வீட்டில் தங்க நகைகள் அதிகம் சேர்வதற்கு எந்த நேரத்தில் நகை வாங்குவது 10 தலைமுறைக்கு பாதுகாப்பை தரும் தெரியுமா? இந்த ஜோதிட ரகசியத்தை நீங்களும் தெரிஞ்சிகோங்க!

gold-pot-astro
- Advertisement -

நகை விற்கும் விலைக்கு இப்பொழுது ஒரு கிராம் நகை வாங்குவது கூட மிகவும் சிரமமாகி போய்விட்டது. இருப்பவர்கள் மேலும் மேலும் நகையை வாங்கி குவித்துக் கொண்டே போவார்கள். இல்லாத ஏழை, எளியோருக்கு நகை என்பது எட்டாத ஒரு கனியாக இருக்கிறது. வீட்டில் தங்க நகைகள் அதிகம் சேர வேண்டும் என்றால் நீங்கள் எந்த நேரத்தில் நகை வாங்க வேண்டும்? என்கிற ஜோதிட ரகசியத்தைத் தான் இந்த பதிவின் மூலம் நாம் தெரிந்து கொள்ள இருக்கிறீர்கள்.

பொன் நகை மீது விருப்பம் இல்லாத பெண்களே இல்லை என்று கூறலாம். ஆண், பெண் என்கிற எந்த பாகுபாடுமின்றி தங்கத்தின் மீது மோகம் கொண்டவர்கள் நம் நாட்டில் ஏராளம்! இந்த தங்க நகையை கொள்ளையடித்து விடக்கூடாது என்பதற்காக மிகப்பெரிய பாதுகாப்பு அறைகளை எல்லாம் அந்த காலத்து ராஜாக்கள் அமைத்தது உண்டு. அருகி வரும் தங்க நகை சேர்க்கைக்கு அதை வாங்கும் நேரம் ஒரு காரணமாக இருக்கும்.

- Advertisement -

சரியான நேரத்தில் வாங்கப் படாத தங்கம், எப்படியேனும் உங்களை விட்டு நீங்கிவிடும், அல்லது அடிக்கடி அதை உபயோகிக்க முடியாமல் அடகு கடைக்கு செல்லும் அபாயம் ஏற்படும். இப்படி தங்க நகை வாங்கும் நேரத்தை வைத்து நம் வீட்டில் செல்வச் சேர்க்கையும் நிர்ணயம் செய்யலாம். பொதுவாக தங்க நகைகள் வாங்குபவர்கள் இந்தக் கிழமையில், இந்த திதியில் வாங்குவது சிறப்பான பலன்களை அள்ளிக் கொடுக்கும் என்கிறது ஜோதிடம்!

ஜோதிடர்களின் கணிப்பு படி தங்க நகையை முதல் முதலில் கடைக்கு சென்று வாங்கும் பொழுது சஷ்டி, ஏகாதசி, தசமி, பஞ்சமி, பவுர்ணமி ஆகிய இந்த திதிகள் உங்களுடைய காலண்டரில் இடம் பெற்றுள்ளதா? என்பதை கவனியுங்கள்! அந்த திதிகளில் வரும் நட்சத்திரங்கள் அஸ்வினி, ரோகிணி, மிருகசீரிஷம், பூசம், அஸ்தம், சித்திரை, அனுஷம், ரேவதி ஆகியவை வந்துள்ளதா? என்பதை கவனிக்க வேண்டும். மேற்கூறிய இந்த திதிகளில், இந்த நட்சத்திரத்தில் சென்று நகை வாங்கிப் பாருங்கள்! நகை சேர்க்கை அதிகரிக்கும்.

- Advertisement -

அதே போல வாங்கி வந்தவுடன் தங்க நகையை அணிந்து விடக் கூடாது. நீங்கள் புதிய தங்க நகையை முதன் முதலில் அணியும் போது அது சனிக்கிழமையாக இருப்பது சிறப்பு! இவ்வாறு நட்சத்திரம் பார்த்து, திதி பார்த்து சனிக் கிழமையில் அணிந்து கொள்ளும் பொழுது அந்த நகையானது பத்து தலைமுறை வரை உங்களை விட்டு செல்லாமல் பாதுகாப்பானதாக இருக்கும் என்பது ஜோதிட நம்பிக்கையாகும்.

உங்கள் நகை அடமானம் இருக்கும் நிலையில், இதே போல இதே திதிகள் மற்றும் நட்சத்திரங்கள் வரும் வேளையில் நகையை மீட்டு அணிந்து பாருங்கள், மீண்டும் அந்த நகை அடகு கடைக்கு செல்லவே செல்லாது! அப்படி ஒரு நிலையை ஏற்படாமல் சுவர்ண லட்சுமிகள் உங்களை பாதுகாப்பாக வைத்திருப்பார்கள். பொன் பொருள் சேர்க்கை ஏற்படுவதற்கு ஆன்மீக மற்றும் ஜோதிட ரீதியாக இந்தந்த திதிகளில், இந்தந்த நட்சத்திரத்தில், இந்த கிழமையில் சென்று வாங்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. இதை சரியாக பயன்படுத்தி உங்களுடைய தங்க நகைகளை வாங்கி பத்திரப்படுத்திக் கொள்ளுங்கள்.

- Advertisement -