அள்ள அள்ள குறையாத தங்க நகை சேர்க்கைக்கு வீட்டில் செய்ய வேண்டிய எளிய பரிகாரம் என்ன? இதை அனைவரும் செய்யலாமா?

- Advertisement -

எல்லோருடைய வீட்டிலும் தங்க நகைகள் சேர்க்கை என்பது அவ்வளவு எளிதாக நடந்து விடுவது கிடையாது. பிராப்தம் இருப்பவர்களுக்கு மட்டுமே வெகுவாக தங்க நகை சேர்ந்து கொண்டே இருக்கும். பணமானாலும் சரி, நகையானாலும் சரி இருக்கின்ற இடத்திலே மீண்டும் மீண்டும் சேருமே தவிர, இல்லாத இடத்தில் அப்படியே தேங்கி நிற்பதை நீங்கள் பார்த்ததுண்டா? இதற்கு காரணம் என்ன? தங்க நகை சேர்க்கைக்கு அனைவரும் எளிதாக செய்யக்கூடிய ஒரு பரிகாரம் என்ன? என்பதை பற்றிய ஆன்மீக தகவல்களை தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள போகிறோம்.

பணம் இருக்கும் இடத்தில் மீண்டும் மீண்டும் பணம் சேர்வதற்கு காரணம் என்னவோ, அதே தான் நகை இருக்கும் இடத்தில் மீண்டும் மீண்டும் நகை சேர்ந்து கொண்டே செல்வதற்கும் காரணமாக இருக்கிறது. பணமானாலும், நகையானாலும், சொத்துக்கள் ஆனாலும் மீண்டும் மீண்டும் சேர்வதற்கு காரணம் அந்த இடத்தில் மகாலட்சுமி அருள் இருப்பது தான் ஆகும்.

- Advertisement -

ஒரு இடத்தில் நாம் வைக்கின்ற செல்வமானது அதிகரிக்க வேண்டும் என்றால், அந்த இடத்தில் இருந்து அந்த செல்வம் நகராமல் இருக்க வேண்டும். எதையும் துடைத்து எடுக்கக் கூடாது. நீங்கள் பீரோவில் பணத்தை வைக்கிறீர்கள் என்றால், அந்த இடத்தில் எப்பொழுதும் பணம் கொஞ்சமாவது இருக்க வேண்டும். துடைத்து எடுத்து விட்டால் மீண்டும் பணம் என்பது சேராது என்பது தான் இதில் இருக்கும் சூட்சமம் ஆகும்.

அதே போல பீரோவில் நகை வைத்திருந்தால், அந்த இடத்தில் வேறு ஒரு நகையை வைத்துவிட்டு தான் நீங்கள் அந்த நகையை எடுத்து அணிந்து கொள்ள வேண்டும். ஒரு நகைக்கு மாற்றாக இன்னொரு நகை அந்த இடத்தில் மாறிக் கொண்டே இருக்க வேண்டுமே தவிர, துடைத்து எடுக்கக் கூடாது. நகையே இல்லாமல் அந்த இடத்தில் இருந்தால் மீண்டும் அந்த இடத்தில் நகை சேர்வது கடினம் ஆகிவிடும் என்கிறது சாஸ்திரங்கள்.

- Advertisement -

மகாலட்சுமி இருக்கும் இடத்தில் தான் செல்வங்கள் மேலும் மேலும் பெருகுகின்றன. அவளை அந்த இடத்திலிருந்து நீங்கள் நகர்த்தி விட்டால், அதாவது எடுத்து விட்டால் மீண்டும் அவள் அந்த இடத்தில் அமர்வது கிடையாது என்பதை தெரிந்து கொண்டால் நீங்கள் இந்த தவறை செய்யவே மாட்டீர்கள். பீரோவில் நகை, பணம் எப்பொழுதும் கொஞ்சமாவது வைத்திருக்க வேண்டும். குண்டுமணி தங்கம் அல்லது 100 ரூபாய் நோட்டு வைத்தாலும் கூட போதும். அந்த இடத்தில் நீங்கள் வாசனை நிறைந்ததாக வைத்திருக்க வேண்டும். மகாலட்சுமிக்கு வாசனை மிகுந்த இடத்தில் தான் வாசம் செய்ய பிடிக்கும் என்பது அனைவரும் அறிந்த விஷயம் தான், எனவே சாம்பிராணி துண்டு, கற்பூர துண்டு போன்றவற்றை நொறுக்கி பணம், நகை வைக்கும் பெட்டியில் போட்டுக் கொள்ளுங்கள்.

வெள்ளி மற்றும் செவ்வாய் கிழமைகளில் கண்டிப்பாக பீரோவிற்கு சாம்பிராணி தூபம் காட்டுங்கள். முந்தய காலங்களில் எல்லாம் சாம்பிராணி தூபம் போட்டால் வீடு மட்டும் அல்லாமல், வீட்டில் இருக்கும் செல்வங்களுக்கும் காண்பிப்பார்கள். இது இன்றும் கடைபிடிக்கப்பட்டால் உங்களுடைய செல்வ வளமும் அதிகரிக்கும் என்பது நம்பிக்கையாக இருந்து வருகிறது.

- Advertisement -