தங்கம் சேர தாமரைப்பூ பரிகாரம்

thamarai gold
- Advertisement -

நம்முடைய கஷ்ட காலத்தில் நமக்கு உதவி செய்யும் ஒரு மிகப்பெரிய பொக்கிஷமாக திகழ்வதுதான் தங்க நகைகள். சிறிது சிறிதாக கஷ்டப்பட்டு சேர்த்து வைத்திருக்கும் தங்க நகைகளை நம்முடைய கஷ்ட காலத்தில் பிறரிடம் கையேந்தாமல் நமக்கு உதவி செய்யும். அப்படி உதவி செய்யக்கூடிய தங்கத்தை நம்மால் இயன்ற அளவு சேர்த்து வைத்துக் கொள்வது என்பது மிகவும் நல்லது. ஒரு பெண்ணிடம் அதிக அளவு தங்க நகை இருந்தால் அந்த பெண்ணிற்கு அதுவே ஒரு பெரிய தைரியத்தை தரக்கூடிய ஒன்றாக திகழ்கிறது.

அது மட்டுமல்லாமல் பெண்கள் எந்த அளவிற்கு தங்க நகைகளை அணிந்து கொண்டு வெளியில் விசேஷத்திற்காக செல்கிறார்களோ அந்த அளவிற்கு அவர்களுக்கு மதிப்பும் மரியாதையும் அதிகரிக்கும் என்றுதான் கூற வேண்டும். இதை பலரும் தங்கள் அனுபவத்தில் கண்டு தான் இருப்பார்கள். அவ்வளவு சிறப்பு மிகுந்த தங்க நகைகளை அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்று நினைப்பவர்களும் அடமானத்தில் இருக்கும் தங்க நகைகளை எவ்வளவு முயற்சி செய்தாலும் திருப்ப முடியவில்லை என்று கஷ்டப்படுபவர்களும் எந்த பரிகாரத்தை செய்தால் அவர்கள் நினைத்தபடி தங்கம் அவர்களை வந்து சேரும் என்றுதான் இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் நாம் பார்க்கப் போகிறோம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை நாம் தசமி திதி அன்று தான் செய்ய வேண்டும். வேறு எந்த நாட்களிலும் செய்ய கூடாது. மாதத்திற்கு ஒருமுறை வரக்கூடிய தசமி திதி அன்று வீட்டில் இருக்கக்கூடிய ஏதாவது ஒரு தங்க நகையை எடுத்துக் கொள்ள வேண்டும். முதலில் சுத்தமான தண்ணீரில் கல் உப்பை போட்டு கரைத்து அதில் தங்க நகையை போட்டு சுத்தம் செய்ய வேண்டும். அடுத்ததாக காய்ச்சாத பசும்பாலில் போட்டு சுத்தம் செய்ய வேண்டும். மூன்றாவதாக பன்னீரில் போட்டு சுத்தம் செய்து சுத்தமான துணியை கொண்டு ஈரம் இல்லாமல் துடைத்து எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

இப்பொழுது ஒரு பெரிய தாம்பாளத்தை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் செந்தாமரை மலர் அதாவது சிவப்பு நிறத்தில் இருக்கும் தாமரை மலரை வாங்கி அதன் இதழ்களை உதிர்த்து தாம்பாளம் முழுவதும் பரப்பி வைத்துக்கொள்ள வேண்டும். அந்த தாமரை இதழ்களுக்கு நடுவில் நாம் சுத்தம் செய்து வைத்திருக்கும் நகையை வைக்க வேண்டும்.

- Advertisement -

அடுத்ததாக வாசனை மிகுந்த ஜவ்வாது பொடியை வாங்கி ஒரு தட்டில் கொட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இப்பொழுது இந்த ஜவ்வாது பொடியை எடுத்து “ஓம் ஐம் அரீம் ஸ்ரீம் நமஹ” என்னும் மந்திரத்தை 18 முறை கூறி அந்த தங்க நகைக்கு அர்ச்சனை செய்ய வேண்டும். பிறகு உங்களுடைய வேண்டுதலை அதாவது தங்கம் சேர வேண்டும் அடமானத்தில் இருக்கும் தங்கம் திரும்ப வீடு வர வேண்டும் என்ற வேண்டுதலை மனதார வேண்டிக் கொள்ள வேண்டும்.

இந்த பூஜையை நிறைவு செய்த பிறகு ஒரு மஞ்சள் நிற துணியை எடுத்து அதில் இந்த தாமரை இதழ்களையும் ஜவ்வாது பொடியையும் தங்க நகையையும் எடுத்து வைத்து மூட்டையாக கட்டி தங்கம் வைக்கும் இடத்தில் வைத்து விட வேண்டும். நாம் உபயோகப்படுத்திக் கொண்டிருக்கும் நகையை வைத்து இந்த பூஜையை செய்திருந்தால் அந்த நகையை திரும்ப எடுத்து நாம் உபயோகப்படுத்திக் கொள்ளலாம்.

- Advertisement -

அந்த நகையை மட்டும் எடுத்துவிட்டு மீதம் இருக்கும் தாமரை இதழ்களையும் ஜவ்வாது பொடியையும் மட்டும் மூட்டையாக கட்டி தங்கம் வைக்க வைக்கும் இடத்தில் வைத்து விடலாம். இப்படி பூஜை செய்த பிறகு நம் வீட்டில் தங்கம் வாங்குவதற்குரிய வருமானம் பெருக ஆரம்பிக்கும். அதோடு மட்டுமல்லாமல் அடமானத்தில் இருக்கும் நகைகளை சிறிது சிறிதாக திரும்பும் சூழ்நிலையும் ஏற்படும்.

இதையும் படிக்கலாமே: கடன் பீடை தரித்திரம் தீர வாராகி வழிபாடு

மிகவும் எளிமையான இந்த பரிகாரத்தை நாமும் நம் இல்லங்களில் நம்பிக்கையுடன் செய்து தங்கத்தை அதிக அளவில் சேர்த்துக் கொள்வோம்.

- Advertisement -