தங்கம் அதிக அளவில் சேர பரிகாரம்

number
- Advertisement -

சொத்து சுகம் சேர்க்க வேண்டும் என்று ஆசைப்படுபவர்கள் முதலில் வாங்குவது நகைகளை தான். அவ்வாறு வாங்கிய நகைகளை பத்திரமாக சேர்த்து வைப்பதன் மூலம் அவர்கள் வாழ்க்கையில் ஒருவித நம்பிக்கை ஏற்படும். அதே நகைகளை ஏதாவது ஒரு சூழ்நிலைக்காக அடகு வைக்கும் பொழுது அந்த நம்பிக்கை குறைய ஆரம்பிக்கும். எப்பொழுது அந்த நகைகளை திருப்பி தங்களுடன் வைத்துக் கொள்கிறார்களோ அப்பொழுதுதான் மறுபடியும் அந்த நம்பிக்கை உண்டாகும். இந்த ஆன்மீகம் குறித்த பதிவில் புதிதாக நகைகளை வாங்குவதற்கும் அதே சமயம் அடகு வைத்த நகைகளை திரும்ப பெறுவதற்கும் செய்யக்கூடிய ஒரு எளிய பரிகாரத்தை பற்றி தான் பார்க்கப் போகிறோம்.

அப்படி நம்பிக்கைக்குரிய நகையை நம் வீட்டில் அதிக அளவில் சேர்க்க வேண்டும் என்றுதான் ஒவ்வொரு பெண்மணிகளும் ஆசைப்படுகிறார்கள். அதேபோல் அடகு வைத்த நகையை எப்படியாவது திருப்பி நம்முடன் வைத்துக்கொள்ள வேண்டும். மறுபடியும் அழகு கடைக்கு செல்லவே கூடாது என்ற எண்ணமும் குடும்பத்தில் இருக்கும் பெண்களுக்கு இருக்கும். அப்படிப்பட்ட பெண்களுக்குரிய ஒரு எளிய பரிகார முறையை இப்பொழுது பார்ப்போம்.

- Advertisement -

இந்த பரிகாரத்தை எந்த நாட்களில் வேண்டுமானாலும் செய்யலாம். எந்த நேரத்தில் வேண்டுமானாலும் செய்யலாம். இதற்கு ஒரே ஒரு பொருள் தான் தேவை. இந்த பொருளுடன் நாம் சிறிய அளவு தங்கத்தையாவது வைத்திருந்தோம் என்றால் கண்டிப்பான முறையில் தங்கத்தின் சேர்க்கை நம் வீட்டில் அதிகரித்துக் கொண்டே செல்லும் என்று கூறலாம். அந்த பொருள்தான் குங்குமப்பூ.

ஒரு டப்பா குங்கும பூவை வாங்கிக் கொள்ளுங்கள். அந்த குங்கும பூவிற்கு நடுவில் ஏதாவது ஒரு சிறிய அளவு தங்கத்தையாவது வைத்து அந்த டப்பாவை மூட வேண்டும். பிறகு இந்த டப்பாவை மஞ்சள் நிற துணியாலோ அல்லது சிவப்பு நிற துணியாலோ சுற்றி பத்திரமாக ஓர் இடத்தில் வைத்து விட வேண்டும். இப்படி நாம் வைத்திருப்பதன் மூலம் அங்கு தங்கத்தின் சேர்க்கை என்பது அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

- Advertisement -

இதோடு மட்டுமல்லாமல் தங்கம் அதிகமான அளவு சேர வேண்டும் என்று ஆசைப்படுவது தங்கள் மனதிற்குள்ளே சூட்சமமான ஒரு எண்ணை கூறிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி அந்த எண்ணை கூறிக்கொண்டே இருக்கும் பொழுது தங்கத்தை சேர்ப்பதற்கான வழிகள் பிறக்கும் என்றும், அடமானத்தில் இருக்கும் தங்கத்தை மீட்க முடியும் என்றும் கூறப்படுகிறது.

அந்த எண் தான் 101. இதை ஓன் ஜீரோ ஓன் என்று மனதிற்குள் கூறிக்கொண்டே இருக்க வேண்டும். சதா சர்வ காலமும் இப்படி சொல்வதன் மூலம் அந்த எண்ணின் ஆதிக்கத்தால் வீட்டில் தங்க மழை பொழியும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

இதையும் படிக்கலாமே: கஷ்டங்களை தீர்க்கும் பரிகாரம்

எண்களின் உதவியோடும் பரிகாரத்தின் உதவியோடும் நம் வீட்டில் அதிக அளவு தங்கத்தை நம்மால் சேர்க்க முடியும் என்பதால் நம்பிக்கையுடன் செய்து பார்ப்போம்.

- Advertisement -