இந்த விதையை தொட்டவர்கள் கையில் மகாலட்சுமி ஆணி அடித்தது போல வந்து அமர்ந்து கொள்வாள். பின்பு உங்கள் கைராசி, நீங்கள் தொட்டதெல்லாம் துலங்கும்.

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

இவன் கைராசிக்காரன். இவன் எதை தொட்டாலும் துலங்கும் என்று சில பேரை சொல்லி நாம் கேள்விப்பட்டிருப்போம். சில பேர் வியாபாரத்தில், முதன்முதலாக பணம் கொடுத்து பொருளை வாங்கினால், அன்றைய நாள் வியாபாரம் சிறப்பாக செல்லும். ராசியான கையில் முதலில் போனி செய்ய வேண்டும் என்று வழக்கத்தில் நாம் சொல்லுவதும் உண்டு. இப்படிப்பட்ட ராசியான கைகளில் மகாலட்சுமி வாசம் செய்வதாக ஒரு ஐதீகம். நம்முடைய கையிலும் மகாலட்சுமி வாசம் செய்ய வேண்டும். நாம் தொட்டதெல்லாம் துலங்க வேண்டும். நம்முடைய வாழ்க்கையிலும் செல்வ கடாட்சம் பெருக வேண்டும் என்றால் நாம் செய்ய வேண்டிய ஆன்மீகம் சார்ந்த ஒரு பரிகாரத்தை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகின்றோம்.

கையில் மகாலட்சுமி வாசம் செய்ய என்ன செய்ய வேண்டும்?
நாம் எல்லோருக்குமே தெரியும். தாமரை மலர் மகாலட்சுமிக்கு சொந்தமானது என்று. இந்த தாமரை பூவை வெள்ளிக்கிழமை தோறும் மகாலட்சுமிக்கு சூட்டி வழிபாடு செய்வது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை கொண்டு வந்து சேர்க்கும். தாமரைப் பூ விதை என்று நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். தாமரை விதை மாலை கூட இருக்கும். நிறைய பேர் அதை கையில் வைத்துக் கொண்டு, ஜெபமாலை போல பயன்படுத்தி மந்திரத்தை உச்சரிப்பார்கள்.

- Advertisement -

தினமும் இந்த தாமரை மணி மாலையை கையில் தொடும்போது நம்முடைய கை, ராசியான கையாக மாறும். கையில் இருக்கும் பீடை தரித்திரம் விலகும். ரொம்பவும்  கஷ்டப்படுபவர்கள், கடன் சுமையால் கஷ்டப்படுபவர்கள், ஒரே ஒரு முறை பின் சொல்லக்கூடிய இந்த பரிகாரத்தை செய்து பாருங்கள். தாமரை விதை நாட்டு மருந்து கடைகளில் விற்கும். அதில் சிறிதளவு வாங்கிக் கொள்ளுங்கள். உங்கள் வீட்டின் அருகில் குளம், ஆறு ஏதாவது ஒரு இடம் இருக்கும் அல்லவா. அந்த இடத்தில் சேரான பகுதியும் நிச்சயம் இருக்கும். அந்த இடத்தில் உங்கள் கையால் இந்த தாமரை விதைகளை தூவி விட்டு வந்து விடுங்கள். (ஜாக்கிரதியாக பரிகாரத்தை செய்ய வேண்டும். சேற்றில் போய் காலை விடக்கூடாது. தூரத்தில் இருந்து விதைகளை தூக்கி போட்டால் போதும்).

அந்த தாமரை விதை ஒரு சில நாட்களில் வளர தொடங்கிவிடும். தாமரை பூக்களும் பூக்கும். உங்கள் கையால் நீங்கள் தூவிய விதை வளர்ந்து, பூவாக பூத்து நிற்கும்போது உங்களுடைய வாழ்வில் இருக்கும் பணக்கஷ்டங்களும் படிப்படியாக குறையும் என்று சொல்லப்பட்டுள்ளது. அந்த தாமரை விதையிலிருந்து வளர்ந்த மலர் எவ்வளவு செழிப்பாக வளர்கிறதோ அந்த அளவுக்கு உங்களுடைய செல்வ செழிப்பு வளரும். யார் கையால் வேண்டும் என்றாலும் இந்த பரிகாரத்தை செய்யலாம்.

- Advertisement -

எப்போதெல்லாம் இந்த தாமரை விதைகளைக் கொண்டு போய் குளத்தில் போட முடியுமோ அப்போதெல்லாம் போடலாம். இத்தனை முறைதான் இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும் என்ற கட்டாயம் கிடையாது. இந்த பரிகாரத்தை செய்த உங்கள் கை நிச்சயமாக ராசியான கையாக மாறும்.

இதையும் படிக்கலாமே: சோதனையை வென்று, வாழ்வில் சாதனையை படைக்க இந்த 1 பொருள் போதும். 5 வருடத்தில் சாதிக்க வேண்டியதை, 1 வருடத்தில் சாதித்து காட்டுவீர்கள்.

வீட்டில் எப்போதும் தாமரை பூவின் விதை இருக்கட்டும். அது வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை கொடுக்கும். வீட்டில் இருக்கும் வறுமையை விரட்டி அடிக்கும். உங்களுடைய கையும், உங்களுடைய வீடும் ராசியான வீடாக, ராசியான கைகளாக மாற வேண்டும் என்றால் இந்த எளிமையான பரிகாரமே போதுமானது. வாய்ப்பு உள்ளவர்கள், நம்பிக்கை உள்ளவர்கள் மேல் சொன்ன ஆன்மீகம் சார்ந்த இந்த பரிகாரத்தை செய்து பலன் பெறலாம் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -