பொன் பொருள் சேர அம்பாள் வழிபாடு

thangam sera
- Advertisement -

பொன் பொருள் சேர்த்து சமூகத்தில் நல்ல அந்தஸ்துடன் வாழ வேண்டும் என்பது தான் இன்றைய காலக்கட்டத்தில் அனைவரின் ஆசையாக இருக்கிறது. அதிலும் இந்த பொன் நகையை அதிகம் சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் அனைவர் மனதிலும் வேரூன்றி இருக்கிறது என்றே சொல்லலாம். ஏனெனில் தங்கம் ஒரு அழகியல் சார்ந்த விஷயம் என்பதையும் தாண்டி அந்தஸ்தை வெளிப்படுத்தக் கூடிய விஷயமாக மாறி விட்டது.

அப்படியான இந்த தங்கம் நம்மிடம் அதிகப்படியாக சேர நிறைய பூஜைகள், புனஸ்காரங்கள், பரிகாரங்கள் உள்ளது. ஆனாலும் சில தெய்வ வழிபாடுகளும் நம்மிடம் தங்கம் சேருவதற்கான யோகத்தை உருவாக்கும் என்று சொல்லப்படுகிறது. அதற்கு சில ஆலய தரிசனங்களை நாம் மேற்கொள்ள வேண்டும். அந்த வகையில் தங்கம் சேர்வதற்கான ஒரு ஆலய தரிசனத்தை பற்றி தான் ஆன்மீகம் குறித்த இந்த பதிவில் நாம் தெரிந்து கொள்ளப் போகிறோம்.

- Advertisement -

பொன் பொருள் சேர்க்கை உண்டாக அம்மன் வழிபாடு

பொன் பொருள் சேர்க்கை உண்டாக நாம் வழிபட வேண்டிய அன்னை தூத்துக்குடி மாவட்டத்தில் தாமிரபரணி ஆற்றங்கரையில் அமைந்துள்ள கொங்கராயன் குறிச்சி என்னும் கிராமத்தில் வீற்றிருக்கும் பொன்னுறுதி அம்மன் தான்.

தென் சீர்காழி என்று அழைக்கப்படும் இந்த கோவில் 19 ஆம் நூற்றாண்டில் ஆற்று வெள்ளத்தில் மூழ்கி விட்டதாகவும், சுமார் 25 ஆண்டுகளுக்கு பிறகு மன்னில் புதைந்த இந்த ஆலயத்தை மக்கள் தோன்றி எடுத்ததாகவும் வரலாறு உண்டு. அதுமட்டுமின்றி இங்குள்ள சட்டநாதர் ஆலயம் வல்லநாடு திருமூலநாதர் ஆலயத்தை தலைமையாக கொண்ட நாவலிங்கபுரத்தில் ஒன்றாக விளங்குகிறது. இந்த சட்டநாதர் என்பவர் 64 பைரவர்களை ஒன்றாக கொண்டவர் என்ற பொருளும் உண்டு.

- Advertisement -

இந்த கோவிலில் நாதனாக விளங்க கூடியவர் வீரபாண்டீஸ்வரர் இவருடைய அம்பிகையாக தெற்கு நோக்கி வீற்றிருப்பவர் தான் இந்த பொன்னுறுதி அம்பாள். இந்த அம்மனை வணங்கும் போது நமக்கு பொன் பொருள் சேர்க்கை உண்டாகும் என்று சொல்லப்படுகிறது. ஏனெனில் இந்த அம்பிகையின் பெயரை பொன்னுருதி அம்மன் என்பது தான்.

இந்த ஆலயத்தில் உள்ள பைரவரை அஷ்டமி பூஜை செய்யும் பொழுது வியாபாரம் செழிக்கும், எதிரிகள் தொல்லை நீங்கும், குழந்தை வரம் கிடைக்கும், திருமண தடை நீங்கும் என இப்படி பல நன்மைகள் உண்டு. அதுமட்டுமின்றி இந்த கோவிலில் தட்சிணாமூர்த்தி, கன்னி மூலையில் கன்னிமூல விநாயகர், முருகர் வள்ளி தெய்வானையுடன் வீற்றிருக்கிறார். சண்டேஸ்வரர் சனீஸ்வரர் என சகல தெய்வங்களும் ஆலயத்தை சுற்றி வீற்றிருக்கிறார்கள்.

- Advertisement -

ஒவ்வொரு ஆலயத்திற்கு என தனி சிறப்பு உண்டு அந்த வகையில் இந்த ஆலயத்திற்கு உள்ள அம்மனை வழிபாடு செய்வதால் தங்கம் சேரக்கூடிய பலனை பெறலாம் என்பது தான் ஐதீகம். தங்கம் அதிகம் சேர வேண்டும் என நினைப்பவர்கள் இந்த ஆலயத்தின் அன்னை ஒருமுறை வழிபாடு செய்து வாருங்கள். சகல செல்வாக்கியத்துடன் உங்களை வாழ வைப்பார் என்பது உறுதி.

இதையும் படிக்கலாமே: காரிய தடை நீக்கும் பெருமாள் தீபம்

தங்கம் சேர வேண்டும் என்பது இந்த ஆலயத்திற்கு சென்று வந்த உடனே வீட்டில் தங்கம் சேர்த்து விடும் என்பதல்ல, உங்களுடைய பொருளாதார நிலை மேம்பட்டு தங்கம் வாங்குவதற்கான நிலைக்கு உங்களை இந்த அன்னை கொண்டு செல்வார்கள் இதற்கு உங்களின் நம்பிக்கையான முயற்சி உழைப்பு மிகவும் முக்கியம் என்பதை கருத்தில் கொள்ள வேண்டும்.

- Advertisement -