்பவர்கள் என்ன செய்வது. ஜோடியாக இருக்கக்கூடிய இரண்டு மீன் பொம்மைகளை வாங்கிக் கொள்ளுங்கள். வெறும் காகிதத்தில் இரண்டு மீன்கள் இணையாக இருப்பது போல இருந்தாலும் சரிதான். அந்த புகைப்படத்தை தலையணைக்கு அடியில் வைத்து தூங்கினால் உங்களுக்கு எல்லாம் நல்லதாகவே நடக்கும். நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன விஷயங்களை முயற்சி செய்து பாருங்கள் நல்ல பலன் கிடைக்கும் என்ற கருத்துடன் இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -