கடன் பீடை தரித்திரம் தீர வாராகி வழிபாடு

varahi dheepam
- Advertisement -

சப்த கன்னிகளில் ஒருவரான வாராகி அன்னை பஞ்சமி திதிகளில் வணங்கினால் வளமான வாழ்க்கையை பெறலாம். ஒவ்வொரு திதியும் ஒவ்வொரு தெய்வங்களுக்கு உகந்ததாக கருதப்படும். அந்த வகையில் பஞ்சமி நாயகியான வாராகி அன்னையை வணங்க இந்த பஞ்சமி திதி மிகவும் உசிதமான நாள். வாராகி அன்னையை எந்த நாளில் எங்கிருந்து மனதார வேண்டினாலும் உடனே அங்கு வந்து அருள் புரிவார் என்பதில் சந்தேகமே இல்லை.

வாராகி அன்னையை அவர்களுக்கு உரிய திதியில் இந்த முறையில் வணங்கும் பொழுது உடனடியான பலனை பெறலாம் என்று சொல்லப்படுகிறது. அது என்ன வழிபாடு எப்படி செய்ய வேண்டும் என்பதை எல்லாம் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் இப்போது நாம் தெரிந்து கொள்ளலாம்.

- Advertisement -

வாராகி அன்னை வழிபாடு

இந்த வழிபாட்டை நாளைய தினம் மாலை 6:00 மணிக்கு மேல் செய்யுங்கள். வாராகி அன்னை வழிபாட்டை சூரிய அஸ்தமனத்திற்கு பிறகு இருள் சூழும் வேளையில் செய்வது தான் சிறந்தது. இந்த வழிபாட்டை உங்கள் பூஜை அறையில் அருகிலே செய்ய வேண்டும். பூஜையறை பெரிதாக இருந்தால் பூஜை அறையில் சில செய்யலாம் அல்லது பூஜை அறைக்கு பக்கத்தில் இந்த வழிபாடு செய்யுங்கள்.

வீட்டில் வாராகி அன்னை படம் சிலை இருந்தால் அவற்றிற்கு மஞ்சள் குங்குமம் பொட்டு வைத்து செவ்வரளி மாலை சூட்டி அலங்காரம் செய்து கொள்ளுங்கள். படம் இல்லை என்றால் பரவாயில்லை அன்னைக்கு ஒரு தீபம் ஏற்றினாலே அதில் வந்து நமக்கு அருள் புரிவார். அடுத்து ஒரு சிறிய நாற்காலியை வைத்து அதன் மேல் ஒரு தட்டு வைத்து விடுங்கள்.

- Advertisement -

அந்த தட்டில் ஒரே ஒரு அகல் விளக்கு ஏற்ற வேண்டும். இந்த அகல் விளக்கு பஞ்சமுக தீபமாக இருந்தால் சிறந்தது.முதலில் அகல் விளக்கை நன்றாக சுத்தம் செய்து அதில் 5 பொட்டு வைக்க வேண்டும். விளக்கில் நல்லெண்ணெய் அல்லது நெய் ஊற்றி பஞ்சுத்திரி போட்டு அந்த நாற்காலியின் மேல் வைத்து தீபம் ஏற்றுங்கள்.

விளக்கை சுற்றி பூக்களை வைத்து விடுங்கள். அன்னைக்கு நெய்வேதியமாக ஏதேனும் கிழங்கு வகைகளை வைத்து விடுங்கள். சமைத்து தான் வைக்க வேண்டும் என்று இல்லை அப்படியேவும் வைக்கலாம்.அதன் பிறகு இந்த தீபத்தை கிழக்கு முகமாக எரியும்படி வைத்து ஏற்றுங்கள்.

- Advertisement -

இப்பொழுது நீங்கள் வடக்கு முகமாக அமர்ந்து ஓம் வாராகி அன்னையே போற்றி ஓம் என்ற இந்த நாமத்தை 108 முறை சொல்ல வேண்டும். அன்னையை நினைத்து நீங்கள் எந்த அளவிற்கு மனதார வேண்டுகிறீர்களோ அது நிச்சயம் பலிக்கும்.அதன் பிறகு இந்த விளக்கை மூன்று முறை வலம் வந்து தீபாராதனை காட்டி பூஜையை நிறைவு செய்து கொள்ளுங்கள்.

நெய்வேத்தியமாக வைத்தவற்றை நீங்களும் வீட்டில் உள்ளவர்களும் பகிர்ந்து உண்ணலாம். இதை வெளியில் உள்ளவர்களுக்கும் தரலாம். இந்த வழிபாடு மிக மிக எளிமையான ஒன்றுதான் ஆனால் இது தரக்கூடிய பலனோ மிகவும் அதிகம் என்று சொல்லப்படுகிறது.

இதையும் படிக்கலாமே: கடன் தீர சித்தர்கள் சொன்ன பரிகாரம்

துன்பங்கள் துயரங்கள் கடன் பிரச்சனைகள் போன்றவற்றை தீர நாளைய தேய்பிறை பஞ்சமி திதியில் வாராகி அன்னைக்கு ஏற்றப்படும் இந்த தீபம் உங்கள் குடும்பத்தை வளமுடன் வாழ வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை. இந்த வழிபாட்டு முறையில் நம்பிக்கை இருப்பின் நம்பிக்கையுடன் அன்னையை வழிபட்டு நல்லதொரு வளமான வாழ்க்கையை வாழுங்கள்.

- Advertisement -