பண வரவை அதிகரிக்கும் சமையலறை குறிப்பு

kitchen
- Advertisement -

நம் வீடுகளில் பூஜை அறைக்கு எப்படி முக்கியத்துவம் கொடுத்து பராமரிக்கிறோமோ அதே அளவு முக்கியத்துவத்தை சமையலறைக்கும் கொடுப்போம். இதற்கு காரணம் செல்வத்தை அதிகரித்து கொடுக்கக் கூடிய இடத்தில் சமையல் அறைக்கு எப்பொழுதுமே முக்கிய பங்கு உள்ளது. ஒரு வீட்டில் சமையலறை வைத்து அந்த வீட்டில் தெய்வ கடாட்ஷமும் லட்சுமி கடாட்ஷமும் நிறைந்திருக்கும் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள்.

அந்த வகையில் சமையலறையில் நாம் பயன்படுத்தும் பொருட்களில் இருந்து பயன்படுத்தும் பாத்திரங்கள் வரை அனைத்தையும் சரியான முறையில் பயன்படுத்தினால் வீட்டில் வருமான தடை இல்லாமல், வறுமை ஏற்படாமல் இருக்கும் என்பதிலும் சந்தேகமே இல்லை. இப்போது ஆன்மீகம் குறித்த இந்த பதிவிலும் சமையலறையில் பணம் சேர செய்ய வேண்டிய சில எளிய பரிகாரக் குறிப்புகளை பற்றி தான் தெரிந்து கொள்ள போகிறோம்.

- Advertisement -

பணம் சேர சமையலறை பரிகாரம்

இதில் சொல்லப்படும் பரிகாரங்கள் எதுவும் நாம் இப்பொழுது புதிதாக கடைப்பிடிக்க போவது கிடையாது. நம் முன்னோர்கள் கடைப்பிடித்த பழக்கங்கள் தான். நாம் காலப் போக்கில் அதை மறந்து விட்டோம். இப்போது அது என்னவென்று தெரிந்து கொள்ளலாம்.

நம்முடைய சிறுவயதில் நம் பெற்றோர்கள் பணத்தை பீரோக்களிலும் மணி பரிசுகளிலோ வைக்க மாட்டார்கள். சமையல் அறையில் இருக்கும் சமையலுக்கு பயன்படும் டப்பாக்களில் வைத்திருப்பார்கள். இதற்கு காரணம் ஒரு சில பொருட்களின் பணத்தை வைக்கும் போது அது பல மடங்கு நமக்கு பெருக்கி தரும்.

- Advertisement -

பணம் அதிகரிக்கும் என்றால் அது கோடி கோடியாக கொட்ட வேண்டும் என்ற அவசியம் இல்லை. நம்முடைய அவசர தேவைக்கு பயன்படுத்தும் நூறு இருநூறு கூட பணம் தான். அதையும் கூட நாம் பிறரிடம் கையேந்தாமல் நம்மிடம் பணம் இருந்தால் அது நல்ல விஷயம் தானே. ஆகையால் சமையல் அறையில் நாம் செய்யும் இந்த சிறு மாற்றத்தினால் பணம் நமக்கு பெருகுமே தவிர நிச்சயம் குறையாது.

முதலில் சமையலறையில் உள்ள துவரம் பருப்பு டப்பாவில் எப்பொழுதும் பணத்தை வைக்க பழகுங்கள். துவரம் பருப்பு டப்பாவில் வைக்கும் போது அப்படியே வைக்காமல் அதில் ஒரு துண்டு சுக்கு போட்டு அதன் பிறகு கவரில் 100 ரூபாயாவது போட்டு சுருட்டி டப்பாவின் அடியில் வைத்து விடுங்கள். இது பணவரவை அதிகரிக்கும்.

- Advertisement -

அதே போல் வீட்டில் அரிசி கொட்டி வைக்கும் பாத்திரத்திலும் அரிசியுடன் சேர்த்து ஒரு துண்டு சுக்கு போட்டு வையுங்கள். இது வீட்டில் லட்சுமி கடாட்சத்தை அதிகரிப்பதுடன் பணம் வீண் விரையும் ஆகாமல் இருக்கும். அதே போல் அஞ்சறைப்பெட்டியிலும் எப்பொழுதும் ஒரு துண்டு சுக்கு இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள். இதுவும் பணம் வீண்விரயம் ஆகாமல் பணப்பெருக்கத்தை அதிகரிக்கும்.

இந்த சுக்கானது மகாலட்சுமி தாயாருக்கும் சுக்கிரனுக்கும் உகந்த பொருளாக பார்க்கப்படுகிறது. அந்த பொருள் நம்முடைய சமையலறையில் இருக்கும் சில பொருட்களுடன் சேரும் போது பணவரவு அதிகரித்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.

இதையும் படிக்கலாமே: தரித்திரம் நீங்க துளசி இலை பரிகாரம்

இந்த முறையில் உங்களுக்கும் நம்பிக்கை இருந்தால் இந்த பரிகாரங்களை செய்து நீங்களும் பணவரவை அதிகரித்துக் கொள்ளலாம் என்ற இந்த தகவலுடன் பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -