உங்கள் வீட்டில் இருக்கும் 1 பவுன் தங்கம், கூடிய சீக்கிரத்தில் 100 பவுன் தங்கமாக மாற வேண்டுமா? இதை மட்டும் செய்தால் வீட்டில் தினம் தினம் தங்கமழை தான்.

mahalakshmi-selvam-gold-coins
- Advertisement -

நம்முடைய வீட்டிற்கு லட்சுமி கடாட்சத்தை நிறைவாக கொடுக்கக்கூடிய ஒரு பொருள் தங்கம். மகாலட்சுமி அம்சம் பொருந்திய தங்கம் ஒவ்வொரு வீட்டிலும் ஒரு குண்டு மணியாவது இருக்க வேண்டும். தங்கம் இல்லாத வீட்டில் நிச்சயமாக மகாலட்சுமி கடாட்சம் இருக்காது. ஒரு பொட்டு தங்கமாவது நம்முடைய வீடுகளில் நிச்சயம் இருக்கும் அல்லவா. அந்த தங்கத்தை பல மடங்காக பெருக்குவதற்கு உண்டான ஒரு சிறிய பரிகாரத்தை தான் இன்று நாம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

சில பேர் வீட்டில் தங்கம் வாங்கும் நேரம் அடுத்தடுத்து தங்கத்தை சேர்த்துக் கொண்டே இருக்கும். ஆனால் ஒரு சிலர் வீட்டில் தங்கம் வாங்கி நீண்ட நாள் ஆயிருக்கும். ஐந்து வருடத்திற்கு முன்பு ஒரே ஒரு கம்பலோ மூக்குத்தையோ எடுத்து இருப்பார்கள். அதன் பின்பு தங்கம் வாங்கக்கூடிய நேரமே அமையாது. கையில் பணம் இருக்கும் ஆனால் அந்த பணத்தைக் கொண்டு தங்கம் வாங்க முடியாத சூழ்நிலை இருக்கும். சில பேருக்கு கையில் பணமே இருக்காது. தங்கம் வாங்க முடியாது. உங்களுக்கு எந்த சூழ்நிலை இருந்தாலும் சரி, பின் சொல்லக்கூடிய பரிகாரத்தை தொடர்ந்து செய்து வந்தால் தங்கம் வாங்கக்கூடிய யோகம் மீண்டும் மீண்டும் வரும். வாங்க நேரத்தை கடத்தாமல் அந்த பரிகாரத்தை பார்த்து விடுவோம்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை மாலை 6:00 மணிக்கு இந்த பரிகாரத்தை செய்ய வேண்டும். வெள்ளிக்கிழமை வழக்கம் போல உங்கள் வீட்டு பூஜை அறை பூக்களால் அலங்காரம் செய்யப்பட்டிருக்கும். மாலை 6.00 மணிக்கு விளக்கு ஏற்றி வெள்ளிக்கிழமை பூஜையை செய்திருப்பீர்கள். இந்த பூஜையோடு சேர்த்து இந்த பரிகாரத்தையும் செய்து விடுங்கள்.

செம்பில் உள்ள ஒரு சிறிய சொம்பை எடுத்துக் கொள்ளுங்கள். செம்பு டம்பளராக இருந்தாலும் சரி, அதன் உள்ளே உங்கள் வீட்டில் இருக்கும் சிறிய தங்கத்தை போடுங்கள். நீங்கள் பயன்படுத்தும் மூக்குத்தி கம்பல், சிறிய திருகாணி இருந்தாலும் சரி, மஞ்சள் தண்ணீரில் கழுவி விட்டு தங்கத்தை செம்பு டம்ளரில் போட்டு அதில் கொஞ்சம் குடிக்கின்ற நல்ல தண்ணீர், கொஞ்சம் பன்னீர், ஒரு ஏலக்காய், ஒரு கிராம்பு, சிறிய துண்டு பச்சை கற்பூரம், சிறிதளவு ஜவ்வாது, போட்டு அந்த தண்ணீரை வாசம் நிறைந்த தண்ணீராக மாற்றி அப்படியே பூஜையறையில் வைத்து மனதார மீண்டும் மீண்டும் தங்கம் சேர வேண்டும் என்று வேண்டிக் கொள்ளுங்கள்.

- Advertisement -

வெள்ளிக்கிழமை இரவு முழுவதும் அந்த சிறிய தங்கம் அந்த தண்ணீரிலேயே பூஜை அறையில் இருக்கட்டும். மறுநாள் காலை சனிக்கிழமை எழுந்து சுத்த பத்தமாக குளித்துவிட்டு பூஜை அறைக்கு சென்று மனதார இறைவனை வேண்டிக்கொண்டு இந்த தண்ணீரில் இருக்கும் தங்கத்தை எடுத்து அப்படியே நகை வைக்கக்கூடிய பெட்டியில் வைத்து விடுங்கள். மற்ற நகைகளோடு சேர்த்து வைத்தாலும் சரி, அல்லது இந்த நகை மட்டும் தான் உள்ளது என்றால் இதை மட்டும் கொண்டு போய் நகை பெட்டியில் வைத்து விடுங்கள்.

நீங்கள் அணிந்திருந்த தங்கத்தை பரிகாரத்திற்கு பயன்படுத்தி இருந்தாலும் சரி, அந்த தங்கத்தை ஒரு முறை பீரோவில் நகை வைக்கும் பெட்டியில் வைத்துவிட்டு அதன் பின்பு எடுத்து நீங்கள் அந்த தங்க நகையை அணிந்து கொள்ளலாம். வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை தங்கத்தை பூஜை அறையில் வாசனை நிறைந்த தண்ணீரில் போட்டு எடுத்து பயன்படுத்தும் போது, அல்லது பீரோவில் வைக்கும் போது உங்களுக்கு தங்கம் வாங்கக்கூடிய யோகம் மீண்டும் மீண்டும் வரும் என்று சொல்லப்பட்டுள்ளது.

பூஜை அறையில் தங்கத்தை வைக்கும் போது பத்திரமாக வைத்துக் கொள்ளுங்கள். பாதுகாப்பாக பரிகாரத்தை செய்ய வேண்டியது உங்கள் கையில் தான் உள்ளது. நகையை எடுத்த பின்பு செம்பு பாத்திரத்தில் இருக்கும் தண்ணீரை கால் படாத இடத்தில் ஊற்றி விடலாம். வாரம் ஒரு முறை வெள்ளிக்கிழமை இந்த பரிகாரத்தை செய்தால் தங்கத்தால் உங்கள் குடும்பத்திற்கு இருக்கக்கூடிய தோஷம் விலகி தங்கம் வாங்கக்கூடிய யோகம் மீண்டும் மீண்டும் வரும். கெட்ட நேரத்தில் தங்கம் வாங்கி, தங்கம் வாங்க முடியாத சூழ்நிலை உங்களுக்கு நேர்ந்தாலும் அந்த பிரச்சனை சரியாக விடும். நம்பிக்கை இருந்தால் இந்த சின்ன பரிகாரத்தை செய்து பாருங்கள் நல்லதே நடக்கும் என்ற கருத்தோடு இந்த பதிவினை நிறைவு செய்து கொள்வோம்.

- Advertisement -